இந்தியர்கள் அனைவருமே மேற்கொள்ள வேண்டிய பிரதான கடமை 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஆத்மௌபம்யேன என்ற சொல் , தன்னுயிரைப் போலவே பிற உயிர்களைப் பற்றி எண்ணுவதைக் குறிக்கிறது . பக்தித்தொண்டு இல்லாமல் , கிருஷ்ண உணர்வைப் பெறாமல் , ஒருவனால் மகிழ்ச்சியடைய முடியாது என்று மிகவும் புத்திசாலித்தனமாக ஒருவனால் முடிவு செய்ய முடியும் . ஆகவே உலக முழுவதிலும் கிருஷ்ண உணர்வைப் பரப்புவதே எல்லா பக்தர்களுக்கும் உள்ள கடமையாகும் . ஏனெனில் கிருஷ்ண உணர்வில்லாத அனைத்து ஜீவன்களும் பௌதிக வாழ்வின் துன்பங்களை அனுபவிக்கின்றனர் . கிருஷ்ண உணர்வைப் பரப்புவதுதான் மிகச் சிறந்த பொதுநலத் தொண்டாகும் . உண்மையில் , ஸ்ரீ சைதன்ய மகாபிரபுவால் இது , பர - உபகார அதாவது உண்மையான பொதுநலத்தொண்டு என்று விவரிக்கப்படுகிறது . இந்த பரோபகாரச் செயலானது , குறிப்பாக இந்தியாவில் மனிதர்களாகப் பிறந்துள்ளவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது . பாரத - பூமிதே ஹைல மனுஷ்ய - ஜன்ம யார ஜன்ம ஸார்தக கரி ’ கர பர - உபாகர ( சை . ச . ஆதி 9.41) கிருஷ்ண உணர்வு இல்லாததால் முழு உலகும் துன்பப்பட்டு...