Skip to main content

Posts

புனித நாமம் மகிமை

 

ஆனந்தம் பரவசம்

 

நிலையான ஆனந்தம்

 

பக்தி தொண்டு

 

பரமபுருஷ பகவானுடைய வல்லமையின் முன் ஒருவரின் பௌதிக பலம் அர்த்தமற்றதாகும்.

தர்ம : க்வசித் தத்ர ந பூத-சௌஹ்ருதம் த்யாக க்வசித் தத்ர ந முக்தி-காரணம் வீர்யம் ந பும்ஸோ 'ஸதி அஜ-வேக-நிஷ்க்ருதம் ந ஹி த்விதீயோ குண-ஸங்க-வர்ஜித : மொழிபெயர்ப்பு ஒருவர் மதத்தைப் பற்றிய முழு அறிவுவை பெற்றிருந்தும், எல்லா ஜீவராசிகளிடமும் அன்புடையவராக இல்லாதிருக்கக்கூடும். மனிதராகவோ, தேவராகவோ உள்ள ஒருவரிடம் துறவு இருக்கக்கூடும் ஆனால் அதுவே முக்திக்குக் காரணமாவது இல்லை. ஒருவர் பெரும் சக்தியைப் பெற்றிருந்தும், அவர் நித்திய காலத்தின் சக்தியைத் தடுக்க இயலாதவராக இருக்கக்கூடும். வேறொருவர் ஜட உலகப்பற்றைத் துறந்தவராக இருக்கக்கூடும் இருப்பினும் அவரை பரமபுருஷ பகவானோடு ஒப்பிட முடியாது. ஆகவே ஜட இயற்கை குணங்களின் ஆதிக்கத்திலிருந்து ஒருவரும் முற்றிலும் விடுபட்டவரல்லர். பொருளுரை இச்சுலோகத்தில் தர்ம : க்வசித் தத்ர ந பூத ஸௌஹ்ருதம் எனும் கூற்று மிகவும் முக்கியமானதாகும். பல இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் மற்றும் பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் ஆகியோர் அவரவர் மத கொள்கைகளை உறுதியாக பின்பற்றினாலும், எல்லா ஜீவராசிகளிடமும் அவர்கள் சமமானவர்களாக இல்லாதிருப்பதை உண்மையாகவே நாம் காண்கின்றோம். உண்மைய...

வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், ஶ்ரீமத் பாகவதம் ஏன், யாருக்காக, எதற்காக ,எழுதப்பட்டது ?

  ஆரம்பத்தில் ஒரே ஒரு வேதம் மட்டும் இருந்தது . அதைப் படிக்க வேண்டிய அவசியமும் இருக்கவில்லை . ஒரு முறை குருவிடம் கேட்ட மாத்திரமே புரிந்துகொள்ளக் கூடிய புத்தி கூர்மையும் நினைவாற்றலும் மக்களுக்கு இருந்தன . முழுக் கருத்தையும் நொடியில் புரிந்து கொள்வார்கள் . ஆனால் 5,000 ஆண்டுகட்கு முன்னர் , கலியுக மக்களின் வசதிக்காக வியாசதேவர் வேதங்களை எழுத்தில் வடித்தார் . நாளடைவில் மக்களின் வாழ்நாள் குன்றி , நினைவாற்றல் குறைந்து , புத்தி மழுங்கிப் போய் விடுமென்பதை அறிந்திருந்த வியாசர் வேத ஞானத்தை எழுத்தில் வடித்துவிடுவது நல்லதென்று எண்ணினார் . அவர் வேதங்களை நான்காகப் பிரித்தார் : ரிக் , சாம , யஜுர் , அதர்வ , பின்னர் இந்த வேதங்களைத் தனது பல்வேறு சீடர்களிடம் ஒப்படைத்தார் . பிறகு , புத்தியில் குறைந்தவர்களான ஸ்த்ரி , சூத்திரர் , த்விஜ - பந்து ஆகியோரைப் பற்றி எண்ணினார் . பெண்கள் , தொழிலாளிகளான சூத்திரர்கள் , உயர் குடியில் பிறந்தும் உரிய தகுதிகளைப் பெறாத த்விஜ - பந்துக்களையும் பற்றி அவர் எண்ணினார் . பிராமண குலத்தில் பிறந்தும் பிராமணர்...

சாதுக்களை வீட்டில், வரவேற்று உபசரிக்கும் வழிமுறைகள்

 பதம் 10 அதனா அபி தே தன்யா: ஸாதவோ க்ருஹ - மேதின: யத் க்ருஹா ஹி அர்ஹ - வர்யாம்பு - த்ருண - பூமீஸ்வரா வரா: மொழிபெயர்ப்பு குடும்ப வாழ்க்கையில் பற்றுடையவன், பெரிய செல்வந்தனாக இல்லாது இருந்தபோதும் அவனது இல்லத்திற்கு தெய்வீக அருளாளர்கள் விஜயம் செய்தால் அவன் மிகவும் பெருமையுடையவனாகிறான். அவ்வருளாளர்களுக்கு நீரும், அமர்வதற்கான ஆசனமும், உபசாரப் பொருட்களும் வழங்கும் அந்த வீட்டின் எஜமானனும் பணியாட்களும் பெருமையடைகின்றனர். ஏன் அவனது இல்லமே பெருமையடைகின்றது. பொருளுரை இந்த உலகத்தில் ஒருவனிடம் பணம் இல்லையென்றால் அவன் பெருமையடைவது இல்லை, இல்லற வாழ்வில் மிகவும் ஈடுபாடுடைய ஒருவனுக்கு ஆன்மீக உலகில் பெருமைகள் இல்லை. ஆனால் பௌதீக அருளாளர்கள் ஓர் ஏழையின் குடிசைக்கோ அல்லது இல்லறத்தில் அதிக ஈடுபாடுடையவனிடமோ வருகை தருவதற்குத் தயாராகவே இருக்கின்றார்கள். இவ்வாறு நேரும் பொழுது அவ்வீட்டின் எஜமானும் அவனது பணியாட்களும் அப்பெரியவர்களின் பாதங்களைச் சுத்தம் செய்வதற்குத் தண்ணீரும் அமர்வதற்கு இருக்கைகளும் தந்து உபசரிப்பதினால் அவர்களும் பெருமை பெறுகின்றனர். முடிவாக நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால் ஒரு சாதாரண மனிதன் கூ...