Skip to main content

Posts

சிரஞ்சீவி என்றால் என்ன ?

ஸ்வர்கலோக வாசிகள் மனிதர்களைவிட மிக மிக நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பதால் , அவர்கள் “ அமரர்கள் ,” அல்லது மரணமற்றவர்கள் என்று அழைக்கப்படுகின்றனர் . நூறு ஆண்டுகளை மட்டுமே அதிகபட்ச ஆயுளாகக் கொண்டுள்ள ஒரு மனிதனுக்கு , கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு நீடிக்கும் ஆயுள் மரணமற்றதாகவே காணப்படும் . உதாரணமாக , பிரம்மலோகத்தில் 43,20,000 x 1000 சூரிய ஆண்டுகள் ஒரு பகல் என்று கணக்கிடப்படுவதை நாம் பகவத் கீதையிலிருந்து அறிகிறோம் . அதைப் போலவே மற்ற ஸ்வர்க லோகங்களில் ஒரு நாள் இந்த பூமியில் ஆறு மாதங்களென கணக்கிடப்படுகிறது . அங்குள்ள வாசிகள் அவர்களது கணக்குப்படி ஒரு கோடி ஆண்டுகள் வாழ்கின்றனர் . எனவே , ஜடப் பிரபஞ்சத்திலுள்ள ஒருவரும் உண்மையில் சிரஞ்சீவியல்ல என்றபோதிலும் , எல்லா உயர்கிரகங்களிலும் வாழ்பவர்களின் ஆயுள் மனிதர்களின் ஆயுளைவிட மிக மிக அதிகம் என்பதால் , கற்பனையால் அவர்கள் சிரஞ்சீவிகள் என்று அழைக்கப்படுகின்றனர் .   (ஶ்ரீமத் பாகவதம் 1.17.15 / பொருளுரை)   🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்...

தாமோதர லீலை

  தாய் யசோதை ஸ்ரீ கிருஷ்ணரை உரலில் கட்டுதல் (ஆதாரம்   ; - ஸ்ரீமத் - பாகவதம் / பத்தாம் - காண்டம் / அத்தியாயம் 9.) ***********************************************   ஒருநாள் , வேலைக்காரிகள் மற்ற வேலைகளில் ஈடுபட்டிருந்ததால் , தாய் யசோதை தானே தயிரைக் கடைவதில் ஈடுபட்டிருந்தாள் . இதற்கிடையில் கிருஷ்ணர் வந்து தமக்குப் பால் வேண்டுமென்று கேட்க , தாய் யசோதையும் உடனே அவருக்குத் தன் முலைப் பாலை ஊட்டினாள் . இவ்வாறு கிருஷ்ணருக்குப் பாலூட்டிக் கொண்டிருந்தபொழுது , அடுப்பில் பால் பொங்கிவழிவதைக் கண்ட யசோதை , குழந்தைக்குப் பாலூட்டுவதை உடனே நிறுத்திவிட்டு அடுப்படிக்குச் சென்றாள் . தாய்ப்பலைக் குடிப்பதில இடையூறு ஏற்பட்டதால் , கடுங்ககோபமடைந்த கிருஷ்ணர் , ஒரு கல்லை எடுத்து தயிர்ச் சட்டியை உடைத்து விட்டு , ஓர் அறைக்குள் புகுந்தார் . அங்கிருந்த புதிதாகக் கடைந்தெடுத்த வெண்ணையை எடுத்து சாப்பிடத் துவங்கினார் . அடுபப்படியிலிருந்து திரும்பிய தாய் யசோதை தயிர்ச்சட்டி உடைந்துகிடப்பதைக் கண்டு , இது கிருஷ்ணரின் வேலையாகத்தான் இருக்கும் என்ற...