Skip to main content

Posts

பகவானின் அவதார நோக்கம்

யதா ஹி அதர்மேண தமோ-தியோ ந்ருபா ஜீவந்தி தத்ரைஷ ஹி ஸத்வத: கில தத்தே பகம் ஸத்யம் ருதம் தயாம் யசோ பவாய ரூபாணி ததத் யுகே யுகே மொழிபெயர்ப்பு எப்போதெல்லாம் அரசர்களும், நிர்வாகிகளும் மிருகங்களைப் போல் மிகத்தாழ்ந்த குணங்களில் வாழ்கிறார்களோ, அப்போது உன்னத உருவிலுள்ள பகவான் அவரது பரம சக்தியை, வெளிப்படுத்துகிறார். மேலும் பக்தியுள்ளவர்களுக்கு விசேஷ கருணையைக்காட்டும் அவர், அற்புதச் செயல்களை நிகழ்த்துவதுடன், வேறுபட்ட காலங்களுக்கும், யுகங்களுக்கும் தேவையான அதே திவ்ய ரூபங்களையும் தோற்றுவிக்கிறார். பொருளுரை மேலே குறிப்பிட்டதுபோல், பிரபஞ்ச படைப்பு பகவானின் சொத்தாகும். இதுவே ஈசோபநிஷத்தின் அடிப்படைத் தத்துவமாகும். அனைத்தும் பரம புருஷரின் சொத்தாகும். எனவே ஒருவரும் அவருடைய சொத்தை ஆக்கிரமிக்கக் கூடாது. அன்புடன் அவரால் அளிக்கப்பட்டதை மட்டுமே ஒருவன் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே, பூமியோ அல்லது வேறெந்த கிரகமோ அல்லது பிரபஞ்சமோ பகவானின் பூரண சொத்தாகும். ஜீவராசிகள் அவரது அங்க உறுப்புகளாக, அல்லது மகன்களாக உள்ளனர். இதனால் ஒவ்வொருவரும் அவரது நியமிக்கப்பட்ட செயலை நிறைவேற்றுவதற்கும், பகவானின் கருணையைப் பெற்று வாழ்வதற்கும்...

துஷ்பிரயோகம் செய்யாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

புலன் நுகர்வுக்காக பணத்திடம் நாம் பற்றுக் கொண்டுவிடக் கூடாது ; ஒவ்வொரு காசையும்   கிருஷ்ண பக்தி இயக்கத்தைப் பரப்புவதற்காகவே செலவிட வேண்டும் , புலன் நுகர்வுக்காக அல்ல .  பிரச்சாரம் செய்யும் ஒரு பக்தன் பெரிய அளவிலான பணத்தைப் பெறும் பொழுது , அவனுக்கு ஆபத்து காத்திருக்கிறது . ஏனெனில் அர்பணத்தில் ஒரே ஒரு காசைக்கூட தன் சொந்த புலன் நுகர்வுக்காக அவன் செலவு செய்த உடனேயே , வீழ்ச்சியடைந்தவனாகிறான் . கிருஷ்ண பக்தி இயக்கத்தைச் சேர்ந்த பிரச்சாரகர்கள் , இந்த இயக்கத்தைப் பரப்புவதற்குத் தேவைப்படும் பெரிய அளவிலான பணத்தை துஷ்பிரயோகம் செய்யாதபடி மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் . இந்த பணம் நம் துன்பத்திற்குக் காரணமாகி விடாதபடி நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் ; இதை கிருஷ்ணருக்காக உபயோகிக்க வேண்டும் . அதுவே நமது நித்தியமான மகிழ்ச்சிக்குக் காரணமாக இருக்கும் . பணம் நாராயணரின் நாயகியான லக்ஷ்மிதேவி ஆவாள் . லக்ஷ்மிதேவி எப்பொழுதும் நாராயணருடன்தான் இருக்க வேண்டும் . அப்பொழுது இழிவடையும் பயத்திற்கு அவசியம் இருக்காது . ஶ்ரீ...

ஹம்பி — ஹனுமானின் பிறப்பிடம்

  வழங்கியவர் : ஜீவன கௌர ஹரி தாஸ் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள பெல்லாரி   மாவட்டத்தில் இயற்கை எழில் நிறைந்த துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்திருப்பதே ஹம்பி என்னும் திருத்தலம் . இந்த வனம் வானரப் படைகளின் வசிப்பிடமாகத் திகழ்ந்ததால் கிஷ்கிந்தா க்ஷேத்திரம் என்றும் , பார்வதிதேவி கடுந்தவம் புரிந்ததால் பம்பா தீர்த்தம் என்றும் அறியப்படுகிறது . ஹனுமானின்   பிறப்பிடமான இவ்விடத்திற்கு ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு ,  நித்யானந்த பிரபு , பலராமர் ஆகியோரும் வருகை புரிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .   கிஷ்கிந்தா க்ஷேத்திரம்   ஹம்பி நகரமானது விஜயநகர பேரரசின் தலைநகரமாகத் திகழ்ந்தது . இன்று இந்நகரம் பாரம்பரிய கட்டிடக் கலை , நினைவுச் சின்னங்கள் , குகைகள் , கற்கோயில்கள் , பசுமையான வளம் , நீரோடை என பலவற்றிற்கும் புகழ் பெற்றுள்ளது . புராண காலத்தில் தற்போதைய மஹாராஷ்டிர மாநிலத்திலுள்ள நாசிக் ( பஞ்சவடி ) பகுதியிலிருந்து ஹனுமான் அவதரித்த ஹம்பி வரை கிஷ்கிந்தையாக அறியப்பட்டது . பகவான் இராமசந்திரர் கிஷ்கிந்தையில்...