Skip to main content

Posts

பண்டிதரும் குதிரைக்காரனும்

ஒரு ஊரில் மிகவும் புகழ்பெற்ற பண்டிதர் இருந்தார். பாரம்பரியமான குடும்பத்தில் பிறந்தவர் , அனைத்தும் கற்றவர் மற்றும்  புகழ்வாய்ந்தவரும் ஆவார். பக்கத்து ஊரில் அவரை உபன்யாசத்திற்காக அழைத்திருந்தார்கள். ஊர் முழுவதும் விளம்பரம் செய்ய பட்டு பல ஆயிரம் பேரை அழைத்திருந்தார்கள். பண்டிதரை அழைத்து  வர ஒரு குதிரைக்காரனை அனுப்பி வைத்தனர். அன்று அந்த ஊரில் பயங்கர மழை. உபன்யாசத்திற்கு அழைக்கப்பட்டிருந்தவர்கள் பெரும்பாலோர் வரவில்லை. வந்தவர்கள் இந்த மழையில் பண்டிதர் வரவே முடியாது என்றெண்ணி வீடு திரும்பினார். பண்டிதர் வந்தபோது அங்கே யாருமே இல்லை. உபன்யாசத்திற்காக வெகு தூரத்தில் இருந்து வந்த பண்டிதர்கோ ஏமாற்றம். இருக்கின்ற ஒரு குதிரைக்காரனுக்காக மட்டும் பிரசங்கம் பண்ணவும் மனசில்லை. ‘என்னப்பா பண்ணலாம்?’னு குதிரைக்காரனிடம் கேட்டார். ‘அய்யா! நான் குதிரைக் காரன்… எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க. ஆனா ஒண்ணே ஒண்ணு தெரியுங்க… நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போறப்போ எல்லாக் குதிரையும் வெளியே போயி, அங்கே ஒரே ஒரு குதிரை மட்டும்தான் இருக்குதுனு வெச்சுக்கோங்க. நான் அந்த ஒரு குதிரைக்குத் தேவையான புல்...

ஹரி நாம ஜபம்

 

ஹரி நாம ஜபம்

 

கிருஷ்ணரின் கருணை

 

கிருஷ்ணரின் கருணை

 

பகவானின் அவதார நோக்கம்

யதா ஹி அதர்மேண தமோ-தியோ ந்ருபா ஜீவந்தி தத்ரைஷ ஹி ஸத்வத: கில தத்தே பகம் ஸத்யம் ருதம் தயாம் யசோ பவாய ரூபாணி ததத் யுகே யுகே மொழிபெயர்ப்பு எப்போதெல்லாம் அரசர்களும், நிர்வாகிகளும் மிருகங்களைப் போல் மிகத்தாழ்ந்த குணங்களில் வாழ்கிறார்களோ, அப்போது உன்னத உருவிலுள்ள பகவான் அவரது பரம சக்தியை, வெளிப்படுத்துகிறார். மேலும் பக்தியுள்ளவர்களுக்கு விசேஷ கருணையைக்காட்டும் அவர், அற்புதச் செயல்களை நிகழ்த்துவதுடன், வேறுபட்ட காலங்களுக்கும், யுகங்களுக்கும் தேவையான அதே திவ்ய ரூபங்களையும் தோற்றுவிக்கிறார். பொருளுரை மேலே குறிப்பிட்டதுபோல், பிரபஞ்ச படைப்பு பகவானின் சொத்தாகும். இதுவே ஈசோபநிஷத்தின் அடிப்படைத் தத்துவமாகும். அனைத்தும் பரம புருஷரின் சொத்தாகும். எனவே ஒருவரும் அவருடைய சொத்தை ஆக்கிரமிக்கக் கூடாது. அன்புடன் அவரால் அளிக்கப்பட்டதை மட்டுமே ஒருவன் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே, பூமியோ அல்லது வேறெந்த கிரகமோ அல்லது பிரபஞ்சமோ பகவானின் பூரண சொத்தாகும். ஜீவராசிகள் அவரது அங்க உறுப்புகளாக, அல்லது மகன்களாக உள்ளனர். இதனால் ஒவ்வொருவரும் அவரது நியமிக்கப்பட்ட செயலை நிறைவேற்றுவதற்கும், பகவானின் கருணையைப் பெற்று வாழ்வதற்கும்...

துஷ்பிரயோகம் செய்யாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

புலன் நுகர்வுக்காக பணத்திடம் நாம் பற்றுக் கொண்டுவிடக் கூடாது ; ஒவ்வொரு காசையும்   கிருஷ்ண பக்தி இயக்கத்தைப் பரப்புவதற்காகவே செலவிட வேண்டும் , புலன் நுகர்வுக்காக அல்ல .  பிரச்சாரம் செய்யும் ஒரு பக்தன் பெரிய அளவிலான பணத்தைப் பெறும் பொழுது , அவனுக்கு ஆபத்து காத்திருக்கிறது . ஏனெனில் அர்பணத்தில் ஒரே ஒரு காசைக்கூட தன் சொந்த புலன் நுகர்வுக்காக அவன் செலவு செய்த உடனேயே , வீழ்ச்சியடைந்தவனாகிறான் . கிருஷ்ண பக்தி இயக்கத்தைச் சேர்ந்த பிரச்சாரகர்கள் , இந்த இயக்கத்தைப் பரப்புவதற்குத் தேவைப்படும் பெரிய அளவிலான பணத்தை துஷ்பிரயோகம் செய்யாதபடி மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் . இந்த பணம் நம் துன்பத்திற்குக் காரணமாகி விடாதபடி நாம் பார்த்துக் கொள்ள வேண்டும் ; இதை கிருஷ்ணருக்காக உபயோகிக்க வேண்டும் . அதுவே நமது நித்தியமான மகிழ்ச்சிக்குக் காரணமாக இருக்கும் . பணம் நாராயணரின் நாயகியான லக்ஷ்மிதேவி ஆவாள் . லக்ஷ்மிதேவி எப்பொழுதும் நாராயணருடன்தான் இருக்க வேண்டும் . அப்பொழுது இழிவடையும் பயத்திற்கு அவசியம் இருக்காது . ஶ்ரீ...