பிபந்தி யே பகவத ஆத்மன : ஸதாம் கதாம்ருதம் ஸ்ரவண - பூதேஷு ஸம்ப்ருதம் புனந்தி தே விஷய - விதூஷிதாசயம் வ்ரஜந்தி தச் - சரண - ஸரோருஹாந்திகம் மொழிபெயர்ப்பு பக்தர்களின் அன்புக்குரியவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அமிர்கம் போன்ற கதைகளை செவிகள் மூலமாக அருந்துபவர்கள் , ஜட இன்பமெனும் களங்கப்பட்ட வாழ்வின் நோக்கத்தை புனிதப் படுத்தி , பரமபதத்தை , அவரது ( முழுமுதற் கடவுள் ) தாமரைப் பாதங்களைச் சென்றடைகின்றனர் . பொருளுரை ஜட வசதிகளை அனுபவிக்க வேண்டுமென்ற கறைபடிந்த நோக்கமே மனித சமூகத்தின் துன்பங்களுக்குக் காரணம் . புலன் நுகர்வுக்காக ஜட வசதிகளைச் சுரண்டுவதில் மனித சமூகம் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக ஈடுபடுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக பகவானின் மாயையான , ஜடச் சக்தியில் அது சிக்கிக் கொள்கிறது . இவ்வாறாக உலகின் துன்பம் குறைக்கப் படுவதற்கு பதிலாக தீவிரமாக்கப்படுகிறது . உணவு தானியங்கள் , பால் , பழம் , மரம் , கல் , சர்க்கரை , பட்டு நூல் , இரத்தினங்கள் , பருத்தி , உப்பு , நீர் மற்றும் காய்கறிகள் போன்றவைகளின் உருவில் மனிதனின் அன்றாடத்...