Skip to main content

Posts

வேத விதிகளுக்கேற்பவே செயற்பட வேண்டியவர் யார் ?

தாவத் கர்மாணி குர்வீத ந நிர்வித்யேத யாவதா மத்-கதா-ஸ்ரவணாதௌ வா ஸ்ரத்தா யாவன் ந ஜாயதே மொழிபெயர்ப்பு எதுவரையில் கர்மத்தில் திருப்தியடையவில்லையோ, எதுவரையில் என் கதை முதலியவற்றைக் கொண்ட பக்தித்தொண்டில் சிரத்தை உண்டாகவில்லையோ அதுவரையில் ஒருவன் வேத விதிகளுக்கேற்பவே செயற்பட வேண்டும். பொருளுரை தூய பக்தர்களுடன் சகவாசம் கொண்டு பகவத் தொண்டில் முழு நேர ஈடுபாடு கொள்வதன் மூலம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் திட நம்பிக்கையை வளர்த்துக் கொண்டிருந்தாலொழிய ஒருவன் சாதாரண வேதக் கோட்பாடுகளையும், கடமைகளையும் அலட்சியப்படுத்தக் கூடாது. இதை பகவானே பின்வருமாறு குறிப்பிடுகிறார். ஸ்ருதி-ஸ்ம்ருதி மமைவாக்ஞே யஸ் தே உல்லங்ய வர்ததே ஆக்ஞா-ச்சேதீ மம த்வேஷீ மத்-பக்தோ ’பி ந வைஷ்ணவ: “சுருதி மற்றும் ஸ்மிருதி சாஸ்திரங்கள் எனது கட்டளைகள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இக்கட்டளைகளை மீறுபவன் எனது விருப்பத்தை மீறி என்னை எதிர்ப்பவனாகிறான் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இத்தகைய ஒருவன் தன்னை எனது பக்தன் என்று கூறிக்கொண்டாலும், உண்மையில் அவன் ஒரு வைஷ்ணவனல்ல.” பகவானைப் பற்றிக் கேட்பதிலும், பாடுவதிலும் திட நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளாத...

பகவானின் அன்புத் தொண்டில் உபயோகிக்கப்படுகின்ற பொருட்கள் ஆன்மீகமானவையாகும்

  எதை ஒருவன் சுயப் புலன் நுகர்வுக்கு உபயோகிக்க எண்ணுகிறானோ அதுவே ஜட சொத்து எனப்படுகிறது. ஆனால் பகவானின் அன்புத் தொண்டில் உபயோகிக்கப்படுகின்ற பொருட்கள் ஆன்மீகமானவையாகும். ஒருவன் தன் ஜட சொத்துக்களையெல்லாம் பகவத் தொண்டில் முழுமையாக உபயோகிப்பதன் மூலம் அவற்றிடமுள்ள பற்றை விட வேண்டும். சொகுசான ஒரு மாளிகையைப் பெற்றிருப்பவன் அதில் பகவானின் திருவிக்கிரகத்தை ஸ்தாபித்து, கிருஷ்ண உணர்வைப் பரப்ப அடிக்கடி பிரார்த்தனை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அதுபோலவே, பகவானுக்கு ஆலயம் கட்டவும், பரமபுருஷரைப் பற்றி விளக்கும் விஞ்ஞானப்பூர்வமான இலட்சியங்களை அச்சிடவும் செல்வம் உபயோகிக்கப்பட வேண்டும். தன் சொத்துக்களை பகவத் தொண்டில் உபயோகிக்காமல் குருட்டுத்தனமாக அவற்றைத் துறப்பவன், அனைத்தும் பரமபுருஷருக்குச் சொந்தம் என்பதைப் புரிந்து கொள்ளாதவனாவான். இத்தகைய குருட்டுத்தனமான துறவு, “இந்த சொத்து என்னுடையதாக இருக்கலாம், ஆனால் இது எனக்கு வேண்டாம்” என்ற பௌதிக எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். உண்மையில் அனைத்தும் பகவானுக்குச் சொந்தமானதே; இதை அறிந்துள்ள ஒருவன் இவ்வுலகிலுள்ள பொருட்களை அனுபவிக்கவோ அல்லது விலக்கவோ முயல்வதில...

பரம ஏகாதசி

புருஷோத்தம அதிக மாதத்தின் தேய்பிறையில் தோன்றக்கூடிய பரம ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பகவான் கிருஷ்ணர் மகாராஜா யுதிஸ்டிரருக்கு விளக்கிக் கூறினார். மகாராஜா யுதிஸ்டிரர் வினவினார். ஓ! எனது பகவானே, புருஷோத்தம அதிக மாதத்தில் தேய்பிறையில் தோன்றக் கூடிய ஏகாதசியின் பெயரையும் அதை கடைபிடிக்கும் முறையினைப் பற்றியும் எனக்குக் கூறுங்கள். பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார், ஓ! மன்னா! இந்த ஏகாதசியின் பெயர் பரம ஏகாதசி இந்த மங்களகரமான ஏகாதசி ஒருவரின் பாவ விளைவுகள் அனைத்தையும் அழித்துவிடும் மற்றும் ஒருவருக்கு ஜட இன்பத்துடன் முத்தியையும் கொடுக்கும். ஏற்கனவே நான் உன்னிடம் விளக்கியுள்ளபடியே இந்த ஏகாதசியையும் அனுஷ்டிக்க வேண்டும். அனைத்து இருப்புகளுக்கும் ஆதாரமான முழு முதற்கடவுளை பூஜிக்க வேண்டும். கம்பில்ய நகரத்தில் முனிவர்கள் கூறிய ஒரு சுவாரஸ்யமான கதையை கூறுகிறேன் கேள். கம்பில்ய நகரில் தெய்வ பக்தி மிகுந்த ஒரு அந்தணர் வசித்து வந்தார். அவர் பெயர் சுமேதா, அவருக்கு பவித்ரா என்று ஒரு கற்புள்ள மனைவி இருந்தாள். ஆனால் சில பாவவிளைவுகளால் அந்த அந்தணர் மிகவும் ஏழையானார். பிச்சை எடுத்தும் வாழ்க்கை நடத்த முடியவில்லை. அவருக்கு...

பகவானின் உடமையை துஷ்பிரயோகம் செய்யும் அதே சமயம் தன்னுணர்விலும் முன்னேறுவது சாத்தியமில்லை.

  இருப்பவை அனைத்தும் பரமபுருஷரின் சக்தியும், உடமையும் ஆகும். அனைத்தும் அவரது அன்புத் தொண்டில் உபயோகிக்கப்படவேண்டியவையே. ஜடப் பொருட்களை பகவானிலிருந்து வேறுபட்டவையாகப் பார்த்து, தன்னால் அவை அனுபவிக்கப்பட வேண்டியவை என்று எண்ணுவது பிரமையாகிய ஜட இருமை (வைகல்பிகம் ப்ரமம்) எனப்படுகிறது. உணவு, உடை, வசிப்பிடம், அல்லது வாகனம் போன்ற புலன் நுகர்ப் பொருட்களைத் தேர்ந்தெடுக்கும் போது, அவற்றின் நன்மை தீமைகளை ஒருவன் கருத்திற்கொள்கிறான். இதன் விளைவாக ஜட வாழ்வில் ஒருவன் சொந்த சுகத்திற்காக மிகச் சிறந்த புலன் நுகர்ப் பொருளைப் பெற முயல்வதில் இடைவிடாத கவலைக்கு உள்ளாகிறான். ஆனால் அனைத்தும் பகவானின் உடமை என்பதை ஒருவன் உணர்வானாயின், அனைத்தும் பகவானின் திருப்திக்காகவே உள்ளன என்பதைக் காண்பான். அவனுக்குச் சொந்த கவலை எதுவும் இருக்காது. ஏனெனில் பகவானின் அன்புத் தொண்டில் ஈடுபடுவதிலேயே அவன் முழு திருப்தியடைகிறான். பகவானின் உடமையை துஷ்பிரயோகம் செய்யும் அதே சமயம் தன்னுணர்விலும் முன்னேறுவது சாத்தியமில்லை. ( ஶ்ரீமத் பாகவதம் / 11.22.57  / பொருளுரை  வழங்கியவர்:    ஶ்ரீல பிரபுபாதர்    ) 🍁🍁...

எளிய வாழ்வினாலும், உயர்ந்த சிந்தனை

  பிபந்தி யே பகவத ஆத்மன : ஸதாம் கதாம்ருதம் ஸ்ரவண - பூதேஷு ஸம்ப்ருதம் புனந்தி தே விஷய - விதூஷிதாசயம் வ்ரஜந்தி தச் - சரண - ஸரோருஹாந்திகம் மொழிபெயர்ப்பு பக்தர்களின் அன்புக்குரியவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அமிர்கம் போன்ற கதைகளை செவிகள் மூலமாக அருந்துபவர்கள் , ஜட இன்பமெனும் களங்கப்பட்ட வாழ்வின் நோக்கத்தை புனிதப் படுத்தி , பரமபதத்தை , அவரது ( முழுமுதற் கடவுள் ) தாமரைப் பாதங்களைச் சென்றடைகின்றனர் . பொருளுரை ஜட வசதிகளை அனுபவிக்க வேண்டுமென்ற கறைபடிந்த நோக்கமே மனித சமூகத்தின் துன்பங்களுக்குக் காரணம் . புலன் நுகர்வுக்காக ஜட வசதிகளைச் சுரண்டுவதில் மனித சமூகம் எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக ஈடுபடுகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அதிகமாக பகவானின் மாயையான , ஜடச் சக்தியில் அது சிக்கிக் கொள்கிறது . இவ்வாறாக உலகின் துன்பம் குறைக்கப் படுவதற்கு பதிலாக தீவிரமாக்கப்படுகிறது . உணவு தானியங்கள் , பால் , பழம் , மரம் , கல் , சர்க்கரை , பட்டு நூல் , இரத்தினங்கள் , பருத்தி , உப்பு , நீர் மற்றும் காய்கறிகள் போன்றவைகளின் உருவில் மனிதனின் அன்றாடத்...