Skip to main content

Posts

ஸ்ரீமதி ராதாராணியின் கருணை

பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவரது தூய பக்தர்களின் உடைமையாவார். இதன் விளைவாக பக்தர்களால் மட்டுமே மற்றொரு பக்தனுக்கு கிருஷ்ணரை வழங்க முடியும்; கிருஷ்ணரை நேரடியாக அடையவே முடியாது. எனவே பகவான் சைதன்யர் தம்மை, “பிருந்தாவனத்து கோபியர்களை பரிபாலித்து வருபவரான பகவானின் தொண்டர்களிடம் மிகவும் கீழ்ப்படிந்துள்ள தொண்டன்” (கோபீ-பர்து: பத-கமலயோர் தாஸ-தாஸானுதாஸ:) என்று கூறிக் கொண்டார். ஆகவே தூய பக்தன் பகவானை நேரடியாக அணுக முயலாமல், பகவானின் தொண்டர்களுக்கும் தொண்டனை திருப்திப் படுத்த முயல்கிறான். இதனால் பகவான் திருப்தியடைகிறார். அதன் பிறகு மட்டுமே பகவானின் தாமரைப் பாதங்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் தூளசி இலைகளின் சுவையை பக்தனால் அனுபவிக்க முடியும். பிரம்ம-சம்ஹிதையில், வேத இலக்கியங்களில் பெரும் பண்டிதர்களால் மட்டும் பகவானைக் கண்டுவிட முடியாது என்றும், அவரது தூய பக்தர்களின் மூலமாக மட்டுமே மிகச் சுலபமாக அவரை அணுக முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது. பிருந்தாவனத்தில் தூய பக்தர்கள் எல்லோரும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் இன்பச் சக்தியாகிய ஸ்ரீமதி ராதாராணியின் கருணையை வேண்டி பிரார்த்திக்கின்றனர். ஸ்ரீமதி ராதாராணி, பௌதிக பெண்ம...

துங்கவித்யா தேவி

  துங்கவித்யா தேவி ஸ்ரீமதி ராதாராணியின் மிகவும் நெருங்கிய தோழிகள் பல ஆயிரம் கோபியர்களில் பதினாறாயிரம் பேர் முதன்மையானவர்கள் என்றும், அவர்களில் 108 கோபியர்கள் மிக நெருக்கமானவர்கள் என்றும், 8 பேர் இன்னும் முக்கியமானவர்கள் என்றும் புராணங்கள் கூறுகின்றன. ஸ்ரீராதையும் சந்திராவல்லியும் அவர்களில் மிகவும் முக்கியமானவர்கள். ஸ்ரீராதையோ அனைவரிலும் மிகவும் முக்கியமானவர். ஏனென்றால், பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை கவரும் அத்தனை வசீகரமும், இனிமையும் ஸ்ரீ ராதைக்கு மட்டுமே உண்டு. ஸ்ரீ ராதாராணியை விட துங்கவித்யா தேவி 15 நாட்கள் இளையவர். துங்கவித்யா தேவி குங்கும நிறத்தையும், கற்பூரம் கலந்த சந்தன நறுமணத்தையும் உடையவர். மேலும் வெண்மை நிற ஆடைகளை அவர் மிகவும் விரும்பி அணிகிறார். துங்கவித்யா தேவி கொஞ்சம் முன்-கோபம் கொள்ளும் குணம் உடையவர். ரச-சாஸ்திரம், நிதி- சாஸ்திரம், நடனம், நாடகம், இலக்கியம் மற்றும் 18 புராணங்களையும் கற்றுத் தேர்ந்தவர். பாடுவதிலும் வீணை வாசிப்பதிலும், அதை பிறருக்கு கற்றுத்தருவதிலும் துங்கவித்யா தேவி மிகவும் நிபுணத்துவம் கொண்டவளாவர். தன்னுடைய இசையினால் ஶ்ரீ ராதா கிருஷ்ண திவ்ய தம்பதிகளை மகிழ்விப்ப...

ஹரி நாமாம்ருதம்

  ஏதன் நிர்வித்யமானானாம் இச்சதாம் அகுதோ - பயம் யோகினாம் ன்ரூப நிர்ணீதம் ஹரேர் நாமானுகீர்தனம் மொழிபெயர்ப்பு மகாராஜனே , பெரும் அதிகாரிகள் பகவானின் புனித நாமங்களை இடைவிடாமல் பாடியவண்ணமாக இருக்கின்றனர் . அவர்களின் வழியைப் பின்பற்றுவதே சந்தேகமும் , பயமும் அற்றதும் , அனைவருக்கும் வெற்றி அளிக்கக் கூடியதுமான வழியாகும் . இவ்வழி , அனைத்து ஜட ஆசைகளிலிருந்து விடுபட்டவர்களுக்கும் , ஜட இன்பங்கள் அனைத்தையும் அனுபவிக்க விரும்புபவர்களுக்கும் , மற்றும் உன்னத அறிவின் பயனாக சுய திருப்தி அடைந்துள்ளவர்களுக்கும் ஏற்றதாகும் . பொருளுரை முகுந்தன் மீதுள்ள பற்றை அடையவேண்டியதன் அவசியம் முந்திய பதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது . பல்வேறு மனிதர்கள் வெவ்வேறு வகையான தொழில்களில் வெற்றி பெற விரும்புகின்றனர் . பௌதிக வாதிகள் பொதுவாக ஜட இன்பங்களை முழுமையாக அனுபவிக்க விரும்புகின்றனர் . அவர்களை அடுத்துள்ளவர்கள் ஆன்மீகிகள் எனப்படுகின்றனர் . இவர்கள் பௌதிக இன்பத்தின் தன்மையைப் பற்றிய முழு அறிவைப் பெற்றிருப்பதால் , இத்தகைய மாயைக்குட்பட்டுள்ள வாழ்வ...