Skip to main content

Posts

பயம்

 

பயம்

 

அச்சம் தவிர்

பகவத்கீதைக் கூறுகிறது: ஆன்மீக வளர்ச்சியடைய விரும்பும் ஒருவன் முதலில் அச்சத்தை விட வேண்டும். “அபயம் ஸத்த்வ ஸம்ஸீத்தி:” (ப.கீ.16.1) பௌதீக ஈடுபாட்டினாலேயே அச்சம் உண்டாகிறது. இதனை ஸ்ரீமத் பாகவதமும் (11.2.37) குறிப்பிடுகின்றது: “பயம்த்விதீயாபினி வேஸத: ஸ்யாத்:” உடலியற் கருத்துடைய வாழ்க்கையே அச்சத்தினை உருவாக்குகின்றது. ஒருவன் தன்னை இழந்த ஜடவுடல் என்று நினைக்கும்வரை அவனுக்கு அச்சம் என்பது இருக்கும், இச் ஜடக்கருத்தினின்று ஒருவன் வெளிவரும் பொழுது அவன் பிரம்மபூத அல்லது தன்னுணர்வு பெற்றவனாகிறான் உடனடியாக அவன் அச்சமற்றவனாகிறான். ப்ரஹ்ம பூத: ப்ரஸன்னாத்மா (ப.கீ.18.54) அச்சமுடையோன் ஆனந்தம் அடைவதில்லை. பக்தர்கள் அச்சமில்லாதவர்கள். அவர்கள் எப்பொழுதும் ஆனந்த முடையோராயிருக்கின்றனர். ஏனென்றால் அவர்கள் பகவானின் தாமரைத் திருவடிகளிடத்துத் தொடர்ந்து பக்தித் தொண்டில் ஈடுபடுவதே காரணமாகும். இது மேலும் கூறப்படுகிறது: ஏவம் ப்ரஸன்ன - மனஸோ பகவத் - பக்தி - யோகத: பகவத் - தத்த்வ - விஞ்ஞானம் முக்த - ஸங்கஸ்ய ஜாயதே (பாக.1.2.20) பகவத் பக்தி யோகத்தினைப் பயிற்சி செய்வதின் மூலம் ஒருவன் அச்சமற்றவனாகவும் ஆனந்தமுடையவனாகவும் ஆகிற...

நாம் செய்யும் செயல் நம்மை அடுத்த நிலைக்கு உயர்த்த வேண்டும் அப்படி உயர்த்தவில்லை எனில் ..

நேஹ யத்கர்ம தர்மாய ந விராகாய கல்பதே ந தீர்த்தபதஸேவாயை ஜீவந்நபி ம்ருதோ ஹி ஸ: மொழிபெயர்ப்பு யாருடைய பணி மத வாழ்வுக்கு அவனை உயர்த்தவில்லையோ, யாருடைய மதச் சடங்குகள் அவனைத் துறவுக்கு உயர்த்தவில்லையோ, துறவில் உள்ளவனை எது பரம புருஷ பகவானின் பக்தித் தொண்டுக்கு அழைத்துச் செல்லவில்லையோ, அவன் சுவாசித்துக் கொண்டிருந்தாலும் இறந்தவனாகக் கருதப்பட வேண்டும். பொருளுரை தேவஹூதியின் கூற்று என்னவென்றால், அவள் புலன் நுகர்ச்சிக்காக அவள் கணவருடன் வாழ்வதற்கு பற்றுடையவளாக இருந்தாலும், அது உலகப் பிடிப்பிலிருந்து விடுதலைக்கு அழைத்துச் செல்லாவிட்டால், அவள் வாழ்வு வீணானதாகும். ஒருவர் செய்யும் வேலை அவரை மத வாழ்வு நிலைக்கு அழைத்து செல்லாவிட்டால், அது பயனற்ற செயல் ஆகும். எல்லாரும் இயற்கையால் ஏதாவது வேலை செய்ய விருப்பம் கொள்வர், அந்த வேலை ஒருவரை மத வாழ்வுக்கு அழைத்துச் சென்றால், அந்த மத வாழ்வு ஒருவரைத் துறவு நிலைக்கு அழைத்துச் சென்றால், அந்த துறவு நிலை ஒருவரை பக்தித் தொண்டிற்கு அழைத்துச் சென்றால், ஒருவர் அந்த வேலையின் நிறைவை அடைகிறார். பகவத் கீதையில் குறிப்பிட்டிருப்பதுபோல, எந்த வேலை ஒருவரை பக்தித் தொண்டின் நிலைக்கு இறு...

பிரேமையின் சுபாவம்

 

பகவானின் திருநாமத்தை தொடர்ந்து உச்சரிப்பதால் உண்டாகும் உத்தம லக்ஷணங்கள்

  ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தமது சிக்ஷாஷ்டகத்தில் பிரார்த்தனை செய்கிறார்: யுகா யிதம் நிமேஷேண சக்ஷுஷா ப்ராவ்ருஷாயிதம் ஷூன்யாயிதம் ஐகத் ஸர்வம் கோவிந்த -விரஹேண மே 'கோவிந்தரே! உம்முடைய பிரிவு ஒரு கணம் என்றாலும் அதனை நான் பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உணர்கின்றேன்.கண்களில் கண்ணீர் பெருகி மழைபோல பொழிகிறது, தாங்களின்றி இந்த உலகையே நான் சூன்யமாகக் கருதுகின்றேன்." தனது கண்களில் கண்ணீர் நிரம்பி, குரல் தழுதழுத்து,இதயத்துடிப்பு அதிகமான நிலையில் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தினை உச்சரிக்க வேண்டும் என்பது ஒரு பக்தனின் ஏக்கமாகும். பகவானின் திருநாமத்தை உச்சரிப்பதில் இவை நல்ல அறிகுறிகளாகும். பரவசத்தின் காரணத்தினால், கோவிந்தர் இல்லாத முழுவுலகையும் வெற்றிடமானதாக ஒருவன் கருத வேண்டும். இதுவே கோவிந்தருடைய பிரிவின் அறிகுறியாகும். ஜடவுலகில் நாம் அனைவரும் கோவிந்தரிடமிருந்து பிரிக்கப்பட்டுள்ளோம், பௌதிகப் புலனுகர்ச்சியில் மூழ்கியுள்ளோம். எனவே, ஒருவன் ஆன்மீகத் தளத்தில் அறிவொளி பெறும்போது, அவன் கோவிந்தரைச் சந்திப்பதற்குப் பேராவல்கொள்கிறான், கோவிந்தரின்றி முழுவுலகமும் வெற்றிடமாவதை உணர்கிறான். (ஶ்ரீ சைதன்ய சரிதாம்ர...

புனித நாமம்