Skip to main content

Posts

பக்தி தொண்டின் மகிமை

  அனைத்தும் பகவானாகவே இருப்பதால் , அவரை வழிபடுகதில் பயனில்லை என்று அருவவாதிகள் வாதிக்கின்றனர் . ஆனால் பகவானின் தேக உறுப்புக்களிலிருந்து பிறந்துள்ள பகுதிப் பொருட்களை உபயோகித்து , நன்றி உணர்வுடன் உருவவாதிகள் பகவானை வழிபடுகின்றனர் . பழங்களும் , பூக்களும் பூமித்தாயின் தேகத்திலிருந்து கிடைக்கின்றன . இருப்பினும் அறிவுள்ள பக்தன் பூமியிலிருந்து பிறந்த பொருட்களாலேயே பூமித்தாயை வழிபடுகிறான் . இதைப் போலவே , கங்கைத் தாய் கங்கை நீராலேயே வழிபாடு செய்யப்படுகிறாள் . இருப்பினும் அத்தகைய வழிபாட்டின் பலனை , வழிபடுபவன் அனுபவிக்கிறான் . பகவானின் உடலுறுப்புக்களிலிருந்து பிறந்த பொருட்களாலேயே அவரது வழிபாடும் நடத்தப்படுகிறது . இருப்பினும் பகவானின் ஒரு பாகமாக உள்ள வழிபாடு செய்பவன் , பகவானிடம் செய்யும் பக்தித் தொண்டின் பலனை அடைகிறான் . நானே பகவான் என்று அருவவாதி தப்பாக முடிவு செய்யும் வேளையில் , உருவவாதி , பகவானிலிருந்து எதுவுமே வேறானதல்ல என்பதைப் பூரணமாக உணர்ந்து , பக்தித் தொண்டால் பகவானை வழிபடுகிறான் . எனவே எதுவுமே தனக்குச் சொந்தமானதன...

அலெக்சாண்டரை வென்ற சாது

  சுமார் 2300 ஆண்டுகளுக்கு முன்பு, மிகப்பெரும் சகாப்தத்தை படைத்த கிரேக்க மாமன்னர் அலெக்சாண்டர் தனது ஆட்சிக் காலத்தில் ஐரோப்பாவின் கிரேக்க நாடு முதல் தொடங்கி ஆசியக் கண்டத்தின் இந்திய எல்லை துவக்கம் வரை உள்ள ஏராளமான ராஜ்யங்களை தன் கையகப்படுத்தியிருந்தார். இதனாலேயே இவர் அலெக்சாண்டர் தி கிரேட் என்று புகழப்பட்டார். உலகமே புகழும் மன்னராக இருந்த போதிலும், இந்தியாவில் இவர் நுழைந்த போது, ஒரு சாதுவின் மூலம் மிகப்பெரிய படிப்பினை பெற்றார். சுருக்கமாக சாம்ராஜ்யம் படைத்த அலெக்சாண்டரை, அந்த சாது வென்று விட்டார்.என்றே கூறலாம். தனது வீரர்கள் பலருடன், ஒரு கிராமத்தை கடந்த அலெக்சாண்டர், வழியில் ஒரு சாதுவை சந்தித்தார். அந்த சாது ஒரு மர்த்தின் அடியில் அமர்ந்து தெய்வ சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.பார்ப்பதற்கு மெலிந்த தோற்றமும், மிக ஏழ்மையான நிலையில் இருப்பதை போல் காட்சி அளித்தார். அவரது சாந்தமான தோற்றத்தையும், ஏழ்மை நிலையையும் பார்த்த அலெக்சாண்டர் அவர் அருகில் சென்று கேட்டார். ஐயா! தங்களுக்கு எதுவும் தேவைப்படுகிறதா? சாதுவோ, எதுவும் பேசாது அமைதியாக இருந்தார். இதனால் அலெக்சாண்டர் மீண்டும் ஒருமுறை அந்த சாதுவி...

ஆத்ம நிவேதனம் (பூரண சரணாகதி)

தேவர்ஷி-பூதாப்த-ந்ருணாம் பித்ரூணாம் ந கிங்கரோ நாயம் ருணீ ச ராஜன் ஸர்வாத்மனா ய: சரணம் சரண்யம் கதோ முகுந்தம் பரிஹ்ருத்ய கர்தம் மொழிபெயர்ப்பு அரசே, பௌதிக கடகைமளையெல்லாம் விட்டு அனைவருக்கும் புகலிடமளிக்கும் முகுந்தனின் தாமரைப் பாதங்களைப் புகலிடம் அடைந்தவன் தேவர்களுக்கோ, சிறந்த முனிவர்களுக்கோ சாதாரண ஜீவராசிகளுக்கோ, உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ மனித குலத்திற்கோ அல்லது முன்னோர்களுக்கோ கடனாளி அல்ல. இவ்வெல்லா ஜீவராசிகளும் பரமபுருஷரின் அங்கங்களே என்பதால், பகவானின் சேவைக்காகத்தன்னை அர்ப்பணித்துக் கொண்டவன் தனித்தனியாக இவர்களுக்குச் சேவை செய்ய அவசியமில்லை. பொருளுரை பகவானின் பக்தித் தொண்டிடம் முழுமையாகச் சரணடையாதவனுக்கு நிச்சயமாகப் பல பௌதிக கடமைகள் உள்ளன. ஒவ்வொரு சாதாரண பந்தப்பட்ட ஆத்மாவும் சூரிய ஒளி, சந்திர ஒளி, மழை, காற்று, உணவு ஜட உடல் போன்ற எண்ணற்ற நன்மைகளை தேவர்களிடமிருந்து பெறுகிறான். இவற்றிற்குப் பதிலாக தேவர்களுக்கு யாகத்தில் நிவேதனம் செய்யாதவன் திருடன் (ஸ்தேன) என்று பகவத் கீதை கூறுகிறது. அவ்வாறே, பசு முதலான ஜீவராசிகள் சுவை மிக்க அநேக உணவு வகைகளை அளிக்கின்றன. காலையில் எழுந்ததும் பறவைகளின் இன...

ஹரி நாமாம்ருதம்

கிருஷ்ண உணர்விலுள்ள பக்தர்கள் அனைவரும் ஏதேனும் ஒரு மந்திரத்தை சொல்லிப் பயிற்சி செய்வது அவசியமாகும். மகா - மந்திரமான ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஒருவர் நிச்சயமாக ஜபிக்க வேண்டும். மேலும் சிந்தாமணி - ப்ரகர - ஸத்மஸு எனும் மந்திரத்தையோ அல்லது (இதோ ந்ருஸிம்ஹ: பரதோ நருஸிம்ஹோ யதோ யதோ யாமி ததோ ந்ருஸிம்ஹ:) என்ற நரசிம்ஹ ஸ்தோத்திரத்தையோ ஒருவர் பாடிப் பயிற்சி செய்ய வேண்டும். ஒவ்வொரு பக்தரும் ஏதேனும் ஒரு மந்திரத்தை பக்குவமான முறையில் பாடிப் பயிலவேண்டும். இதனால், இப்பிறவியில் அவர் ஒரு மிருகமாகப் பிறக்க நேர்ந்தாலும் கிருஷ்ண உணர்வை அவர் மறந்துவிடமாட்டார். இப்பிறவியிலேயே ஒருவர் தனது கிருஷ்ண உணர்வை பக்குவப் படுத்த முயல வேண்டும். ஏனெனில், கிருஷ்ணரையும் தன் உபதேசங்களையும் புரிந்து கொள்வதாலேயே, இவ்வுடலை உகுத்தபின் ஒருவரால் பரமபதத்தைச் சென்றடைய முடியும். ஒருவர் விழ நேர்ந்தாலும், கிருஷ்ண உணர்வுப் பயிற்சி ஒருபோதும் வீணாவதில்லை. உதாரணமாக, அஜாமிளன் தனது சிறு பிராயத்தில், தன் தந்தையின் உபதேசத்தின்படி, நாராயண எனும் நாமத்தை உச்சரிக்கும் பயிற்சியை மேற் கொண்டான். ஆனால் பிறகு, அவன் தன் வாலிபப் பருவத்தில் ஒரு குடிகாரனாகவும்...

பயம்

 

பயம்

 

அச்சம் தவிர்

பகவத்கீதைக் கூறுகிறது: ஆன்மீக வளர்ச்சியடைய விரும்பும் ஒருவன் முதலில் அச்சத்தை விட வேண்டும். “அபயம் ஸத்த்வ ஸம்ஸீத்தி:” (ப.கீ.16.1) பௌதீக ஈடுபாட்டினாலேயே அச்சம் உண்டாகிறது. இதனை ஸ்ரீமத் பாகவதமும் (11.2.37) குறிப்பிடுகின்றது: “பயம்த்விதீயாபினி வேஸத: ஸ்யாத்:” உடலியற் கருத்துடைய வாழ்க்கையே அச்சத்தினை உருவாக்குகின்றது. ஒருவன் தன்னை இழந்த ஜடவுடல் என்று நினைக்கும்வரை அவனுக்கு அச்சம் என்பது இருக்கும், இச் ஜடக்கருத்தினின்று ஒருவன் வெளிவரும் பொழுது அவன் பிரம்மபூத அல்லது தன்னுணர்வு பெற்றவனாகிறான் உடனடியாக அவன் அச்சமற்றவனாகிறான். ப்ரஹ்ம பூத: ப்ரஸன்னாத்மா (ப.கீ.18.54) அச்சமுடையோன் ஆனந்தம் அடைவதில்லை. பக்தர்கள் அச்சமில்லாதவர்கள். அவர்கள் எப்பொழுதும் ஆனந்த முடையோராயிருக்கின்றனர். ஏனென்றால் அவர்கள் பகவானின் தாமரைத் திருவடிகளிடத்துத் தொடர்ந்து பக்தித் தொண்டில் ஈடுபடுவதே காரணமாகும். இது மேலும் கூறப்படுகிறது: ஏவம் ப்ரஸன்ன - மனஸோ பகவத் - பக்தி - யோகத: பகவத் - தத்த்வ - விஞ்ஞானம் முக்த - ஸங்கஸ்ய ஜாயதே (பாக.1.2.20) பகவத் பக்தி யோகத்தினைப் பயிற்சி செய்வதின் மூலம் ஒருவன் அச்சமற்றவனாகவும் ஆனந்தமுடையவனாகவும் ஆகிற...