அனைத்தும் பகவானாகவே இருப்பதால் , அவரை வழிபடுகதில் பயனில்லை என்று அருவவாதிகள் வாதிக்கின்றனர் . ஆனால் பகவானின் தேக உறுப்புக்களிலிருந்து பிறந்துள்ள பகுதிப் பொருட்களை உபயோகித்து , நன்றி உணர்வுடன் உருவவாதிகள் பகவானை வழிபடுகின்றனர் . பழங்களும் , பூக்களும் பூமித்தாயின் தேகத்திலிருந்து கிடைக்கின்றன . இருப்பினும் அறிவுள்ள பக்தன் பூமியிலிருந்து பிறந்த பொருட்களாலேயே பூமித்தாயை வழிபடுகிறான் . இதைப் போலவே , கங்கைத் தாய் கங்கை நீராலேயே வழிபாடு செய்யப்படுகிறாள் . இருப்பினும் அத்தகைய வழிபாட்டின் பலனை , வழிபடுபவன் அனுபவிக்கிறான் . பகவானின் உடலுறுப்புக்களிலிருந்து பிறந்த பொருட்களாலேயே அவரது வழிபாடும் நடத்தப்படுகிறது . இருப்பினும் பகவானின் ஒரு பாகமாக உள்ள வழிபாடு செய்பவன் , பகவானிடம் செய்யும் பக்தித் தொண்டின் பலனை அடைகிறான் . நானே பகவான் என்று அருவவாதி தப்பாக முடிவு செய்யும் வேளையில் , உருவவாதி , பகவானிலிருந்து எதுவுமே வேறானதல்ல என்பதைப் பூரணமாக உணர்ந்து , பக்தித் தொண்டால் பகவானை வழிபடுகிறான் . எனவே எதுவுமே தனக்குச் சொந்தமானதன...