Skip to main content

Posts

நேர்மையான செயல் எப்போதும் பக்திக்கு சாதகமானதாகும்

  பணத்தைத் திரட்டுவதன் மூலமாக , ஜட உலகில் ஒருவன் திமிர் பிடித்தவனாகாமல் , தனது வாழ்க்கைத் தேவையை சுலபமாகவும் , நேர்வையுடனும் சம்பாதிக்க வேண்டும் . பொய் புரட்டுகளின் மூலமாய் சமுதாயத்தில் ஒரு பெரிய மனிதனாவதை விட , நேர்மையான வாழ்க்கைத் தேவைக்காக ஒரு கூலியாக இருப்பது சிறந்தது . நேர்மையான உழைப்பால் உலகிலேயே மிகப் பெரிய செல்வந்தனாக ஆவதில் குற்றமில்லை . ஆனால் செல்வம் திரட்டுவதற்காக , வாழ்க்கைக்குரிய நேர்மையான வழியை ஒருவன்தியாகம் செய்து விடக் கூடாது . இத்தகைய முயற்சி பக்தித் தொண்டிற்கு தீங்கிழைப்பதாகும் . 

எவ்வாறு துன்பக் கடலை கடப்பது

  பந்தப்பட்ட வாழ்வில் இருப்பதென்பது கடல் நடுவே ஒரு படகை ஓட்டுவதற்கு ஒப்பாகும் . சூழ்நிலை நன்றாக இருந்தால் , படகு மிகச் சுலபமாக ஓடும் . ஆனால் அங்கு புயல் காற்றோ , மூடுபனியோ , வீசும் காற்றோ அல்லது மேகமோ இருக்கு மானால் , கடலில் மூழ்கிவிடுவதற்கும் வாய்ப்புண்டு . எவ்வளவு நன்றாக ஆயத்தபபடுத்தப்பட்டு இருந்தாலும் , கடலில் திடீர் மாற்றத்தை ஒருவராலும் கட்டுப்படுத்த முடியாது . கப்பலால் கடல்களைக் கடந்துள்ளவனுக்கு , கடலின் தயவை எதிர்பார்த்திருக்க வேண்டி உள்ளது . ஆனால் பகவானின் கருணையால் ஜட வாழ்வெனும் கடலை ஒருவனால் மிகவும் சுலபமாகச் கடந்து விட முடியும் . புயல் காற்றுக்கோ அல்லது மூடுபனிக்கோ அவன் அஞ்ச வேண்டியதில்லை . இதல்லாம் பகவானின் விருப்பத்தைப் பொறுத்ததாகும் ; பந்தப்பட்ட வாழ்வில் சில துரதிர்ஷடமான ஆபத்து விளையுமானால் ஒருவராலும் உதவி செய்ய முடியாது . ஆனால் பகவத் பக்தர்கள் , கவலைப்படாமல் ஜட இருப்பெனும் கடலைக் கடந்து விடுகின்றனர் , ஏனெனில் தூய பக்தரொருவர் எப்பொழுதுமே பகவானால் பாதுகாக்கப்படுகிறார் ( பகவத் கீதை 9.13). பௌ...

பரம உன்னதமான ஞானத்தை பகவானின் உண்மையான பிரதிநிதியிடமிருந்து மட்டுமே கேட்க வேண்டும்

  பாகவதம் , சுமார் அரை டஜன் சுலோகங்களில் , சுருக்கமாக , முழுமுதற் கடவுளால் பேசப்பட்டதும் , பகவானின் சக்தி வாய்ந்த பிரதி நிதித்துவமுமாகும் . அவர் பரிபூரணமானவர் . ஆதலால் , பகவத் விஞ்ஞானமாகிய ஸ்ரீமத் பாகவதத்திலிருந்து அவர் வேறுபட்டவரல்ல . இவ்விஞ்ஞானத்தை பிரம்மதேவர் பகவானிடமிருந்து நேரடியாகப் பெற்றார் . பின் நாரதரிடம் இதை அவர் ஒப்படைத்தார் . நாரதரும் அதை ஸ்ரீல வியாசதேவரிடம் ஒப்படைத்து அதை விரிவுபடுத்திக் கூறுமாறு கட்டளையிட்டார் . எனவே பரமபுருஷரைப் பற்றிய உன்னத அறிவு , பௌதிக கல்விமான்களால் ஏற்படுத்தப்பட்ட மனக் கற்பனையல்ல . இது ஜடக் குணங்களின் வரம்புக்கு அப்பாற்பட்டதும் , பரிசுத்தமானதும் நித்தியமானதுமான பூரண அறிவாகும் . எனவே பாகவத - புராணம் உன்னதமான ஓசை வடிவிலுள்ள பகவானின் நேரடியான அவதாரமாகும் . இந்த உன்னதமான அறிவை ஒருவன் சீடப் பரம்பரையில் வரும் பகவானின் உண்மையான பிரதிநிதியிடமிருந்து பெற வேண்டும் . இச் சீடப் பரம்பரை பகவானிடமிருந்து பிரம்ம தேவருக்கும் , பிரம்மதேவரிடமிருந்து நாரதருக்கும் , நாரதரிடமிருந்து வியாசருக்கும் ...