Skip to main content

Posts

நம்முடைய உண்மையான வீடு பகவானின் இராஜ்யத்தில் உள்ளது

  நம்முடைய உண்மையான வீடு பகவானின் இராஜ்யத்தில் உள்ளது பௌதிக வீட்டிலேயே இருக்க நாம் பிடிவாதமாக உறுதி கொண்ட போதிலும் , பௌதிக அரங்கிலிருந்து மரணம் நம்மை பலாத்தகாரமாக வெளியே தள்ளிவிடும் . வீட்டிலிருப்பது கெட்டதல்ல , அன்பானவர்களிடம் நம்மை அர்ப்பணித்துக் கொல்வதும் கெட்டதல்ல . ஆனால் நம்முடைய உண்மையான வீடு நித்தியமானது என்பதையும் , அது ஆன்மீக இராஜ்யத்தில் உள்ளது என்பதையம் நாம் புரிந்துகொள்ள வேண்டும் . மனித வாழ்வு நமக்குத் தானாகவே அளிக்கப்பட்டுள்ளது என்பதையே அயந்னத : எனும் சொல் குறிப்பிடுகிறது . நம் மனித உடல்களை நிர்மாணித்தவர்கள் நாமல்லா . எனவே “ இது என்னுயை உடல் ” என்று முட்டாள்தனமாக நாம் உரிமை கொண்டாடக் கூடாது . மனித ரூபம் , கடவுளால் அளிக்கப்பட்ட ஒரு பரிசாகும் . இதை இறை உணர்வின் பூரணத்துவத்தை அடைவதற்காக உபயோகிக்க வேண்டும் . இதைப் புரிந்து கொள்ளாதவன் , மந்தபுத்தி ( அஸன் - மதி ) உடையவனாவான் . ( ஶ்ரீமத் பாகவதம் 10.51.46 /  பொருளுரை  )  🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே...

பகவான் ஏன் ஒரு பௌதிக உருவினால் மூடப்பட்டவராக, அல்லது ஒரு மனிதனைப் போல் பிறவி எடுப்பவராக காணப்பட்டுகிறார் ?

  பகவான் ஏன் ஒரு பௌதிக உருவினால் மூடப்பட்டவராக , அல்லது ஒரு மனிதனைப் போல் பிறவி எடுப்பவராக காணப்பட்டுகிறார் என்பதற்கு , அக்ரூரர் இங்கு இரு காரணங்களைக் குறிப்பிடுகிறார் . முதல் காரணம் , பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தம் லீலைகளை நிகழ்த்தும்பொழுது , அவரிடம் அன்புபூண்ட பக்தர்கள் அவரைத் தங்களது அன்புக் குழந்தையாகவோ அல்லது நண்பராகவோ அல்லது காதலராகவோ அல்லது வேறுமாதிரியாவோ நினைக்கின்றனர் . இந்த அன்புப் பரிமாற்றத்தின் பரவசத்தில் ஸ்ரீ கிருஷ்ணரை அவர்கள் கடவுளாக நினைப்பதில்லை . உதாரணமாக , கிருஷ்ணரிடமுள்ள அசாதாரணமான அன்பின் காரணத்தால் வனத்தில் அவருக்குத் தீங்கு ஏற்பட்டு விடும் என்று தாய் யாசோதை கவலைப்படுகிறாள் . அவள் இவ்வாறு உணர வேண்டுமென்பது பகவானின் விருப்பமாகும் . இது இங்கு நிகாம : எனும் சொல்லால் குறிப்பிடப்பட்டுள்ளது . பகவான் பௌதிகமானவராக காணப்படக் கூடும் என்பதற்கான இரண்டாவது காரணம் , அவி வேக : எனும் சொல்லால் சுட்டிக் காட்டப்படுகிறது : அறியாமையின் காரணத்தால் , பரமபுருஷரின் நிலையை ஒருவன் தவறாக புரிந்து கொள் ’ ளக்கூடும் ....

ஒரு தூய பக்தன் பகவானிடம் எப்போதும் “உம்மிது தூய்மையான அன்பு வைக்க எனக்கு உதவுவீராக” என்று வேண்டுகின்றான்

  பகவான் கிருஷ்ணர் பகவத்கீதையில் “யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ் ததைவ பஜாமி அஹம்”: யாவர் என்னை எங்ஙனம் சரணடைகின்றார்களோ நான் அதற்கேற்ப அவர்களுக்கு அருள்பாலிக்கின்றேன். பகவானை ஒருவன் பக்தியுடன் அணுகினால் கூட, அப்பக்தனின் பக்தியைத் தீவிரப்படுத்த வேண்டும் என்பதற்காக, பகவான் உடனே பதிலுக்கு அவன் மீது முழு அன்பம் செலுத்தாதிருக்கலாம். எனினும் பகவான் உண்மையில் பதிலுக்கு அன்பு செலுத்துபவராகவே இருக்கின்றார். ஒரு தூய பக்தன் பகவானிடம் எப்போதும் “உம்மிது தூய்மையான அன்பு வைக்க எனக்கு உதவுவீராக” என்று வேண்டுகின்றான். ஆகையினால் பகவான் புறக்கணிக்கின்றார் எனப்படுவது, அப்பக்தனின் வேண்டுகோளை உண்மையில் நிறைவேற்றுகின்றார் என்பதுவேயாகும். பகவான் கிருஷ்ணர் தம்மீது நாம் செலுத்தும் அன்பினை, நம்மிடமிருந்து பிரிந்து செல்வதின் மூலம் தீவிரப்படுத்துகின்றார். இதன் விளைவு நாம் உண்மையில் எதனை விரும்பினோமோ, எதற்காகப் பிரார்த்தித்தோமோ அந்த முழுமெய்ப் பொருள் கிருஷ்ணர் மீதான தீவிரமான காதலை நான் அடையப் பெறுகின்றோம். அதனால் வெளிப்படையாகத் தோன்றும் கிருஷ்ணரின் புறக்கணிப்பானது உண்மையில் அவரது சிந்தனையார்ந்த பதில் செய்தலும்...