பௌதீக வாழ்க்கைக் காட்டின் நேரடி பொருள் இவ்வத்தியாயத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது , வணிகர்கள் நகரங்களில் நல்ல விலைக்கு விற்பதற்காகக் காட்டிற்குள் சென்று பல அரியப்பொருட்களைச் சேகரிக்கின்றனர் . ஆயினும் அக்காட்டுப்பாதை மிகவும் ஆபத்து நிறைந்ததாகும் . பௌதீக உலகில் அனுபவித்து மகிழ்வதற்காக ஒரு தூய ஆத்மா பகவானின் தொண்டினைக் கைவிட விரும்பும் பொழுது கிருஷ்ணர் பௌதீக உலகினுள் நுழைவதற்கான வாய்ப்பினை நிச்சயம் அவனுக்கு அருள்வார் . “ பிரேம விவர்தத்தில் ,” “ க்ருஷ்ண பஹிர் முக ஹனா போக வாஞ்சா கரே ” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது . பௌதீக உலகில் ஒரு தூய ஆத்மா வீழ்வதற்கு இதுவே காரணமாகும் , ஜட இயற்கையின் முக்குணங்களின் பாதிப்பின் கீழ் அவனது செயல்பாடுகள் இருப்பதினால் உயிர்வாழி பல்வேறு உயிர்க்குலங்களிடையே பல்வேறு நிலைகளை அடைகிறான் . சிலநேரம் அவன் தேவலோகத்தில் ஒரு தேவகுமாரனாகப் பிறக்கிறான் , சிலநேரம் கீழ் உலகில் ஒர் இழிந்த ஜந்துவாகப் பிறக்கிறான் . இது தொடர்பாக ஸ்ரீல நரோத்தம தாஸ தாக்கூர , “ நானா யோனி ஸதா பிரே :” உயிர்வாழ...