Skip to main content

Posts

பீஷ்மரின் உபதேசங்கள் மனித வாழ்வை உயர்த்தும் ஒன்பது குணங்கள்

நாகரிகமடைந்த மனிதன், மனித வாழ்வை வெற்றிகரமாக முடித்துக் கொள்வதற்குரிய பயிற்சியைப் பெறுவதற்காகவே வர்ணாஸ்ரம தர்மம் நியமிக்கப்பட்டு உள்ளது. உண்ணுதல், உறங்குதல், தற்காத்துக் கொள்ளுதல் மற்றும் இனவிருத்தி செய்தல் ஆகிய காரியங்களில் மட்டும் ஈடுபட்டுள்ள தாழ்ந்த மிருகங்களின் வாழ்விலிருந்து, தன்னுணர்வைப் பெறும் வாழ்வு வேறுபட்டதாகும். மனிதனுக்கு ஒன்பது தகுதிகள் தேவை என்று பீஷ்மதேவர் அறிவுறுத்துகிறார். அவை  (1) கோபப்படாதிருத்தல்,  (2) பொய் சொல்லாமை,  (3) செல்வத்தை சமமாக விநியோகித்தல்,  (4) மன்னித்தல்,  (5) சட்டபூர்வமான மனைவியால் மட்டுமே குழந்தை பெறுதல்,  (6) மனத் தூய்மையுடனும், உடல் ஆரோக்கியத்துடனும் இருத்தல்,  (7) யாருடனும் விரோதம் கொள்ளாத்திருத்தல்,  (8) எளிமையாக இருத்தல், மற்றும்  (9) பணியாளர்களை அல்லது கீழ்ப்படிந்திருப்பவர்களை ஆதரித்தல் என்பவையாகும்.  மேற்குறிப்பிட்ட தகுதிகளைப் பெறாதவனை நாகரிகம் அடைந்தவனென்று அழைக்க முடியாது.  🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே 🍁...

“நரகத்திலிருந்து வைகுண்டம் – ராமநாமத்தின் மகிமை”

     சீதாதேவியின் தந்தையான ஜனக மஹாராஜா , பகவான் ஸ்ரீ ராமச்சந்திரரின் மிகுந்த பக்தரும் ஆவார் . ஸ்ரீமத் பகவதம் - இல் அவர் தர்மத்தை நிலைநாட்டிய பன்னிரண்டு மகாஜனர்களில் ஒருவராகக் குறிப்பிடப்பட்டுள்ளார் . அவருடைய கருணையும் , பக்தியும் வெளிப்படுத்தும் ஓர் அற்புதமான சம்பவம் பத்ம புராணத்தில் ( பாதாளகண்டம் ) விவரிக்கப்படுகிறது . ஒருநாள் , அனந்த சேஷன் ஜனக மஹாராஜா நரகத்தில் சென்ற நிகழ்வைப் பற்றி கூறினார் . தெய் வீக  வைகுண்ட  பயணம் இடைவிடாத யோக சாதனையின் பின் ஜனக மஹாராஜா தனது உடலைத் துறந்தார் . அப்பொழுது மணி ஒலிகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு தெய்வீக விமானம் இறங்கி வந்தது . அவர் அதில் ஏறிச் சென்றார் . அந்த விமானம் யமராஜாவின் உலகத்திற்கருகே சென்றபோது , அங்குள்ள பாவிகள் துன்பப்பட்டுக் கொண்டிருந்தனர் . ஆனால் ஆச்சரியம் என்னவெனில் – ஜனக மஹாராஜாவைத் தொட்ட காற்று அந்தப் பாவிகளை எட்டியவுடன் , அவர்கள் துன்பம் மறந்து பேரின்பத்தை அனுபவித்தனர் . அந்தப் பாவிகள் கண்ணீர் மல்க , " அரசே ! எங்களை விட்டுச் செல்ல...

யாரால் கிருஷ்ண உணர்வை புரிந்துகொள்ள முடியாது ?

       பிற உயிரினங்களுக்குத் துன்பம் செய்யத் திட்டமிடும் மனிதர்கள் கிருஷ்ண உணர்வு நிலையைப் புரிந்துகொள்ளத்தகுதி இல்லாதவர்கள் . பகவானுக்குரிய உன்னத அன்புத் தொண்டாகிய ஆட்சியில் நுழைய முடியாது . மேலும் , உள்நோக்கத்துடன் மிகவும் செயற்கையாக ஆன்மீக குருவிற்கு அடங்கி நடக்கும் மாணவர்கள் என்போர் உள்ளனர் . அவர்களால் கிருஷ்ண உணர்வு நிலை அல்லது பக்தித் தொண்டைப் புரிந்துகொள்ளவும் முடியாது . மத நம்பிக்கையின் மற்றொரு உட்பிரிவால் துவக்கப்பட்டு . பரம புருஷ பகவானை அணுகுவதற்குப் பொது மேடையாக பக்தித் தொண்டைக் கொள்ளாதவர்களும் கிருஷ்ண உணர்வு நிலையைப் புரிந்துகொள்ள முடியாது . சில மாணவர்கள் நம்முடன் சேர்வதற்கு வருகின்றனர் எனும் அனுபவம் நமக்கு உண்டு , ஆனால் சில குறிப்பிட்ட வகையான நம்பிக்கையில் ஒரு புறச் சாய்வாக இருப்பதால் அவர்கள் நமது பாசறையை விட்டுச் சென்று , பாலைவனத்தில் விடப்படுகிறார்கள் . உண்மையில் , கிருஷ்ண உணர்வு நிலை ஒரு கிளைப்பிரிவினரின் மத நம்பிக்கை இல்லை ; அது பகவானையும் அவருடனான நமது உறவையும் புரிந...