Skip to main content

Posts

துளசி இலையின் மகிமை: பக்தியால் பகவான் அடையப்படும் வழி

பக்தி மார்க்கத்தின் ஆழமான உண்மை என்னவென்றால் — பகவானை அடையப் பெரும் யாகங்கள், பெரும் தானங்கள் தேவையில்லை; ஒரு துளசி இலையும் ஒரு துளி நீரும், உண்மையான பக்தியுடன் சமர்ப்பிக்கப்பட்டால், அவை அவரை அளவில்லாமல் திருப்திப்படுத்தும். “துலஸீ-தல-மாத்ரேண ஜலஸ்ய சுலுகேன வா…” என்று தொடங்கும் இந்த ஸ்லோகம் கௌதமீய தந்திர நூலிலிருந்து வந்தது. இதில், பக்தர்களிடம் அளவற்ற பாசம் கொண்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் , துளசி இலைக்கும் சிறிதளவு நீருக்கும் தம்மையே அர்ப்பணிக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்லோகத்தை ஆழமாக சிந்தித்த ஆச்சாரியர், “இவ்வளவு சிறிய அர்ப்பணிப்புக்கும் கடன் பட்டவனாக இருப்பதாக பகவான் நினைக்கிறார்” என்பதை உணர்ந்தார். அந்த உணர்வின் பேரில், அவர் துளசி இலையும் கங்கை நீரையும் தொடர்ந்து சமர்ப்பித்து, பரமபுருஷனான கிருஷ்ணரை இவ்வுலகில் அவதரிக்க அழைத்தார். இந்த நிகழ்வுகள் நமக்கு ஒரு நிலையான உண்மையை நினைவூட்டுகின்றன — பகவானை அடைய பொருள் தேவையில்லை; பக்தி, உண்மை, அன்பு மட்டுமே போதும். பக்தனின் இதயத்திலிருந்து எழும் சுத்தமான அர்ப்பணிப்பால், அனந்தமான பகவானும் அவன் பாசத்தில்  வசப்படுகிறார் ஸ்ரீ சைதன்ய சரி...

பீஷ்மரின் உபதேசங்கள் மனித வாழ்வை உயர்த்தும் ஒன்பது குணங்கள்

நாகரிகமடைந்த மனிதன், மனித வாழ்வை வெற்றிகரமாக முடித்துக் கொள்வதற்குரிய பயிற்சியைப் பெறுவதற்காகவே வர்ணாஸ்ரம தர்மம் நியமிக்கப்பட்டு உள்ளது. உண்ணுதல், உறங்குதல், தற்காத்துக் கொள்ளுதல் மற்றும் இனவிருத்தி செய்தல் ஆகிய காரியங்களில் மட்டும் ஈடுபட்டுள்ள தாழ்ந்த மிருகங்களின் வாழ்விலிருந்து, தன்னுணர்வைப் பெறும் வாழ்வு வேறுபட்டதாகும். மனிதனுக்கு ஒன்பது தகுதிகள் தேவை என்று பீஷ்மதேவர் அறிவுறுத்துகிறார். அவை  (1) கோபப்படாதிருத்தல்,  (2) பொய் சொல்லாமை,  (3) செல்வத்தை சமமாக விநியோகித்தல்,  (4) மன்னித்தல்,  (5) சட்டபூர்வமான மனைவியால் மட்டுமே குழந்தை பெறுதல்,  (6) மனத் தூய்மையுடனும், உடல் ஆரோக்கியத்துடனும் இருத்தல்,  (7) யாருடனும் விரோதம் கொள்ளாத்திருத்தல்,  (8) எளிமையாக இருத்தல், மற்றும்  (9) பணியாளர்களை அல்லது கீழ்ப்படிந்திருப்பவர்களை ஆதரித்தல் என்பவையாகும்.  மேற்குறிப்பிட்ட தகுதிகளைப் பெறாதவனை நாகரிகம் அடைந்தவனென்று அழைக்க முடியாது.  🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே 🍁...

“நரகத்திலிருந்து வைகுண்டம் – ராமநாமத்தின் மகிமை”

     சீதாதேவியின் தந்தையான ஜனக மஹாராஜா , பகவான் ஸ்ரீ ராமச்சந்திரரின் மிகுந்த பக்தரும் ஆவார் . ஸ்ரீமத் பகவதம் - இல் அவர் தர்மத்தை நிலைநாட்டிய பன்னிரண்டு மகாஜனர்களில் ஒருவராகக் குறிப்பிடப்பட்டுள்ளார் . அவருடைய கருணையும் , பக்தியும் வெளிப்படுத்தும் ஓர் அற்புதமான சம்பவம் பத்ம புராணத்தில் ( பாதாளகண்டம் ) விவரிக்கப்படுகிறது . ஒருநாள் , அனந்த சேஷன் ஜனக மஹாராஜா நரகத்தில் சென்ற நிகழ்வைப் பற்றி கூறினார் . தெய் வீக  வைகுண்ட  பயணம் இடைவிடாத யோக சாதனையின் பின் ஜனக மஹாராஜா தனது உடலைத் துறந்தார் . அப்பொழுது மணி ஒலிகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு தெய்வீக விமானம் இறங்கி வந்தது . அவர் அதில் ஏறிச் சென்றார் . அந்த விமானம் யமராஜாவின் உலகத்திற்கருகே சென்றபோது , அங்குள்ள பாவிகள் துன்பப்பட்டுக் கொண்டிருந்தனர் . ஆனால் ஆச்சரியம் என்னவெனில் – ஜனக மஹாராஜாவைத் தொட்ட காற்று அந்தப் பாவிகளை எட்டியவுடன் , அவர்கள் துன்பம் மறந்து பேரின்பத்தை அனுபவித்தனர் . அந்தப் பாவிகள் கண்ணீர் மல்க , " அரசே ! எங்களை விட்டுச் செல்ல...