Skip to main content

Posts

யஜ்ஞார்தாத் கர்மணோ (அ)ன்யத்ர வோகோ அரயம் கர்ம - பந்தன; முழுமுதற் கடவுளுக்குத் திருப்தியளிப்பதற்காகவே நாம் செயல் செய்ய வேண்டும்.

  ஒரு வேள்விச் சடங்கானது முழுமுதற் கடவுளை மகிழ்விப்பதற்கென்றே செய்யப்படுகிறது. ஸ்ரீமத் - பாகவதம் முதல்காண்டம் இரண்டாம் அத்தியாயம் ஒவ்வொருவரும் தமது செயலினால் முழுமுதற் கடவுள் திருப்தியுற்றிருக்கிறாரா என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிடுகிறது. அதாவது நமது செயலின் நோக்கம் முழுமுதற் கடவுளைத் திருப்திப்படுத்துவதற்கானதாகவே இருத்தல் வேண்டும். எவ்வாறு ஒரு பணியாளன் தன் அலுவலகத்தில் தனது முதலாளி அல்லது உயர் அதிகாரி திருப்தியடைந்திருக்கிறாரா என்று கவனிப்பதைத் தன் கடமையாகக் கொண்டிருக்கிறானோ அதுபோல் முழுமுதற் கடவுள் தனது செயலினால் திருப்தியுற்றிருக்கிறாரா என்று பார்ப்பது ஒவ்வொருவரின் கடமையாகும். முழுமுதற் கடவுளைத் திருப்திப்படுத்துவதற்கான செயல்கள் எவையென்று வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அச்செயல்களின் நிறைவேற்றமே வேள்வி அல்லது யக்ஞம் என்றழைக்கப்படுகிறது. வேறொரு முறையில் முழுமுதற் கடவுளின் சார்பாகச் செயல்படுவதே வேள்வியாகும் என்றும் கூறலாம். வேள்வியினைத் தவிர வேறெச் செயலும் உலகப் பிடிப்பிற்குக் காரணமாகும் என்பதை ஒருவன் மிக நன்றாக அறிந்து கொள்ளவேண்டும். பகவத்கீதையிலும் (3.9) ...

கல்லாலான ஒரு படகு

  தேஷாம் குபத - தேஷ்ட்ரூணாம் பததாம் தமஸி ஹி அத: யே ஸ்ரத்தத்யுர் வசஸ் வை மஜ்ஜந்தி அஸ்ம-ப்லவா இவ மொழிபெயர்ப்பு (முந்திய சுலோகத்தில் விவரிக்கப்பட்டதுபோல்) அறியாமையில் விழுந்துவிட்டவர்களும், மக்களை அழிவுப் பாதையில் தவறாக வழிநடத்திச் செல்பவர்களுமான தலைவர்களும், குருட்டுத்தனமாக அவர்களைப் பின்பற்றுபவர்களும், உண்மையில் கல்லினால் செய்யப்பட்ட ஒரு படகில் ஏறிக் கொள்பவர்களைப் போன்றவர்களாவர். கல்லாலான ஒரு படகு மிதக்க முடியாமல் அதிலுள்ள பயணிகளுடன் நீரில் மூழ்கிவிடும். அதுபோலவே, மக்களைத் தவறாக வழிநடத்திச் செல்பவர்கள் நரகத்திற்குச் செல்வார்கள். அவர்களைப் பின்பற்றிச் செல்வோரும் நரகத்திற்கே செல்வார்கள். பொருளுரை ஸ்ரீமத் பாகவதம் (11.20.17) பின்வருமாறு குறிப்பிடுகிறது: ந்ரு-தேஹம் ஆத்யம் ஸுலபம் ஸுதுர்லபம் ப்லவம் ஸுகல்பம் குரு-கர்ண-தாரம் பந்தப்பட்ட ஆத்மாக்களாகிய நாம் அறியாமை எனும் கடலில் விழுந்துவிட்டோம். ஆயினும் ஒரு சிறந்த படகைப் போன்றுள்ள இந்த மனித உடலானது, அறியாமை எனும் இக்கடலைக் கடப்பதற்குச் சிறந்த வாய்ப்பை அளிக்கிறது, கப்பல் தலைவனைப்போல் செயற்படும் ஓர் ஆன்மீக குருவினால் வழிநடத்தப்படு...

துளசி இலையின் மகிமை: பக்தியால் பகவான் அடையப்படும் வழி

பக்தி மார்க்கத்தின் ஆழமான உண்மை என்னவென்றால் — பகவானை அடையப் பெரும் யாகங்கள், பெரும் தானங்கள் தேவையில்லை; ஒரு துளசி இலையும் ஒரு துளி நீரும், உண்மையான பக்தியுடன் சமர்ப்பிக்கப்பட்டால், அவை அவரை அளவில்லாமல் திருப்திப்படுத்தும். “துலஸீ-தல-மாத்ரேண ஜலஸ்ய சுலுகேன வா…” என்று தொடங்கும் இந்த ஸ்லோகம் கௌதமீய தந்திர நூலிலிருந்து வந்தது. இதில், பக்தர்களிடம் அளவற்ற பாசம் கொண்ட பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் , துளசி இலைக்கும் சிறிதளவு நீருக்கும் தம்மையே அர்ப்பணிக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்த ஸ்லோகத்தை ஆழமாக சிந்தித்த ஆச்சாரியர், “இவ்வளவு சிறிய அர்ப்பணிப்புக்கும் கடன் பட்டவனாக இருப்பதாக பகவான் நினைக்கிறார்” என்பதை உணர்ந்தார். அந்த உணர்வின் பேரில், அவர் துளசி இலையும் கங்கை நீரையும் தொடர்ந்து சமர்ப்பித்து, பரமபுருஷனான கிருஷ்ணரை இவ்வுலகில் அவதரிக்க அழைத்தார். இந்த நிகழ்வுகள் நமக்கு ஒரு நிலையான உண்மையை நினைவூட்டுகின்றன — பகவானை அடைய பொருள் தேவையில்லை; பக்தி, உண்மை, அன்பு மட்டுமே போதும். பக்தனின் இதயத்திலிருந்து எழும் சுத்தமான அர்ப்பணிப்பால், அனந்தமான பகவானும் அவன் பாசத்தில்  வசப்படுகிறார் ஸ்ரீ சைதன்ய சரி...

பீஷ்மரின் உபதேசங்கள் மனித வாழ்வை உயர்த்தும் ஒன்பது குணங்கள்

நாகரிகமடைந்த மனிதன், மனித வாழ்வை வெற்றிகரமாக முடித்துக் கொள்வதற்குரிய பயிற்சியைப் பெறுவதற்காகவே வர்ணாஸ்ரம தர்மம் நியமிக்கப்பட்டு உள்ளது. உண்ணுதல், உறங்குதல், தற்காத்துக் கொள்ளுதல் மற்றும் இனவிருத்தி செய்தல் ஆகிய காரியங்களில் மட்டும் ஈடுபட்டுள்ள தாழ்ந்த மிருகங்களின் வாழ்விலிருந்து, தன்னுணர்வைப் பெறும் வாழ்வு வேறுபட்டதாகும். மனிதனுக்கு ஒன்பது தகுதிகள் தேவை என்று பீஷ்மதேவர் அறிவுறுத்துகிறார். அவை  (1) கோபப்படாதிருத்தல்,  (2) பொய் சொல்லாமை,  (3) செல்வத்தை சமமாக விநியோகித்தல்,  (4) மன்னித்தல்,  (5) சட்டபூர்வமான மனைவியால் மட்டுமே குழந்தை பெறுதல்,  (6) மனத் தூய்மையுடனும், உடல் ஆரோக்கியத்துடனும் இருத்தல்,  (7) யாருடனும் விரோதம் கொள்ளாத்திருத்தல்,  (8) எளிமையாக இருத்தல், மற்றும்  (9) பணியாளர்களை அல்லது கீழ்ப்படிந்திருப்பவர்களை ஆதரித்தல் என்பவையாகும்.  மேற்குறிப்பிட்ட தகுதிகளைப் பெறாதவனை நாகரிகம் அடைந்தவனென்று அழைக்க முடியாது.  🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே 🍁...