ஒருவர் பகவானின் அறிவார்ந்த பக்தித் தொண்டில் ஈடுபடும் பொழுது , அவர் , ஒரு தனிப்பட்ட ஆத்மா எனும் முறையில் வாசுதேவராகிய பரமாத்மாவின் நிலையான ஊழியனாய் இருத்தல் வேண்டும் என்று அறிகிறார் . தன்னை உணர்தல் என்பது , பரமாத்மாவும் தனிப்பட்ட ஆத்மாவும் இரண்டு ஆத்மாக்கள் என்பதால் அவை மதிப்பில் சமமானவை என்று பொருளல்ல . தனிப்பட்ட ஆத்மா கட்டுப்பாட்டுக்கு ஆளாகக்கூடியது . பரமாத்மா ஒருபோதும் கட்டுப்படுத்தப்படாதது . கட்டுப்படுத்தப்பட்ட ஆத்மா , தான் பரமாத்மாவுக்கு கீழுள்ளது என்பதை உணரும் பொழுது , அவர் நிலை லப்தாத்மா , தன்னை உணர்தல் அல்லது முக்த பந்தன , ஜடவுலக மாசிலிருந்து விடுதலை என்று அழைக்கப்படுகிறது . ஒருவர் தன்னை பகவான் போன்ற நல்லவராகவும் அல்லது அவருக்குச் சமமாகவும் நினைக்கும் வரை உலகத்தின் மாசு தொடரும் . இந்த நிலை மாயையின் கடைசி சூழ்ச்சி ஆகும் . மாயை எப்பொழுதும் கட்டுப்படுத்தப்பட்ட ஆன்மாவைப் பாதிக்கும் நிறைய தியானம் மற்றும் ஆழ்ந்த சிந்தனைக்குப் பிறகும் ஒருவர் தானும் பகவானும் ஒன்று என்று தொடர்ந்து நினைத்தால் , அவர்...