Skip to main content

வாசுதேவ விப்ரா


 வாசுதேவ விப்ரா


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு நீலாசலிருந்து, தனது தென்னிந்திய யாத்திரை போகும் வழியில், புனித தலமான கூர்ம ஸ்தலத்தில் ஒரு நாள் தங்கி, அங்கு நாள் முழுவதும் சங்கீர்த்தனம் செய்து, பக்தி பரவசத்தில் நடனமாடினார். அவருடன் இணைந்து அந்த பகுதி மக்களும் ஹரி நாம சங்கீர்த்தனத்தில், உற்சாகத்துடன் பங்கு கொண்டனர்.

கூர்ம ஸ்தலத்தின் அருகே உள்ள ஒரு கிராமத்தில் வாசுதேவன் என்ற பிராமணர் வசித்து வந்தார். அவர் மிகச் சிறந்த பக்தர். ஆனால், அவர் தொழு நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இருந்தும், தன்னடக்கம் , பணிவான குணம் போன்ற நற்குணங்கள் நிறைந்த பக்தராக இருந்தார்.

ஒரு நாள் இரவு பகவானின் அவதாரமான ஒரு சன்யாசி புனித நாமங்களைப் பாடி கொண்டு ஒவ்வொரு கிராமும் நகரமுமாய் கடந்து சென்று கொண்டிருக்கிறார் என்பதை கேள்விப்பட்ட வாசுதேவர், கண நேரம் கூட தாமதிக்காமல், உடனே அந்த மஹா புருஷரை காண கூர்ம ஸ்தலத்தை நோக்கி புறப்பட்டார்.

தன் நிலையை பற்றி சிறிதும் கவலைப்படாமல், பகவானின் மேலுள்ள பக்தி ஈர்ப்பினாலும், மிக உறுதியான நம்பிக்கையுடன், பகவானை காண விரைந்தார். ஆனால் அவரது உடல் ஒத்துழைக்க மறுத்தது. புண்களில் இருந்து இரத்தம் ஒழுகி, அதிலிருந்து புழுக்கள் வெளியே வந்து தொந்தரவு செய்தன. அந்தப் புழுக்கள் மட்டுமே வசுதேவரின் உறவினர்கள். மற்றவர்கள் அவர் உடலிலிருந்து வரும் துர்நாற்றத்தால், அவரை விட்டு வெகு தூரம் தள்ளியே இருப்பார்கள்.

அவரது உடலில் இருந்து புழுகள் வெளி வந்து கீழே விழுந்தால், மிகவும் கவனமாக அதை பிடித்து மீண்டும் தன் உடலிலேயே எடுத்து விட்டு கொள்வார். ஏனென்றால் தனது உடல் இந்த புழுக்களுக்காவது பயன்பெறட்டும் என்றெனுவார். ஆற்றொணா வலியால் துன்பப்பட்டுக் கொண்டு சில நேரம் நடந்தும், சில நேரம் உட்கார்ந்தும் சில நேரம் தவழ்ந்தும் பகவானை காண தீவிரமாக பயணம் செய்து கொண்டிருந்தார்.

அதேசமயம் பகவான் ஶ்ரீ சைதன்ய மாஹாபிரபு அங்கிருந்து புறப்பட்டு தன் யாத்திரையைத் தொடங்கினார். அவர் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் , வாசுதேவர் மகா பிரபுவின் தரிசனத்திற்காக அங்கு வந்து சேர்ந்தார். அதை கேள்விபட்டதும் ஓ பகவானே எவ்வளவோ துன்பங்களுக்கிடையில் நான் வந்தும், உங்கள் தரிசனம் எனக்குக் கிடைக்கவில்லையே என்று ஆறா துயரில் அழுது, புலம்பி அப்படியே மயங்கி விழுந்தார் .

அதே சமயத்தில் மகாபிரபு நடந்து கொண்டிருந்தபோது திடீரென்று ஏதோ கவனித்து கேட்டவராய், அவ்விடத்தில் நகராமல் நின்றவர், நானே வருகிறேன் என்று சொல்லி மீண்டும் வந்த பாதையிலேயே, திரும்பி மின்னல் வேகத்தில் நடக்க ஆரம்பித்தார். வாசுதேவர் நிலத்தில் விழுந்து கண்ணீரில் நனைந்த படி கிடந்த இடத்திற்கு வந்தவர், இரண்டு கைகளாலும், அவரை வாரி எடுத்து இறுகத் தழுவிக் கொண்டார்.

பகவானின் ஆன்மீக தேகத்தின் ஸ்பரிசம் பட்டதும், வாசுதேவரின் உடலில் இருந்த தொழுநோய் மறைந்து, உடனடியாக எல்லா துன்பங்களிலிருந்தும் விடுவிக்கப்பட்டார். பளபளக்கும் ஒளி பொருந்திய தன் உடலை பார்த்து, அதில் தொழு நோய் இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லாததையும் கண்ட வாசுதேவர் வியப்படைந்தார்.

வாசுதேவர், பகவான் சைதன்ய மகாபிரபுவின் தாமரை பாதங்களில் விழுந்து, கருணை கடலே ! என்ன காரியம் செய்தீர்கள் ! என் அருகில் வரவே எல்லோரும் பயப்படுவார்கள். மகாலட்சுமி தேவி வாசம் செய்யும் உங்கள் இதயதால், என்னை கட்டி அணைத்த இத்தகைய செயல், பரம புருஷனாகிய உங்களால் தான் செய்ய முடியும். தகுதி உள்ளவரோ, தகுதியற்றவரோ, அவர் யாராக இருந்தாலும், அவரிடம் நீங்கள் கருணை உள்ளவராக இருக்கின்றீர்கள். ஆனால், என் மனம் தடுமாற்றம் அடைகிறது. வெகு காலமாக நான் தீண்டத்தகாதவனாக இருந்ததால், என் மனம் கர்வமற்று, உங்களை அடையும் தகுதி பெற்றது. ஆனால் இப்போது எனக்கு மிக அழகான உடல் கிடைத்திருப்பதால், நான் மிகவும் பயப்படுகிறேன். ஏனெனில், என்னால் பழைய படி தாழ்மையுடனும், அடக்கம் உள்ளவனாகவும், இருக்க முடியுமா ? இந்த நிலையில் எனக்கு தற்பெருமை வந்துவிட்டால், நான் உங்களை இழந்து விடுவேனோ என்று கண்ணீர் மல்க புலம்பினார்.

வாசுதேவ விப்ரரின் இத்தகைய வார்த்தைகளைக் கேட்டதும்மகா பிரபுவின் இதயம் உருகி, கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது.

பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு , " வாசுதேவ விப்ரரே இன்று நீங்கள் என்னை வெற்றி கொண்டவராவீர். உங்களை போன்ற அகந்தையை வென்றவர்களை, காண்பது அரிது என்று கூறினார். இனி உங்கள் கடமை யாதெனில் உத்கலலிலுள்ள (ஒடிசா ) மக்களை, பக்தி மார்கத்திற்கு கொண்டுவந்து அவர்களை பரமபுருஷ பகவானுக்கு நெருக்கமானவர்களாக ஆக்குவீராக. உங்கள் வாழ்க்கையை இனி பக்தி யோகத்திற்கு அர்ப்பணிப்பீராக" என்று சொல்லி, அங்கிருந்து தன் பயணத்தை துவங்கினார்.

ஸ்ரீ சைதன்ய மகாபிரபு வின் வழிநடத்தலின் கீழ், வாசுதேவ விப்ரர் மருத்துவராக பணிபுரிந்து, வியாதியஸ்தர்களுக்கு உதவி செய்வதோடு, ஒடிசா மக்களுக்கு ஹரி நாம சங்கீர்த்தனம், பாகவதம் பிரசாரமும் செய்து, பக்தி மார்கத்தில் தனது வாழ்வை புனிதப்படுத்தி கொண்டார்.

ஹரே கிருஷ்ணா.!

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...