Skip to main content

ஸ்ரீபாத மத்வாசாரியர்


 ஸ்ரீபாத மத்வாசாரியர்

வழங்கியவர்: விக்ரம கோவிந்த தாஸ்


🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


இன்று 26-10-2020 திங்கட்கிழமை ஶ்ரீபாத மத்வாசாரியர் அவதரித்த தினம்


🌼🌼🌼🌼🌼🌼🌼


வைஷ்ணவ ஆச்சாரியர்களில் தலைசிறந்து விளங்கியோரில் ஒருவர் ஸ்ரீபாத மத்வாசாரியர். 13ஆம் நூற்றாண்டைச் சார்ந்த இவர், துவைதம் என்று பிரபலமாக அறியப்படும் தத்துவவாதக் கொள்கையை நிலைநாட்டி பக்தியைப் பரப்பியவர். ஹனுமான், பீமன் ஆகியோரின் வரிசையில் வாயுவின் மூன்றாவது அவதாரமாக இவர் அறியப்படுகிறார்.


குழந்தைப் பருவம்

🌼🌼🌼🌼🌼🌼🌼


நாராயணபட்டர், வேதவதி தம்பதியினர் பகவான் விஷ்ணுவிடம் அர்ப்பணித்த 12 வருட பிரார்த்தனையின் பலனாக, ஸ்ரீ பாத மத்வாசாரியர் கி.பி. 1238ஆம் ஆண்டு விஜயதசமி அன்று உடுப்பிக்கு அருகிலுள்ள பாஜக என்னும் கிராமத்தில் அத்தம்பதியினரின் மகனாக அவதரித்தார். தனது சிறு வயதில் தனது தந்தையின் கடனைத் தீர்ப்பதற்காக, புளியங்கொட்டையை தங்க நாணயங்களாக்கினார். தனது ஐந்தாம் வயதில் தனது வீட்டுக்கு அருகில் பாம்பு உருவில் இருந்த மணிமான் என்ற அசுரனை கால் கட்டை விரலினால் அழித்தார். அதே வயதில் பூணூல் தரித்த அவர் சிறுவயதிலேயே சாஸ்திர அறிவில் ஒப்பில்லாதவராகத் திகழ்ந்தார்.


கல்வி, சந்நியாசம்

🌼🌼🌼🌼🌼🌼🌼


தனது பன்னிரண்டாம் வயதில் அச்சுத பிரகாசர் என்பவரின் குருகுலப் பள்ளியில் இணைந்தார். பூர்ணபிரக்ஞர் என்ற நாமத்துடன் சந்நியாசம் ஸ்வீகரித்தார். சில காலம் பல ஆச்சாரியர்களின் வேதாந்த பாஷ்யத்தை கவனமாகப் படித்தார். அப்போது வேதாந்தத்திற்கான அத்வைத விளக்கத்தின் உபயோகமற்ற தன்மையை நன்கு உணர்ந்த அவருக்கு, தூய உண்மையான விளக்கத்தை வேதாந்தத்திற்கு வழங்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. (பின்னர், அவர் துவைத வாத விளக்கத்தை அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது) சந்நியாசம் எடுத்த 40 நாட்களிலேயே, தர்க்கத்தில் புகழ் பெற்ற வாசுதேவ பண்டிதரை வாதத்தில் வென்றார். அவரின் மேலான அறிவை உணர்ந்த அச்சுத பிரகாசர், மடத்தின் தலைமைப் பொறுப்பை அனந்த தீர்த்தர் என்ற திருநாமத்தோடு ஏற்க அவரைப் பணித்தார்.


யாத்திரைகள்

🌼🌼🌼🌼🌼🌼


அவர் தனது விளக்கங்களைப் பரப்புவதற்காக பாரதம் முழுவதும் யாத்திரை மேற்கொண்டார். உடுப்பியிலிருந்து கன்னியாகுமரி சென்று அங்கிருந்து இராமேஸ்வரம், ஸ்ரீரங்கம் உட்பட பற்பல புண்ணியத் தலங்களுக்குச் சென்றார். அவ்வாறு சென்றபோது தனது விளக்கங்களை ஒரு நூலாக்கி வேதாந்த சூத்திரத்திற்கு ஒரு பாஷ்யம் எழுத உறுதி பூண்டார். அதற்கு வேதாந்த சூத்திரத்தை அருளிய வியாசரிடம் இருந்தே ஆசீர்வாதம் பெற வட இந்திய யாத்திரையைத் தொடங்கினார்.


வியாசதேவர் சாதாரண மக்களுக்குப் புலப்படாத வண்ணம் தனது ஆஸ்ரமமாகிய பத்ரிகாஷ்ரமத்தில் வசித்து வருகிறார். நீண்ட கால நடைப் பயணத்திற்கு பிறகு மத்வாசாரியர் பத்ரிநாத் வந்தடைந்தார். அங்கு ஒரு மண்டலம் (ஏழு வார காலம்) விரதம் மேற்கொண்டு, பக்தியோடு பிரார்த்தித்தார். உள்ளுணர்வினால் உந்தப்பட்டு மேலும் உயரத்தில் இருக்கும் பத்ரிகாஸ்ரமத்திற்குச் சென்று வியாசதேவரை அவர் சந்தித்தார். வியாசரிடம் தன்னுடைய பகவத் கீதையின் வியாக்கியானத்தை காட்டி அங்கீகாரம் பெற்றார். மேலும், வேதாந்த சூத்திரத்திற்கு விளக்கம் எழுத ஆசியும் பெற்றார். வியாசதேவரை நேரடியாக சந்தித்துப் பேசியதால் சாஸ்திரங்களில் பொதிந்து இருக்கும் உண்மையான அர்த்தத்தை மேலும் நன்றாக உணர்ந்து, வேதாந்தத்திற்கு தனது விளக்கத்தை எழுதினார். பின்னர் பத்ரிநாத்திலிருந்து திரும்பி பீகார், வங்காளம், ஒரிசா, ஆந்திரா வழியாக உடுப்பி திரும்பினார்.


உடுப்பி கிருஷ்ணர்

🌼🌼🌼🌼🌼🌼🌼


உடுப்பியில் வசித்தபோது அருகிலுள்ள (மால்பே கடற்கரையில்) சமுத்திரத்தில் ஸ்நானம் செய்யும் பழக்கம் அவருக்கு இருந்தது. ஒருநாள் ஸ்ரீ கிருஷ்ணரை தியானித்தபடி கடற்கரையில் அவர் இருந்தபோது, துவாரகையிலிருந்து வந்த ஒரு கப்பல், மணல் திட்டுகளில் சிக்கிக் கொண்டதைக் கண்டு, அது பாதுகாப்பாக கரை சேருவதற்கு வழிகாட்டினார். கப்பல் தலைவன் அவருக்குப் பரிசு வழங்க முன்வந்த போது, கப்பலில் இருந்த இரு பெரிய கோபிசந்தன (திலகம் அணிவதற்கும் பூஜைகளுக்கும் பக்தர்களால் பயன்படுத்தப்படும் ஒரு வகை மண்) பாறைகளைக் கேட்டுப் பெற்றார். அப்பாறை ஒன்றினுள் இருந்த பலராமரின் விக்ரஹத்தை கடற்கரையின் அருகிலேயே பிரதிஷ்டை செய்தார். (அத்திருக்கோவில் வடபந்தேஸ்வரர் திருக்கோவில் என்று அறியப்படுகிறது.) மற்றொரு பாறையினுள் ஓர் அழகான கிருஷ்ணரின் விக்ரஹம் இருந்தது. கிருஷ்ணரின் கருணையாக அதனை ஏற்று, அழகான பாடல்களில் கிருஷ்ணரைப் புகழ்ந்து பாடினார். அந்த விக்ரஹத்தை உடுப்பியில் பிரதிஷ்டை செய்து, வழிபாட்டு முறையையும் நடத்தை விதிகளையும் உண்டாக்கினார்.


சீடர்கள்

🌼🌼🌼🌼


பின்னர் இரண்டாம் முறையாக வட இந்திய யாத்திரை மேற்கொண்டு பத்ரிகாஷ்ரமத்திற்குச் சென்றார். மேலும், தில்லி, குருக்ஷேத்திரம், காசி, கோவா போன்ற இடங்களுக்கும் சென்ற அவர், அவ்வழிகளில் பலரையும் வாதத்தில் வென்று தனது சிஷ்யர்களாக்கிக் கொண்டார். பற்பல சிறந்த பண்டிதர்களுக்கும் சந்நியாசம் வழங்கினார். தனது கொள்கைகளைப் பிரச்சாரம் செய்ய அவர்களைப் பணித்தார். பத்மநாப தீர்த்தர், நரஹரி தீர்த்தர், மத்வ தீர்த்தர், ஆக்ஷோப்ய தீர்த்தர் போன்றோர் அவர்களில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்கவர்கள்.


நூல்கள்

🌼🌼🌼🌼


ஸ்ரீபாத மத்வாசாரியர் பகவத் கீதை, பாகவதம் மற்றும் பல உபநிஷத்துகளுக்கும் வியாக்கியானம் அளித்துள்ளார். மேலும் நியாய விவரண, கர்மநிர்ணய, கிருஷ்ணாம்ருத மஹார்ணவ போன்ற பல புத்தகங்களை எழுதினார். பற்பல பக்திப் பாடல்களையும் இயற்றினார். இறுதியாக ஐத்ரேய உபநிஷத்துக்கு விளக்கம் எழுதிய பிறகு, மடத்தின் பொறுப்புகளைத் தனது சீடர்களிடம் ஒப்படைத்துவிட்டு, தனது எழுபத்து ஒன்பதாம் வருட முடிவில், கி.பி.1317ஆம் ஆண்டு மார்கழி மாதம் வளர்பிறை நவமியில் பத்ரிகாஸ்ரமத்திற்கு தனது யாத்திரையைத் தனியாகத் தொடங்கினார். அதன் பின்னர் அவர் உடுப்பிக்குத் திரும்பவில்லை. அத்திருநாள், மத்வ நவமியாக இன்றும் பெரும் சிறப்பாக உடுப்பியில் கொண்டாடப்படுகின்றது.


ஸ்ரீபாத மத்வாசாரியரின் உபதேசங்கள்

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


ஹரி என்று அறியப்படும் பகவான் விஷ்ணுவே முழுமுதற் கடவுள்.அவரை சாஸ்திரங்களின் வாயிலாக அறிந்து கொள்ள முடியும்.பௌதீக உலகம் உண்மையானது.ஜீவாத்மாக்கள் பகவான் விஷ்ணுவிலிருந்து வேறுபட்டவர்கள்.ஜீவாத்மாவின் இயற்கை பகவானின் சேவகனாக இருப்பதுவே.முக்தி பெற்ற நிலை, மாயைக்கு உட்பட்ட நிலை ஆகிய இரண்டு நிலைகளிலுமே ஜீவன்களுக்கு மத்தியில் ஏற்றத் தாழ்வுகள் உண்டு.முக்தி என்பது பகவான் விஷ்ணுவின் தாமரைத் திருவடிகளை அடைவதே; அருவப் பிரம்மனில் கலப்பது அல்ல.தூய பக்தித் தொண்டினால் அந்த முக்தி சாத்தியமாகும்.பிரத்யக்ஷம், அனுமானம், சாஸ்திரங்கள் ஆகிய மூன்றும் அறிவைப் பெறுவதற்கான வழிமுறைகள்.


ஸ்ரீத மத்வாசாரியரின் மேற்கூறிய அடிப்படைக் கோட்பாடுகள் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவால் ஏற்கப்பட்டது. இதை பலதேவ வித்யாபூஷனர் தனது ப்ரமேய ரத்னாவளியில் உறுதி செய்கிறார்.




ஸ்ரீபாத மத்வாசாரியர் பற்றிய சில தகவல்கள்

🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


பிறந்த நாள்: புரட்டாசி மாதம் விஜயதசமி; கி.பி.1238, 4339 கலியுகம்


பிறந்த இடம்: உடுப்பியில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள பாஜக க்ஷேத்திரம்


பெற்றோர்: நாராயண பட்டர், வேதவதி


பெற்றோர் இட்ட பெயர்: வாசுதேவர்


சந்நியாச நாமம்: தனது 11 வயதில் பூர்ண பிரக்ஞர் என்ற திருநாமத்துடன் சந்நியாசம் எடுத்தார்


உபதேசித்தது: தத்துவவாதம் (துவைதம்)


ஸ்தாபித்தது: உடுப்பியில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் விக்ரஹத்தை ஸ்தாபித்தார்.


அருளிய பாஷ்யம்: வேதாந்த சூத்திரத்திற்கு பூர்ண பிரக்ஞ பாஷ்யம் என்ற தனது வியாக்கி யானத்தை அளித்தார். மேலும் பகவத் கீதை, உபநிஷத்துகள் போன்றவற்றிற்கு தனது விளக்கத்தை அளித்து, பல பக்திப் பாடல்களையும் இயற்றினார்.


ஸ்ரீபாத மத்வாசாரியரின் அதிசயத்தக்க உடல் வலிமை


🌼🌼🌼🌼🌼🌼🌼


மத்வாசாரியர் இயற்கையிலேயே தலைமைப் பண்புடையவராகவும், புத்தி, நல்லொழுக்கம், ஆன்மீக கலாசாரம் மட்டுமல்லாது உடல் வலிமையும் நன்றாக பெற்றவராக இருந்தார். மல்யுத்தம், நீச்சல், மலையேற்றம் ஆகியவற்றில் கலந்து கொண்டார். பரசுராமரின் வம்சத்தின் வழியே வந்த பிராமண குலத்தில் பிறந்தவர் என்பதால், நல்ல உயரமும் உடல் பலமும் பெற்றவராக இருந்தார்.


அவர் ஒருமுறை யாத்திரை சென்றபோது, அவரது சிஷ்யரான சத்ய தீர்த்தரை பயங்கரமான வங்காளப் புலி ஒன்று தாக்கியபோது, தீரத்தோடு அப்புலியை எதிர்த்த மத்வாசாரியர் அதனை ஓடச் செய்தார்.


மற்றொரு புண்ணிய யாத்திரையின் போது கொள்ளைக்கார கும்பல் ஒன்றினை எதிர்த்து அவர்களையும் ஓடச் செய்தார்.


காதான்சரி என்ற முப்பது பேர் பலம் கொண்ட ஒருவன், ஒரு முறை மத்வாசாரியருக்கு சவால் விட்டபோது, தமது கால் பெருவிரலை தரையில் ஊன்றிய ஆச்சாரியர், “இதை அசைத்தால் போதும்” என்று கூற, காதான்சரி அதைச் செய்ய இயலாமல் தோற்று ஓடினார்.



( "இக் கட்டுரை  பகவத் தரிசனம் என்னும் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது. www.tamilbtg.com" )



 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...