Skip to main content

ஸ்ரீ சாரங்க முராரி தாகூர்


 ஸ்ரீ சாரங்க முராரி தாகூர்


🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅



ஸ்ரீ சாரங்க முராரி தாகூர், மோதத்ருமத்வீப மாம்-காச்சி என்ற இடத்தில் வாழ்ந்து வந்தார். அவர் வழிபட்ட ஸ்ரீ ஸ்ரீ ராதா-கோபிநாத் விக்கிரஹங்கள் இன்றும் அங்கு உள்ளன.ஸ்ரீ சாரங்க முராரி தாகூரின் குரு , ஸ்ரீ சாரங்கரின் கோவில் முற்றத்தில், மிகவும் பழமையான பகுல் மரம் ஒன்று இருந்தது. இம்மரம் தொடர்பான உள்ளூர் புராணக்கதை ஒன்று உண்டு. ஒருநாள் ஸ்ரீ மஹாப்ரபு அங்கு வந்தபோது, ஸ்ரீ சாரங்கரின் கோவில் முற்றத்தில் உள்ள பகுல் மரம் பட்டுபோய், அழிவதைப் பார்த்தார். மஹாப்ரபு சாரங்கரைப் பார்த்து, 'இம்மரம் பட்டுபோய்யுள்ளது; நீர் என்ன செய்யப்போகிறீர்கள்' எனக் கேட்டார்.

'இம்மரத்தைக் காப்பாற்ற, உங்கள் கருணையைத் தவிர எனக்கு வேறு எந்த நம்பிக்கையும் இல்லை' என சாரங்க தாகூர் பதில் கூறினார்.

உடனே மஹாப்ரபு, பட்டுபோன அம்மரத்தைத் தழுவிக்கொண்டார். மரம் இன்றளவும் பெரிதாகவும், உறுதியாகவும் உள்ளது.

சாரங்க தாகூரா சீடர்களை ஏற்பதில்லை என உறுதியாக இருந்தார். ஆனால் பகவான் ஶ்ரீ சைதன்ய மஹாப்ரபு, அவரிடம் சீடர்களை ஏற்க வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தினார்.. இறுதியில், சாரங்க தாகூர் சீடர்களை ஏற்பதாக, மனமில்லாமல் ஒப்புக்கொண்டார். அடுத்த நாள் காலை, தான் காணும் முதல் நபரை தெய்வீகமந்திரம் மூலம் தீட்சை தந்து சீடராக்கி கொள்வதாக கூறினர்.

அடுத்த நாள் அதிகாலை, கங்கையில் நீராட சாரங்க தாகூர் கிளம்பினார். கங்கையில் நுழைந்ததும், ஒரு இறந்த சிறுவனின் உடல், தற்செயலாக அவர் காலில் பட்டது. அந்த உடலைத் தூக்கி, 'நீ யார்? எழுந்திரு', என்றார், சாரங்க தாகூர். இதைப் பின்புறமிருந்து பார்த்துக்கொண்டிருந்த மஹாப்ரபு, 'சாரங்கா! மந்திரத்தை அவர் காதில் கூறு' என்றார். சாரங்க தாகூர் மந்திரத்தை, இறந்த சிறுவனின் காதில் கூறியதும், அச்சிறுவன் உணர்வு பெற்றான். 'என் பெயர் முராரி; நான் உங்கள் சீடன்; உங்கள் கருணையை என்மீது பொழியுங்கள்' என அச்சிறுவன் கூறினான்.

அச்சிறுவனுக்குப் பூணல் அணிவிக்கும் நாளன்று, பாம்பு கடித்து இறந்தான். அக்காலத்தில் குல வழக்கப்படி, ஆண் குழந்தைகளின் இறந்த உடலை எரிக்காமல், வாழைமரப் பட்டைகளில் வைத்து, உடலை கங்கையில் மிதக்க விடுவார்கள். இதே போல் முராரியின் அவனது உறவினர்கள் உடலை வாழைமரப் பட்டைகளில் வைத்து, கங்கையில் மிதக்க விடுட்டனர். இறந்த தங்கள் மகன் சாதுவின் கருணையினால் உயிர் பிழைத்ததை கேட்டு, அவனை திரும்ப பெற பெற்றோர் அங்கு வந்தனர். ஆனால் சிறுவன் முராரியோ, பெற்றோரிடம் செல்ல மறுத்து. 'எனக்கு உயிர் கொடுத்தவருக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்; நான் இனிமேல் அவருக்குச் சேவகம் செய்வேன்' என்றான். சாரங்க தாக்கூரால் தீட்சை பெற்றமையால் அவனை சாரங்க முராரி என்றே அழைத்தனர்.

ஸ்ரீ சாரங்க முராரி தாகூர் பற்றி விருந்தாவன தாசதாகுர் கூறுகிறார்: முராரி தாகூர் பிரச்சாரம் செய்ய காட்டு வழியாக போகும் போது, புலிகளைப் பின்தொடர்ந்து காட்டில் நுழைவார்; சில நேரத்தில் அவர், புலியின் மேல் குதிப்பார்; அவரின் ஆற்றலால், புலி அமைதியாக இருக்கும். சில நேரத்தில், அவர் ஒரு பாம்பைத் தன் மடியில் வைத்து விளையாடுவர். 'அவதூத மகாசயா' என்னும் நித்யானந்த பிரபுவின் கருணையால், புலிகளோடும், பாம்புகளோடும் அவரால் இவ்வாறு விளையாட முடிந்தது. ஸ்ரீ நித்யானந்த ராயர் தன் உதவியாளர்களிடம் அன்பு கொண்டவர். அவரின் சிறு கண் அசைவினால், அவர்கள், பிரம்மாவிற்கும் கிட்டாத இன்பம் அனுபவித்தனர்.

ஸ்ரீ சாரங்க முராரி தாகூர் எப்போதும் தன்னை மறந்த நிலையிலும், தன் உள் ஆனந்தத்தில் அமிழ்ந்த நிலையிலும் இருப்பார். சில நேரங்களில், இரண்டு மூன்று நாட்கள் கூட, எவ்வித உடல் வருத்தமும் இன்றி, தன்னுணர்விலேயே இருப்பார். உயிரற்றவர்போல் அவர் காணப்படுவர்; அதனால் அவரின் செயல்கள் உணரமுடியாதவையாக இருந்தன. அது அவரின் மாபெரும் சக்தியின் வலிமை. அவரின் தெய்வீக உணர்வுகளின் இடைவிடா மாற்றங்களை நான் எவ்வளவு வர்ணிப்பேன்? [சைதன்ய பாகவதம்--அந்த்ய லீலை--5:426-434]. அவரின் குடும்ப வழித்தோன்றல்கள், பர்தமன் மாவட்டத்திலுள்ள ஷர்கம் நகரிலே வசிக்கின்றனர்.

வ்ரஜ லீலையில், ஸ்ரீ சாரங்க முராரி தாகூரா, நந்தி-முகியாக இருந்தார் என கவுர்-கணோதேச தாகூர் கூறுகிறார் [செய்யுள் 172]

"வ்ரஜே நந்தமுகி யாசித்
சாத்திய சாரங்க தாகூரா
ப்ரஹ்லாதோ மன்யதே கைஷ்சின்
மத்-பித்ரா ந ஸ மன்யதே"

வ்ரஜ ப்ரஹ்மணி நந்திமுகி தேவி, ஸ்ரீ சாரங்க முராரி தாகூராவாகத் தோன்றினார். ஸ்ரீ சாரங்க முராரி தாகூரா, ப்ரஹ்லாதரின் அவதாரம் எனச் சிலர் கூறுகின்றனர். என் தந்தை [சிவானந்த சேனா --கவிகர்ணபுராவின் தந்தை] இக்கருத்தை ஏற்கவில்லை.

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...