Skip to main content

பாம்பின் பிடியிலிருந்து தனது தந்தை நந்த மகாராஜரை பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் விடுவித்தல்


பாம்பின் பிடியிலிருந்து தனது தந்தை நந்த மகாராஜரை பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் விடுவித்தல்

🍁🍁🍁🍁🍁🍁🍁


ஒரு சமயம் நந்த மகாராஜாவும் பிற ஆயர்களும் சிவபெருமானை வழிபடுவதற்காகத் தமது குடும்பத்தினருடன் மாட்டு வண்டிகளில் பயணம் செய்து அம்பிகா வனம் என்னும் காட்டிற்குச் சென்றனர். அவர்கள் அனைவரும் சரஸ்வதி நதியில் நீராடி பகவான் விஷ்ணுவின் ஒரு வடிவமான பகவான் சதாசிவனை வழிபட்ட பின்னர் அன்றைய இரவுப் பொழுதை அக்காட்டிலேயே கழிக்க முடிவு செய்தனர். அவர்கள் அனைவரும் துயில் கொண்டிருந்த பொழுது மிகுந்த பசியுடைய ஒரு பாம்பு அங்கு வந்து நந்த மகாராஜாவை விழுங்கத் தொடங்கியது. ஆபத்தில் சிக்கிக் கொண்ட நந்தமகாராஜா “ஓ, கிருஷ்ணர்! என் மைந்தனே, சரணடைந்த இந்த ஆத்மாவைக் காப்பாயாக” என்று கூக்குரலிட்டுக் கதறினார். நந்தமகாராஜாவின் அலறல் சத்தம் கேட்டு விழித்தெழுந்த ஆயர்கள் அங்கு கிடந்த மரக் கொம்புகளைக் கொண்டு அப்பாம்பை அடிக்கத் தொடங்கினர். ஆனால் அப்பாம்போ நந்த மகாராஜாவை விடுவதாக இல்லை. பின்னர் பகவான் கிருஷ்ணர் அந்த இடத்திற்கு விரைந்து வந்து அப்பாம்பினைத் தனது தாமரைத் திருவடிகளினால் தீண்டினார். உடனே அங்கிருந்த பாம்பு மறைந்து அந்த இடத்தில் ஒரு தேவகுமாரன் தோன்றினான். 


(பகவான் கிருஷ்ணர் கூறினார்:) அன்பரே, தாங்கள் மிக்க எழிலுடன் மிகவும் அற்புதமாகத் தோன்றுகின்றீர். தாங்கள் யார்? யாருடைய பலவந்தத்தினால் நீர் இப்பாம்பு வடிவம் பெற்றீர்?


பாம்பு பதில் கூறியது: நானே நன்கறியப்பட்ட சுதர்ஸனன் என்னும் பெயருடைய வித்யாதரன் ஆவேன். நான் வளமிக்கவனாகவும், எழில் மிக்கவனாகவும் இருந்தேன். நான் எல்லாத் திசைகளிலும், எனது விருப்பம் போல் என்னுடைய விமானத்தில் பறந்த திரிவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். ஒரு முறை ஆங்கிரஸ முனிவரின் சீடபரம் பரையில் வந்த சில முனிவர்களைப் பார்த்தேன். எனது அழகினால் கர்வம் கொண்டு நான் அவர்களை ஏளனம் செய்தேன். நான் செய்த பாவத்தினால் அவர்கள் இந்த இழிவடிவினைப் பெறுமாறு செய்தனர். உண்மையில் எனது நன்மைக்காகவே என்னை அக்கருணை மிகு முனிவர்கள் சபித்துள்ளனர். ஏனென்றால் இப்போது அனைத்து உலகங்களின் தலைவராகிய பரமகுருவின் பாதம் என் மீது பட்டு, அதன் காரணமாக எனது அனைத்துப் பாவங்களும் நீங்கிவிட்டன. எம்பெருமானே, பௌதீக உலகிற்கு அஞ்சி உம்மைச் சரண் புகுந்தவர்களின் அனைத்து பயங்களையும் நீர் அழிக்கின்றீர். உமது பாதம் தொட்டதால் நான் இப்போது முனிவர்களின் சாபத்திலிருந்து விமோசனம் பெற்றுள்ளேன். ஒ, துன்பங்களை அழிப்பவரே, எனது உலகிற்கு என்னைத் திரும்பிச் செல்ல அருள்கூர்ந்து அனுமதிப்பீராக. ஓ, மகாயோகியே, மகாபுருஷரே, பக்தர்களின் தலைவரே, நான் உம்மைச் சரண் புகுந்தேன். உமது விருப்பம் போல் எனக்குக் கட்டைளையிடுவீராக. ஓ, பிரபஞ்சத்தை ஆள்பவர்களின் பகவானான பரமபுருஷ பகவானே.ஓ, குற்றமற்றவரே, உமது தரிசனத்தால் அந்தணர்களின் தண்டனையிலிருந்து உடனே நான் விடுதலை பெற்றுவிட்டேன். உமது பெயரானது அதனை ஓதுகின்ற வரையும், அவ்வோதுதலைக் கேட்கின்றவர்களையும் தூய்மை செய்கின்றது. அவ்வாறிருக்க உமது தாமரைத் திருவடிகளின் ஸ்பரிசம் எத்தனை அதிகம் நன்மை செய்வதாகும்?

பகவான் கிருஷ்ணரிடமிருந்து இவ்வாறு அனுமதி பெற்ற தேவனான சுதர்ஸனன் அவரைச் சுற்றி வலம் வந்து, வீழ்ந்து வணங்கித் தனது தேவலோகத்திற்குத் திரும்பிச் சென்றான். நந்தமகாராஜாவும் கூட அவரது துன்பத்திலிருந்து இவ்வாறு மீட்கப்பட்டார்.


ஸ்ரீமத் பாகவதம் 10.34


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண🙏


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.





Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...