Skip to main content

Posts

Showing posts from 2021

புத்தாண்டு கொண்டாட்டமும் அறியாமையும்

  ஒவ்வொரு புத்தாண்டும் (ஆங்கில புத்தாண்டாகட்டும், பிராந்திய புத்தாண்டாகட்டும்) மக்கள் மன மகிழ்வுக்குக் காரணமாக அமைகின்றது. நவீன காலத்தில் ஆங்கில புத்தாண்டின்போது. டிசம்பர் 31ஆம் நாள் இரவு, கடிகாரம் பன்னிரண்டு மணியைத் தொடுகின்ற தருணத்தில், “கொண்டாட்டங்கள்” என்ற பெயரில் பலவிதமான அமர்க்களங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இதுதானா புத்தாண்டு? நன்றாக குடித்துவிட்டு பைக்குகளில் தோழிகளை அழைத்து செல்லும் இளைஞர்கள் ஒவ்வொரு வருடமும் அதிகரித்த வண்ணம் உள்ளனர்; அவர்களை ஊக்குவிக்கும் கிளப்புகளும் அந்த நாளில் நல்ல வருமானத்தை ஈட்டுகின்றனர். வேறு சிலரோ, மற்றவர்களுடன் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்வர், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நள்ளிரவு வரை கண்டு களிப்பர், பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியினை வெளிப்படுத்துவர்; கிருஸ்துவ தேவாலயங்களில் விசேஷ பிரார்த்தனைகளும் நிகழ்கின்றன. இதர சிலரோ, விடிந்த பின் எங்கெல்லாம், எந்தெந்த வகையில் புத்தாண்டு நிகழ்வுகள் நடந்தன என்று தெரிந்து கொள்ள செய்தித்தாள்களையும் தொலைக் காட்சியையும் காண்பர். சிலர் காலை வேளையில் கோயிலுக்குச் சென்று, இறைவனை வழிபட்டு, இந்த புத்தாண்டில் தம் வாழ்வு ...

சுதாம பிராமணர்

  தானம் பெற அரண்மனைக்கு வந்த தமது நண்பர் சுதாம பிராமணரை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வழிபட்டதையும் , தங்கள் ஆன்மீக குருவான சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் வாழ்ந்தபொழுது தாங்கள் லீலைகளைப் பகிர்ந்து கொண்டதைப் பற்றி அவர்கள் உரையாடியதையும் இந்த அத்தியாயம் விவரிக்கிறது . பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நெருங்கிய நண்பரான சுதாம பிராமணர் பௌதிக ஆசைகளிலிருந்து முற்றிலும் விடுபட்டிருந்தார் . தானாக வருவதைக் கொண்டு அவர் தன்னையும் , தன் மனைவியையும் பராமரித்து வந்ததால் அவர்கள் ஏழ்மையில் வாடினர் . ஒருநாள் , தன் கணவருக்கு அளிப்பதற்கு எந்த உணவும் இல்லாததைக் கண்ட சுதாமரின் மனைவி , துவாரகைக்குச் சென்று நண்பரான ஸ்ரீ கிருஷ்ணரிடம் யாசித்து வரும்படி தன் கணவரிடம் வேண்டினான் . சுதாமர் தயஙகினார் . ஆனால் அவள் வற்புறுத்தியதால் அவர் செல்ல ஒப்புக் கொண்டார் . பகவானைத் தரிசிக்கும் வாய்ப்பை நழுவவிடக் கூடாது என்று அவர் எண்ணினார் . அவரது மனைவி ஸ்ரீ கிருஷ்ணருக்கு ’ கொடுப்பதற்காக சிறது அவலை யாசித்துப் பெற்று வந்தாள் . அதை எடுத்துக்கொண்டு சுதாம...