Skip to main content

சுதாம பிராமணர்

 


தானம் பெற அரண்மனைக்கு வந்த தமது நண்பர் சுதாம பிராமணரை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வழிபட்டதையும், தங்கள் ஆன்மீக குருவான சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் வாழ்ந்தபொழுது தாங்கள் லீலைகளைப் பகிர்ந்து கொண்டதைப் பற்றி அவர்கள் உரையாடியதையும் இந்த அத்தியாயம் விவரிக்கிறது.


பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் நெருங்கிய நண்பரான சுதாம பிராமணர் பௌதிக ஆசைகளிலிருந்து முற்றிலும் விடுபட்டிருந்தார். தானாக வருவதைக் கொண்டு அவர் தன்னையும், தன் மனைவியையும் பராமரித்து வந்ததால் அவர்கள் ஏழ்மையில் வாடினர். ஒருநாள், தன் கணவருக்கு அளிப்பதற்கு எந்த உணவும் இல்லாததைக் கண்ட சுதாமரின் மனைவி, துவாரகைக்குச் சென்று நண்பரான ஸ்ரீ கிருஷ்ணரிடம் யாசித்து வரும்படி தன் கணவரிடம் வேண்டினான். சுதாமர் தயஙகினார். ஆனால் அவள் வற்புறுத்தியதால் அவர் செல்ல ஒப்புக் கொண்டார். பகவானைத் தரிசிக்கும் வாய்ப்பை நழுவவிடக் கூடாது என்று அவர் எண்ணினார். அவரது மனைவி ஸ்ரீ கிருஷ்ணருக்குகொடுப்பதற்காக சிறது அவலை யாசித்துப் பெற்று வந்தாள். அதை எடுத்துக்கொண்டு சுதாமர் துவாரகைக்குப் புறப்பட்டார்.


சுதாமர், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் முக்கிய மனைவியான ருக்மிணி தேவியின் அரண்மனையை நெருங்குவதை பகவான் சிறிது தூரத்திலிருந்து கண்டார். உடனே அவர் ருக்மிணியின் கட்டிலிலிருந்து எழுந்து சென்று தன் நண்பனைப் பெரு மகிழ்ச்சியுடன் கட்டித் தழுவிக் கொண்டார். பிறகு சுதாமரை அவர் கட்டிலில் அமரச் செய்து, தமது கைகளால் அவரது பாதங்களைக் கழுவி, அத்தீர்த்தத்தை தமது தலை மேல் தெளித்துக்கொண்டார். பிறகு அவர் பல்வேறு பரிசுகளை சுதாமருக்கு வழங்கி, தூபம், தீபம் முதலியவைகளால் அவரைப் பூஜித்தார். அப்பொழுது கந்தலாடையை அணிந்திருந்த அந்த பிராமணருக்கு ருக்மிணி வெண்சாமரத்தால் காற்று விசிறினாள். இவையெல்லாம் அரண்மனைவாசிகளுக்கு ஆச்சரியமூட்டின.


பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பிறகு தமது நண்பரின் கையைப் பிடித்துக் கொண்டு, நீண்ட நாட்களுக்கு முன் தங்களுடைய குருவின் ஆசிரமத்தில் தாங்களிருவரும் இணைந்து செய்த விஷயங்களைப் பற்றி பேசினர். கிருஷ்ணர், மனித சமூகத்திற்கு ஒருதாரணத்தை அமைப்பதற்காகவே கல்வி கற்கும் லீலையில் ஈடுபடுகிறார் என்று சுதாமர் சுட்டிக் காட்டினார்.

 

தமது நண்பர் சுதாமருடனான அன்பான உரையாடலின் போது, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பின்வருமாறு கேட்டார்; “எனது பிரியமுள்ள பிராமணரே, எனக்காக வீட்டிலிருந்து ஏதேனும் காணிக்கைப் பொருள் கொண்டு வந்தீரா? என் அன்பு பக்தனிடமிருந்து பெறும் மிகச்சிறிய காணிக்கையைக்கூட, நான் மிகவும் பெரிதாக மதிக்கிறேன்.” ஆனால் அந்த ஏழை பிராமணர், தான் கொண்டுவந்த அற்ப காணிக்கையான அந்த அவலைக் கிருஷ்ணரிடம் கொடுக்க வெட்கப்பட்டார். ஆயினும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எல்லோருடைய இதயங்களிலும் பரமாத்மாவாக வீற்றிருக்கிறார் என்பதால், சுதாமர் தம்மைக் காண வந்த நோக்கத்தை அறிவார். எனவே சுதாமர் ஒளித்து வைத்திருந்த அவல் முடியைத் தானே எடுத்துக் கொண்டபின், அதிலிருந்து ஒரு பிடி அவலை எடுத்துப் பெருமகிழ்ச்சியுடன் உண்டார். இரண்டாவது பிடி அவலை உண்ணத் தயாராக இருந்த அவரை ருக்மிணிதேவி தடுத்துவிட்டாள்.


தான் பரமபதம் அடைந்து விட்டதுபோல் உணர்ந்த சுதாமர், அன்றிரவை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அரண்மனையில் இன்பமாகக் கழித்தார். மறுநாள் காலையில் அவர் தன் வீட்டிற்க்குப் புறப்பட்டார். நெடுஞ்சாலையைக் கடந்து சென்ற அவர், ஸ்ரீ கிருஷ்ணரால் அவ்வாறு கௌரவிக்கப்படுவதற்குத் தான் எவ்வளவு பாக்கியசாலியாக இருக்க வேண்டும் என்று எண்ணினார். சுதாமர் இத்தகைய சிந்தனையில் ஆழ்ந்தவராய் முன்பு தன் குடிசை இருந்த இடத்திற்கு வந்தார். அந்த இடத்தைப் பார்த்து பெரும் ஆச்சரியத்திற்கு உள்ளானார். அங்கு உடைந்து போன தனது எளிய குடிசைக்குப் பதிலாக, வரிசை வரிசையாக ஐசுவரியம் மிக்க அரண்மனைகள் இருப்பதைக் கண்டார். ஆச்சரியத்தில் ஸ்தம்பித்து நின்ற அவரை வரவேற்பதற்கு, அழகிய ஆண்களும் பெண்களும் அடங்கிய ஒரு வாத்தியக் குழு அவரை நோக்கி வந்தது. மேலுலக ஆபரணங்களால் அற்புதமாக அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த பிராமணரின் மனைவி, அரண்மனையிலிருந்து வெளியே வந்து, மிகுந்த அன்புடனும், பயபக்தியுடனும அவரை வரவேற்றாள். அற்புதமான இந்த மாற்றம் பரமபுருஷர் தன்னிடம் கொண்டுள்ள கருணையால் ஏற்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணியபடி சுதாமர்தன் மனைவியுடன் தன் அரண்மனைக்குள் பிரவேசித்தார்.


அன்று முதல் சுதாமர் ஏராளமான செல்வத்தின் மத்தியில் வாழ்ந்து வந்த போதிலும், அவர் துறவு மனப்பான்மையை விடாது பாதுகாத்து வந்தார். எப்பொழுதும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பெருமைகளைப் பாடினார். மிகக் குறுகிய காலத்திலேயே அவர் தேகப் பற்றுகளையெல்லாம் களைந்து பரமபதம் அடைந்தார்.


(ஸ்ரீமத்-பாகவதம் காண்டம் 10 / அத்தியாயம் 80-81)


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.




Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...