Skip to main content

மகிழ்ச்சி


 மகிழ்ச்சி


🍁🍁🍁🍁🍁🍁🍁


முழுமுதற் கடவுள் புருஷோத்தமர் அதாவது எல்லா உயிர்களிலும் மிகச் சிறந்தவர் என்று அறியப்படுகிறார். எல்லா உயிர்களைப் போலவே இவரும் இருப்பார். எனினும் இவரே அவைகளில் எல்லாம் மேம்பட்டவராகவும் தலைவராகவும் விளங்குகிறார். இவரே நித்தியமானவற்றுள் எல்லாம் உயர்ந்தவராகவும், உயிர்களுக்கெல்லாம் சிறந்தவராகவும், மற்றும் முழுதுமானப் பூரணர் ஆகவும் விளங்குகின்றார். மற்ற உயிர்களின் செயல்களில் குறுக்கிட்டு இவர் அடைகின்ற பலன் ஏதும் இல்லை எனினும் அவர் நெறிமுறைப்படுத்திக் காக்கின்றவர். ஆதலினால் அவைகளை உயர்நிலைக்கு ஏற்றி அவை மகிழ்ச்சியுறமாறுச் செய்யும் உரிமை அவருக்கு இருக்கிறது. ஒரு தந்தை கூட தன் மக்கள் எல்லோரும் தன் விருப்பத்திற்கேற்றவாறு நடந்து மகிழ்ச்சியடைவதையே விரும்புகிறான். அது போல் கடவுள் அல்லது முழுமுதற் கடவுள் அல்லது கிருஷ்ணர் உயிர்கள் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனவா என்று பார்க்கும் உரிமை படைத்தவராக இருக்கின்றார். இப்பௌதீக உலகில் மகிழ்ச்சியுடனிருப்பது நடவாத காரியம். தந்தையும் தனயர்களும் நித்தியமானவர்கள், ஆனால் ஓர் உயிர் அறிவு, ஆனந்தம் என்னும் நித்திய வாழ்வு நிலைக்கு உயராவிட்டால் அங்கு மகிழ்ச்சி என்ற கேள்விக்கே இடமில்லை. உயிர்களில் சிறந்தவராக புருஷோத்தமர் விளங்கினாலும் இச்சாதாரணமான உயிர்களினிடத்திலிருந்து அவர் அடைகின்ற பலன்கள் ஏதுமில்லை. ஆனாலும் அவ்வுயிர்களின் பாதை சரியானதா அல்லது தவறானதா என்று பிரித்துப் பார்க்கின்ற உரிமை அவருக்கு இருக்கின்றது. இதில் சரியான பாதை என்பது நாம் முன்பே விவாதித்த (ஸ்வநுஷ்டிதஸ்ய தர்மஸ்ய ஸம்ஸித்திர் ஹரிதோஷணம்) முழுமுதற் கடவுளைத் திருப்திப்படுத்துவது ஆகும். உயிர்கள் பல்வேறு விதமான கடமைகளில் பூட்டப்பட்டிருந்தாலும் ஒருவன் தன் கடமையில் நிறைவை விரும்புவானேயானால் அவன் முழுமுதற் கடவுளைத் திருப்திப்படுத்தியே ஆக வேண்டும். இவ்வாறு அவருக்கு மகிழ்ச்சியளிப்பவன் வாழ்க்கையில் மேல் நிலைக்கும் மகிழ்ச்சியளிக்காதவன் கீழ் நிலைக்கும் தள்ளப்படுகின்றார்கள்.


(ஶ்ரீமத் பாகவதம் 4.21.27 / பொருளுரை)


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.




Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...