Skip to main content

பக்தித் தொண்டில் உண்டாகும் பரமானந்தம்


 பக்தித் தொண்டில் உண்டாகும் பரமானந்தம் 


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁



பக்தித் தொண்டில் உண்டாகும் பரமானந்தம் இரு வகையாக பிரிக்கப்படுகிறது. அவை நேர்முகப் பக்தி தொண்டு மற்றும் மறைமுக பக்தி தொண்டாகும். நேர்முக பக்தி தொண்டு ஐந்து வகையானப் பரமபாவஙகள் அல்லது ரஸங்களாகப் பிரிக்கப்படுகின்றன. அதேபோல மறைமுக பக்திதொண்டு,  ஏழு வகையானப் பரம பாவங்களாகப் பிரிக்கப் படுகின்றன. 


நேர்முகப் பக்தி தொண்டுகள் பின்வருமாறு :  சாந்தம் , தாஸ்யம் , சக்யம் , வாத்ஸல்யம் , சிருங்காரம் என்பவையாகும்.


மறைமுக பக்தி தொண்டு ஹாஸ்யம் , தயா, ரௌத்ரம், வீரம், பயானகம் (அச்சம்) , அற்புதம் (ஆச்சரியம்) பிபத்ஸம் (அதிர்ச்சியடைதல் ) என்று ஏழு வகையாகப் பிரிக்கப்படுகின்றன. ஆதலினால் பக்தி தொண்டு இவ்வாறு பன்னிரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன.

 

தாங்கிக் கொள்ளுதல்,  வெளிப்படுதல்,  விரிவடைதல், பிரதிபலித்தல், துக்கித்தல்  என்னும் ஐந்தும் மெய்மறந்த காதலில் தெளிவாகப் புலப்படும் அடையாளங்களாகும். ஆகையினால் பக்தித் தொண்டின் தகுதியானது இந்த ஐந்து அடையாளங்களின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. 


🌱) சாந்த பாவ பக்தித் தொண்டில் தாங்கிக் கொள்ளுதல் இருக்கிறது.


🌱)  வீர பாவ பக்தித் தொண்டில் விரிவடைதல் இருக்கிறது.


🌱) தயாபாவ பக்தித் தொண்டில் பிரதிபலித்தல் இருக்கிறது.


🌱ரௌத்ரபாவ பக்தித் தொண்டில் துக்கம் போன்றவையும் இருக்கிறது 



அனுபவம் இல்லாத ஒரு மாணவனுக்குப் பக்தித் தொண்டில் காணப்படும் இரங்கத்தக்க நிலை துன்பம் தர தக்கதாக தோன்றலாம். ஆனால் இந்த இரங்கதக்க நிலையில் ஒரு பக்தனிடம் தோன்றும் உணர்வுகள் உயர்ந்த பக்தர்களால் மேன்மை மிக்கவையாகக் கருதப்படுகிறது. சான்றாக இராமாயணக் கதை சில சமயம் இரங்கத்தக்கதாகவும், மனதிற்குத் துயரமளிப்பதாகவும், கருதப்படுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல. இராமாயணம் எவ்வாறு பகவான் ராமச்சந்திர மூர்த்தி அவருக்குப் பட்டாபிஷேகத்திற்கு முந்தினநாள் அவரது தந்தையால் காட்டுக்கு அனுப்பப் பட்டாரென்றும், ராமரைப் பிரிந்து அவரது தந்தை மரணமடைந்ததையும், காட்டில் சீதை இராவணனால் சிறைப்படுத்தப்பட்டதையும், அதனால் நடந்த பெரும் யுத்தத்தையும், சீதை இராவணனிடமிருந்து இறுதியில் சிறைமீட்க்கப்பட்டதையும், இராவணனும் அவனது அரசும் அழிந்ததையும், சீதையை ராமர் தீக்குளிக்கச் செய்ததையும், சில நாட்கள் கழித்து அவள் மீண்டும் ராமரால் காட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டதையும் விவரிக்கிறது. இராமாயணம் கூறும் இவை எல்லாம் மிகவும் இரங்கதக்கவையாகவும், படிப்பவருக்குத் துன்பந்தரத்தக்கவையாகவும் தோன்றும் .ஆனால் இவையெல்லாம் உண்மையன்று. இல்லையேல் பகவான் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியின்  மிகச் சிறந்த பக்தரான ஹனுமான் ஏன் இராமாயணத்தைத் தினசரி ஓத வேண்டும்? உண்மை என்னவென்றால் மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பக்தி தொண்டின் பன்னிரண்டு பரம பாவங்களில் எல்லாமே பரமானந்தம் தருபவையாகும்.


பக்தி ரஸாம்ருத சிந்து / அத்தியாயம் 34


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.




Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...