Skip to main content

துளசி தீர்த்தம் மற்றும் கார்த்திகை மாத விரதத்தின் மகிமை


 துளசி தீர்த்தம் மற்றும் கார்த்திகை மாத விரதத்தின் மகிமை


ஆதாரம் - பத்ம புராணம்


ஆதாரம் - பத்ம புராணம் / உத்தர காண்டம் / அத்தியாயம் 6


வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


    முன்னொரு காலத்தில் "கர்மவீரபும்" என்ற ஊரில் தர்மதத்தன் என்ற பெயருடைய ஒரு பிராமணன் வசித்தான். அவன் சதா காலமும் பகவான் விஷ்ணுவை ஆராதித்து வந்ததோடு பகவானுக்குப் பிரியமான விரதங்களையும் நியமம் தவறாமல் அனுசரித்து வந்தான், துவதாச அட்சர மந்திரத்தையும் "ஓம் நமோ பகவதே வாசுதேவாய என்ற மந்திரத்தையும் இடையறாமல் ஜெபித்துவந்தான். அதிதிகளை உபகரிப்பதிலும் சிறந்து விளங்கினான்.


    கார்த்திகை மாதத்தில் ஒரு நாள் இரவு பகவான் ஹரியை தியானித்தபடி விழித்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தால் கோவிலை நோக்கிச் சென்று கொண்டிருக்கையில் பயங்கரமாக அலறிக்கொண்டு வந்த ராட்சசியைக் கண்டான். ரத்தத்தைப் போல் சிவந்த கண்களும் அகன்ற தாடையில் வெளிப்பட்டுக் காணப்பட்ட கோரப் பற்களுமாக அவள் மிகவும் பயங்கரமாகக் காட்சியளித்தாள் உடம்பில் ஆடையில்லாமலும், பிணவாடைவீசக்கூடிய நீண்ட கரங்களை அசைத்தபடியாகவும், பயங்கரமான அலறலோடு அவள் வந்துகொண்டிருந்தாள். அந்த ராட்சசியைப் பார்த்தவுடன் தர்மதத்தன் பயந்து நடுங்கிப்போய் விட்டான். தன் கையிலிருந்த பூஜைக்குரிய பொருளால் அவளை நோக்கி வேகமாக அடித்தான். பகவானுடைய நாமம் ஜெபிக்கப்பட்ட துளசி தீர்த்தம் அந்த ராட்சசியின் மேல் விழுந்துவுடன் அவள் அங்கேயே மடிந்து விழுந்துவிட்டாள். உடனே அவளுடைய பாவங்கள் நீங்கி விட்டதால் பூர்வ ஜென்ம ஞாபகத்துடன் கூடிய பிராமணப் பெண்ணாக உருமாறி தர்மதத்தன் முன் விழுந்து வணங்கினாள். "பிராமண சிரேஷ்டரே, தங்கள் கருணையால் நான் ராட்சச ஜென்மம் நீங்கிப் புனர் வாழ்வு பெற்றேன். நான் நற்கதியடைய என்ன காரியம் செய்ய வேண்டும். தயவு செய்து கூறுவீராக" என்று கேட்டாள்


        தாமதத்தன் ராட்சசியின் உருவம் மறைந்து போய் விட்டதையும் தன் முன்னால் ஒரு பெண் உருவமும் விழுந்து வணங்குவதையும் கண்டு மிகவும் ஆச்சரியமடைந்தவனாக, "பெண்ணே, நீ யார் எங்கிருந்து வருகிறாய்? ராட்சஸ் ஜென்மம் எடுக்கத்தக்க கொடிய பாவம் என்ன செய்தாய் எதனால் உனக்கு இந்தக் கொடுமை நிலைமை ஏற்பட்டது? இந்த விஷயங்களைச் சொல்வாயாக என்று கேட்டான்.


        அந்த பெண் கூறினாள். "பிராமணரே, என் பெயர் கலகராணி. நான் ஒரு பிராமணப்பெண் சௌராஷ்டிர நகரில் பிட்சு என்ற பிராமணனுடைய மனைவி நான். என் கணவரை மதியாமல் அலட்சியமாக நடந்து கொண்டேன் கொடுமைகளைச் செயதேன் அவருக்குப் பல அவர் செய்ய வேண்டிய சுபகாரியங்களை எதிர்த்தேன். அவர் விரும்பிய உணவை சமைத்துப் போடமாட்டேன். சதா காலமும் அவரோடு சண்டை பிடிப்பதிலேயே விருப்பமுடையவளாகவும் இருந்தேன். அது ஒன்றுதான் எனக்குப் பிடித்த காரியமாக இருந்தது


        என் கணவருக்கு என்னைக் கண்டாலே பயம் அதனால் என்னை விலக்கி விட்டு வேறொரு பெண்ணை மணந்து கொள்ள விரும்பினார் அது தெரிந்தவுடன் எனக்கு வந்த கோபத்தில் விஷத்தை உண்டு உயிரை விட்டுவிட்டேன். எமதூதர்கள் என்னை பிடித்துக் கொண்டு போய் எமதர்மராஜனிடம் நிறுத்தினார்கள். அவர் சித்திரகுப்தனைப் பார்த்து, "இந்தப் பெண் செய்த புண்ணிய பாவங்களை கூறுவாயாக என்று கட்டளையிட்டார்.


    சிதரகுப்தன் ஏட்டை புரட்டி பார்த்துவிட்டு, "இவள் செய்த புண்ணியம் எதுவுமேயில்லை. செய்த பாவங்கள் அநேகம் கணவனுக்குச் சோறு போடாமல் தான் விரும்பியதை சமைத்து தானே உண்டுவிடுவாள். சதா காலமும் தன் கணவனை எதிர்த்துச் சண்டை பிடித்துக் கொண்டேயிருப்பாள். இவள் போடுகிற கூச்சலால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் கூட பயந்து நடுங்குவார்கள் என்று கூறினார்


    இவளுக்கு என்ன தண்டனை விதிக்கலாம்?" என்று எமதர்மராஜன் கேட்க சித்திரகுப்தன் எப்போதும் தின்பதையே தொழிலாகக் கொண்டிருந்த இவள் அசுத்தங்களை உண்ணும் பன்றியாக பிறக்கவேண்டும். எப்போதும் கணவனை நிந்திப்பதே தொழிலாகக் கொண்டிருந்த இவள் தான் போட்ட குட்டியையே தின்னும் தாயாகவும் ஒரு ஜென்மம் எடுக்க வேண்டும். கடைசியாக ஆத்ம ஹத்தி ( தற்கொலை) செய்து கொண்டதால் பிரேத பைசாசங்களுக்கு நடுவில் வசிக்க வேண்டும். பிரேத சரீரத்தோடு இவள் அநேக காலம் பேயாக அலைந்து திரிய வேண்டும் என்று கூறினார்.


    பிரமணரே. எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையின் காரணமாக நான் பன்றியாகவும், நாயாகவும் பிறந்து அநேகவருஷகாலம் அலைந்தேன் அதன்பின் பிரேத தேகத்தோடு ராட்சசியாக அலைந்து கொண்டிருந்தேன். பசியால் மிருகங்களையும் மனிதர்களையும் பிடித்துக் கொன்று தின்றேன். உங்களை தரிசித்ததால் அந்தக் கொடிய வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்றேன் என் மேல் துளசி தீர்த்தம் பட்ட காரணத்தால் என்னுடைய பைசாச ஜென்மம் நீங்கியது இனி என்னுடைய பாவங்கள் நீங்கி முக்தியடையும் மார்க்கத்தையும் நீங்களே கூற வேண்டும்' என்று வேண்டினாள்.


    கலகராணி கூறியதைக் கேட்டு தர்மதத்தனுக்கு மிகவும் வருத்தம் உண்டாயிற்று. அவள் மேல் கொண்ட கருணை காரணமாக என்ன செய்தால் அவளுடைய பாவம் நீங்குமென்று நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தான் பிறகு பகவானை தியானித்தபடி "பெண்னே , நீ பிரேத தேகத்துடன் இருப்பதால் தானம் விரதம் முதலான உத்தம காமங்களை அனுசரிப்பதற்கோ தீர்த்தஸ்நானம் செய்வதற்கோ முடியாது உன்னை இந்த நிலையில் பார்ப்பதற்கு நான் மிகவும் வருந்துகிறன். உன்னை இந்த துக்கத்திலிருந்து விடுதலையடையச் செய்யாவிட்டால் என் மனம் சாந்தியடையாது. ஆனால் நீ செய்த பாவமோ மிகவும் கொடியது. ஈனஜென்மங்கள் எடுத்த பின்பும் அந்த பாவங்கள் நீங்கவில்லை அதனால் உன்னுடைய பிரேதஜென்மம் நீங்குவதற்காக நான் இதுவரை கார்த்திகை விரதம் அனுசரித்ததால் கிடைத்த புண்ணிய பலனின் பாதியை உனக்குத் தருகிறேன். அதனால் நீ பிரேத ஜென்மத்திலிருந்து விமோசனம் பெறுவாய். வேறு எந்தப் புண்ணியத்தாலும் உன்னுடைய கஷ்டத்தைத் தீர்க்க முடியாது என்பதாலேயே என்னுடைய கார்த்திகை விரதத்தால் சேர்ந்துள்ள புண்ணியத்தில் பாதியைத் தருகிறேன்" என்று கூறி கமண்டலத்திலிருந்த நீரைத் தன் கையில் வார்த்து அவள் மேல் தெளித்தான். உடனே கலகராணியின் பிரேத ரூபம் நீங்கிவிட்டது. தீக்கொழுந்து போல் ஜொலிக்கின்ற திவ்ய தேகம் பெற்றவளாய் தர்மதத்தன் முன்னால் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினாள்.


    "பிராமணசிரேஷ்டரே, பிரேத ஜென்மம் என்ற பாவசாகரத்தில் விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்த எனக்குத் தோணியாக வந்து கரையேற்றினீர்கள். தங்களை என்றும் நான் மறக்கமாட்டேன்” என்று கூறினாள். அதே சமயம் ஆகாயத்திலிருந்து திவ்யமான ஒரு விமானம் இறங்கி வந்து அவளை அழைத்துக் கொண்டு வைகுந்தத்தை நோக்கிச் சென்றது.


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே



🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.

👇


🔆🔆🔆🔆🔆🔆🔆


https://t.me/suddhabhaktitami

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...