Skip to main content

அத்வைத ஆச்சார்யரும் ஹரிதாஸ தாகூரும்


 அத்வைத ஆச்சார்யரும் ஹரிதாஸ தாகூரும்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


பகவானின் பக்தன் அல்லது ஒரு வைணவன் பகவானுக்கு அளிக்காமல் எதையுமே தொடுவதில்லை. ஒரு வைணவன் தனது செயல்கள் அனைத்தின் பலன்களையும் பகவானுக்கே அர்ப்பணித்திருப்பதினால் அவன் பகவானுக்கு முதலில் படைக்கப்படாத எந்தவொரு உணவையும் சுவைப்பதில்லை. பகவானும் கூடத் தனக்கு அர்ப்பணிக்கப்படும் நிவேதனங்களை வைணவனின் வாய்க்கு அளித்து சுவைத்து மகிழ்கிறார். இச்சுலோகத்திலிருந்து பகவான் வேள்விக் குண்டத்தின் தீயின் மூலமும் அந்தணனின் வாயின் மூலமும் உண்கிறார் என்று தெளிவாகிறது. பல்வேறு விதமானப் பொருட்கள் தானியங்கள், நெய் போன்றவை பகவானின் திருப்திக்காக வேள்வித் தீயில் அர்ப்பணிக்ப்படுகின்றன. பகவான் வேள்வியின் நிவேதனங்களை அந்தணர்களிடமிருந்தும் பக்தர்களிடமிருந்தும் ஏற்றுக் கொள்கிறார். சில இடங்களில் குறிப்பிடப்ட்டிருப்பது போல் அந்தணர்க்கும் வைணவர்க்கும் உண்பதற்காக வழங்கப்படும் எதையும் பகவானும் கூட ஏற்றுக் கொள்கிறார். இங்கே அவர் அந்தணர் மற்றும் வைணவர்களின் வாய்களுக்கு அர்ப்பணிக்கப்படுபவற்றையே மிகுந்த சுவையுடன் ஏற்றுக் கொள்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதற்குச் சிறந்த உதாரணம் அத்வைத பிரபு ஹரிதாஸ தாகுரரிடம் கொண்ட தொடர்புகளில் காணக் கிடைக்கிறது. ஹரிதாஸ தாகுரர் பிறப்பினால் இஸ்லாமியராக இருந்த போதிலும் அத்வைத பிரபு புனித வேள்வி விழாவிற்குப் பிறகு முதல் அவிர்பாகத் தட்டினை ஹரிதாஸ தாகுரருக்கே வழங்குவார். ஹரிதாஸ பிரபு அத்வைத பிரபுவிடம் பிறப்பினால் தான் இஸ்லாமியனாக இருந்தும் அவர் முதல் பிரஸாதத்தினை ஓர் உயர்ந்த அந்தணனுக்கு அளிக்காது தனக்கு ஏன் அளிக்க வேண்டும் என்று கேட்டார். அடக்கத்தின் காரணமாகவே ஹரிதாஸ தாகுரர் தன்னை ஓர் இஸ்லாமியன் என்று இழித்துக் கொண்டார். ஆனால் ஒரு அனுபவ பக்தரான அத்வைத பிரபு அவரை ஓர் உண்மையான அந்தணராகவே ஏற்றுக் கொண்டார். அதனால் ஹரிதாஸ தாகுரருக்கு முதல் பிரஸாதத் தட்டினை அளிப்பதினால் தான் ஒரு லட்சம் அந்தணர்களுக்கு உணவு வழங்குவதின் மூலம் கிடைக்கும் பலனைப் பெறுவதாகக் கூறினார். இதன் முடிவு என்னவென்றால் ஆயிரம், லட்சம் வேள்விகளைச் செய்வதைக் காட்டிலும் ஒருவன் ஒரு அந்தணன் அல்லது வைணவனுக்கு உணவளித்தல் சாலச் சிறந்தது என்பதேயாகும். ஆகையினால் இந்த யுகத்தில் “ஹரே நாம” என்று பகவானின் புனித நாமத்தை ஓதுவது மற்றும் வைணவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பது என்பவையே ஒருவன் ஆன்மீக வாழ்விற்குத் தன்னை உயர்த்திக் கொள்வதற்கானச் சிறந்த வழியாகும் என்று பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.


ஶ்ரீமத் பாகவதம்  3.16.8 / பொருளுரை


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

உத்வேக கதைகள் https://t.me/udvegakathaigal

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...