Skip to main content

பிரகலாத மகாராஜா


பிரகலாத மகாராஜா

வழங்கியவர்கள் - சுத்தபக்தி குழுவினர்

🍁🍁🍁🍁🍁🍁

மிகவும் கடினமான சூழ்நிலைகளுக்கு நடுவில், மிக வலிமையான அசுர சக்திகளுக்கு மத்தியிலும் பகவான் மீதுள்ள பக்தியை பிறழாது கடைப்பிடித்த ஒரு சிறுவனாக பிரகலாதர் என்றென்றும் அனைவரது மனதிலும் நினைவு கூறப்படுவார். இரண்யகசிபுவின் முதல் மகனான பிரகலாதர் தனது தாயின் கர்ப்பத்தில் இருந்த பொழுது தேவர்களின் அரசனான இந்திரன் கயாதுவைக் கைது செய்து அவரது கர்ப்பத்தில் இருந்த பிரகலாதரை ஹிரண்யகஷிபுவின் அடுத்த அசுர குல மன்னனாக வரக்கூடும் என்று எண்ணி அவரைக் கொல்ல முடிவு செய்தான். அந்த சமயத்தில் அங்கு தோன்றிய நாரதமுனிவர் கயாதுவை விடுதலை செய்யும்படி கூறினார். மேலும் அவளது கர்ப்பத்தில் இருப்பது பகவான் கிருஷ்ணரின் மாபெரும் பக்தர் என்றும் கூறினார்.  பின் நாரதமுனிவர் கயாதுவை தனது ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்று பக்தி சேவையைக் குறித்து போதித்தார். இவ்வாறாக அவளின் கர்ப்பத்தில் கருவாக இருந்த பிரகலாதர் , நாரதமுனிவர் போதித்த அனைத்து விஷயங்களையும் (கிருஷ்ணரைப் பற்றிய பூரண ஞானத்தை) மிகக் கவனமாக உள்வாங்கி படிப்படியாக பகவானின் தூய பக்தராக உருவானார்.

பிரகலாதர் தைத்ய (அசுர) குலத்தில் பிறந்திருந்தாலும் குழந்தை பருவத்திலேயே பகவான் ஶ்ரீமன் நாராயணனின்  மிகச் சிறந்த பக்தராக இருந்தார்.  அவர் குழந்தையாக இருந்த போதிலும் கூட குழந்தைகளுக்கான விளையாட்டுகளில் ஆர்வம் இல்லாதவராக  முற்றிலும்  கிருஷ்ண உணர்வில் ஆழ்ந்திருந்தார்.  ஐந்து வயது மட்டுமே நிரம்பி இருந்த பிரகலாதர் ஆன்மீக அறிவை வளர்ப்பதில்  அதிகமாக ஈடுபட்டு அதை மற்ற அசுர நண்பர்களுக்கும் அறிவுறுத்தி அவர்களும் பகவான் விஷ்ணுவின்பால் கவர பெரும்  உற்சாகத்தோடு ஊக்கம் அளித்தார்.

குருகுலத்தில் பயிலும்  அனைத்து மாணவர்களும் பிரகலாதரின் அறிவுரையால் பகவான் ஶ்ரீ விஷ்ணுவின்  பக்தர்களாவதைக் கண்டு அவர்களது ஆசிரியர்கள் மிகவும் பயந்தார்கள்.  எனவே பிரகலாதரின் சக்தி வாய்ந்த கிருஷ்ண உணர்வு பிரச்சாரத்தை ஹிரண்யகசிபுவிடம் விவரித்தனர்.  அசுரனான ஹிரண்யகசிபு பல கடுமையான உத்தரவுகளைத் தன் காவலர்களுக்கு பிறப்பித்தார்.  அவரது உத்தரவின்படி கூர்மையான ஆயுதங்களால் பிரகலாதரைத் தாக்கியும், யானையின் காலால் இடறச் செய்தும் பல நரக வேதனைக்கு உட்படுத்தினர்.  அவரை மலையின் உச்சியில் இருந்து தூக்கி எறிந்தனர்.  இது போன்று பல வழிகளில் பிரகலாதனைக் கொல்ல முயன்றும் அவர்களது முயற்சி ஒருபோதும் வெற்றி பெறவில்லை.  பிரகலாதர் முழுமையாக பகவத் சிந்தனையில் ஆழ்ந்திருந்தார்.  இதனால் ஒரு குழந்தையானது தன் தாய் அல்லது தந்தையின் மடியில் பாதுகாப்பாக வைக்கப் படுவது போல பிரகலாதர் பகவான் கோவிந்தரால் முழுமையாகப பாதுகாக்கப்பட்டார்.

ஹிரண்யகஷிபு பௌதீக அனுக்ரகங்கள் நிறையப் பெற்ற மிக சக்தி வாய்ந்த  அசுரனாகத் திகழ்ந்தான்.  பிரம்மதேவரின் கருணையினால்,  தான் சாகாவரம் பெற்று விட்டதாக தனக்குள்ளேயே எண்ணிக்கொண்டான்.  இதனால் உலகம் முழுதும் சுற்றிப் போர் புரிந்து அனைத்தையும் தன்னகத்தே கொண்டான். 

ஹிரண்யகஷிபு தனது மகனுக்கு கொடுமையான தண்டனைக்கு உட்படுத்தியும் .சித்ரவதை செய்தும் பிரகலாத மகாராஜர் தொடர்ந்து பரம புருஷ பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மகிமைகளைப் புகழ்ந்து பாடிக்கொண்டே இருந்தார்.  இதனால் கடும் கோபத்திற்குள்ளான இரணியகசிபு கிளர்ச்சியுற்று வைஷ்ணவக் குழந்தையான தன் மகனிடம்,  "நீ கூறும் அந்த கடவுள்,  இதோ இந்த அரண்மனையின் தூணில் இருக்கிறானா?" என்று கேட்டான்.  அதற்கு பிரகலாதர் உடனடியாக, "ஆம். பகவான் எங்கும் நிறைந்திருக்கிறார்"  என்று பதிலளித்தார்.  மகனின் இந்த தத்துவ வார்த்தைகளைக் கேட்ட இரணியகசிபு அதை நிராகரிக்கும் பொருட்டு பலவந்தமாக தூணில் தன் முஷ்டியால் பலமாக தாக்கினார்.  அப்போது பாதி மனிதன் பாதி சிங்கமான நரசிம்ம அவதாரத்தை எடுத்த முழுமுதற்கடவுள் ,  பிரம்மதேவரின் வரத்திற்கு ஏற்றார்போல தூணில் இருந்து குதித்து வேகமாக வெளிவந்து இரணிய கசிபுவை வதம் செய்தார்.  நீரிலோ, நிலத்திலோ,  வானிலோ அல்லாமல் பகவான் இரண்யகசிபுவை தனது மடியில் வைத்து வதம் செய்தார்.  அவர் அவனை தனது விரல் நகங்களால்  துளைத்து கிழித்தார்.  இது ஹிரண்யகசிபு கற்பனை செய்திருந்த மனித ஆயுதத்திற்கு எல்லாம் அப்பாற்பட்ட ஆயுதமாகும்.  பிரகலாதருக்கு பகவான் பல வரங்களை அருளினார்.  தன் தந்தையினால் பல கொடுமைகளுக்கும்,  இன்னல்களுக்கும் ஏன் கொலை செய்வதற்கும் கூட உள்ளாக்கப்பட்டு இருந்த பிரகலாத மஹாராஜா பகவான் நரசிம்மரிடம்  தன் தந்தையின் செயல்களுக்காக மன்னிப்புக் கோரினார்.  பிரகலாதரின் கோரிக்கையை உடனடியாக பகவான் ஏற்றுக் கொண்டார்.  இதனால் இரணியகசிபு இருண்ட நரக வாழ்விலிருந்து விடுபட்டு பகவானின் உன்னத இருப்பிடத்தை தனது மகனின் கருணையினால் அடையப் பெற்றார்.


வைஷ்ணவர் களிலேயே மிகவும் முதன்மையான எடுத்துக்காட்டாகத் திகழ்பவர் பிரகலாத மகாராஜா ஆவார்.  அவர் எப்பொழுதும் பௌதிக உலகில் பாவப்பட்ட நரக வாழ்வினால் துன்புறும் மக்களிடம் மிகவும் கருணை உடையவராய் இருந்தார்.  ஸ்மரணம் என்னும் மார்க்கத்தின் மூலம் பகவான் கிருஷ்ணரை இடையறாது நினைவு கொண்டு அவர் திருப்பாதத்தை அடைந்த பக்தர்களில் பிரகலாதர் மிகச் சிறந்த உதாரணமாவார்.  நமது வாழ்விலும் ஆன்மீக அறிவில் முன்னேற முன்னேற பல தடைகள் வரலாம். ஆனால் நாம் அதனை சகிப்புத்தன்மையுடன் பொறுத்துக் கொள்ள வேண்டும்.  உறுதியுடன் நமது லட்சியத்தை நோக்கி தொடர்ந்து முன்னேறிச் செல்லவேண்டும்.  

ஹரே கிருஷ்ண🙏

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇

https://t.me/joinchat/VaBAs5fOiAeHgexI

ஆன்மீக கதைகளை படிக்க 👇

https://t.me/joinchat/HIm4JGufgEgG7jwI

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...