Skip to main content

ஜனக மகாராஜா


 ஜனக மகாராஜா 


வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁



இவர் சீதாதேவியின் தந்தையும் பகவான் ராமரின் மாமனாருமாவார். விதேக அல்லது மிதிலா வின் (இன்றைய பீஹார்) அரசரான இவர் ஹிராஷ்வரோமாவின் முதல் புதல்வர் ஆவார்.  அவர் ஒரு யாகத்திற்காக பயன்படுத்தப்பட வேண்டிய நிலத்தில் ஒரு பகுதியை உழும்போது அந் நிலத்தில் இருந்து சுயமாகத் தோன்றிய ஒரு அழகிய பெண் குழந்தையை கண்டெடுத்தார். எனவே அவர் க்ஷீரத்வஜா என்று அழைக்கப்பட்டார். அவ்வாறு கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தையே சீதா தேவி ஆவார்.  ராஜரிஷி ஜனக மகாராஜாவின் மகளான சீதாதேவி, சிலசமயங்களில் ஜானகி என்றும் அழைக்கப்பட்டார். வசிஷ்ட மகரிஷியின் பேரனும் வியாச தேவரின் தந்தையுமான பராசர முனிவரே ஜனக மகாராஜாவின் ஆன்மிக குரு ஆவார்.  சர்வ வல்லமை பொருந்திய பகவான் பலராமர் மிதிலாவில் பல ஆண்டுகள் தங்கி அவருக்கு மிகவும் பிரியமான பக்தர் ஜனக மகாராஜாவால் கௌரவிக்கப்பட்டார்.


மிகச்சிறந்த கற்றறிந்த பண்டிதரான ஜனக மகாராஜா,  நிமி சக்ரவர்த்தி வம்சத்தில் பிறந்தவர் ஆவார். மஹாராஜா நிமி மிகப்பெரிய யாகம் ஒன்று  செய்யும்  பொருட்டு வசிஷ்ட மகரிஷியைத் தலைமை குருவாக நியமனம் செய்திருந்தார். ஆனால் வசிஷ்டர் ஏற்கனவே தேவலோக அதிபதியான இந்திரனுக்கு ஒரு யாகம் செய்வதற்காக தலைமை குரு பொருப்பை ஏற்க ஒப்புதல் கொடுத்து இருந்தார். இதனால் அவர் மஹாராஜா நிமியின் வேண்டுகோளை மறுத்தார். இருப்பினும் வசிஷ்ட மகரிஷி இந்திரனின் யாகம் முடியும் வரை காத்திருக்கும்படி  இருக்கும்படி மகாராஜா நிமியிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் மகாராஜா நிமியோ வசிஷ்டருக்காக  காத்திருக்காமல் வேறொரு பிராமணரை தலைமை குருவாக நியமித்து யாகத்தை  நிறைவு செய்தார். திரும்பி வந்த வசிஷ்ட மகரிஷி, மகாராஜா நிமியிடம் கோபம் கொண்டு அவரை சபித்தார். நிமி மகாராஜாவும் வசிஷ்ட மகரிஷியை சபித்தார். ஒருவருக்கு ஒருவர் மாறி மாறி சபித்ததில் இருவரும் இறந்தனர். நிமி மகாராஜாவின் உடலை அவரது  யாகத்தில் ஈடுபட்டிருந்த பிராமணர்கள் நறுமணம் நிறைந்த ரசாயனங்களில் பாதுகாத்து வைத்தனர். யாகம் நிறைவு பெற்றதும் அனைத்து பிராமணர்களும் மகாராஜா நிமி மீண்டும் உயிர் பெற்று வரவேண்டும் என்பதற்காக யக்ஞ குண்டத்தில் தோன்றியிருந்த அனைத்து தேவர்களிடமும் பிரார்த்தனை செய்தனர்.


ஆனால் மஹராஜன் நிமி மீண்டும் இந்த பௌதிக உலகில் பிறப்பு எடுக்க மறுத்தார்.  ஏனென்றால் இந்த பௌதீக உடலை கீழானதாக அவர் கருதினார். இதனால் பிராமணர்கள் நிமி மகாராஜனின் உடலைக் கடைந்தனர்.  கடைந்ததன் பலனாக ஜனக மகாராஜா அதிலிருந்து பிறந்தார். இவர் ஒரு அசாதாரணமான முறையில் பிறந்ததால் இந்த மகன் "ஜனக" என்று அழைக்கப்பட்டார்.  தனது தந்தையின் இறந்த உடலில் இருந்து பிறந்ததால் இவர் "வைதேகி" என்றும் அழைக்கப்பட்டார். தனது தந்தையின்  பௌதிக உடலில் இருந்து கடைந்து எடுக்கப்பட்டதால் இவர் "மிதிலா" என்றும் அழைக்கப்பட்டார். அவரால் கட்டப்பட்ட  அந்த நகமும்  மிதிலா என்று அழைக்கப்பட்டது.


ஜனக மகாராஜா சிவபெருமானிடமிருந்து வல்லமைமிக்க ஒரு வில்லை பரிசாக கிடைக்கப் பெற்றிருந்தார்.  புனிதமான இந்த வில்லை நாண் ஏற்றக் கூடியவன் மிகவும் அசாதாரணமான சக்திசாலியாக இருக்க வேண்டும்.  அப்படிப்பட்ட ஒருவனுக்கே தனது மகளான சீதாதேவியை மணமுடித்துக் கொடுக்க ஜனக மகாராஜா நினைத்திருந்தார்.  பல்வேறு  இராஜ்ஜியங்களில் இருந்து வந்திருந்த பல ராஜகுமாரர்களும் சீதாதேவியின் கரம் பிடிக்க ஆசை கொண்டனர். ஆனால் அவர்களால் அந்த புனிதமான வில்லை சிறிது கூட தூக்க முடியவில்லை.  ஒருநாள் விசுவாமித்திர மகரிஷி இந்த புனிதமான அரங்கத்திற்கு  அயோத்தியின்  அரசன் தசரதரின் இரண்டு புதல்வர்களான பகவான் ராமர் மற்றும் இலட்சுமணரோடு வருகை புரிந்தார்.  மகரிஷி விஸ்வாமித்திரர் மற்றும் ஜனக மகாராஜனின் ஆசீர்வாதத்தோடு பகவான் ராமச்சந்திரர் சிவபெருமானின் மகத்தான அந்த வில்லை மிக எளிதாக எடுத்து நாணேற்றினார்.  அனைத்து பார்வையாளர்களின் முன்பும் பகவான் ராமச்சந்திரர் அந்த வில்லை எடுத்து நாண் ஏற்றிய போது அந்த வில் இரண்டு துண்டுகளாக உடைந்து மிகப்பெரிய சப்தத்தை எழுப்பியது. அதன்பின் சீதாதேவியை அவர் முறையாக திருமணம் செய்து கொண்டார். .. மகாராஜா ஜனகர் பகவான் ராமச்சந்திரன் மேல் எல்லையற்ற பாசம் கொண்டிருந்தார்.


ஜனக மகாராஜா ஒரு தன்னுணர்வு பெற்ற ஒரு ஆத்மா ஆவார். அவர் பகவானின் மிகச்சிறந்த  பக்தராகி திவ்யமான தளத்தில் நிலை பெற்றிருந்தார்.  இதனால் சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்ய வேண்டும் என்ற அவசியம் அவருக்கு இல்லாமல் இருந்தது. இருப்பினும் பொதுமக்களுக்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக சாஸ்திரங்களில் விதிக்கப்பட்ட கடமைகளை செவ்வனே அவர் செய்தார்.  ஜனக மகாராஜா ஒரு மன்னராக தனது க்ஷத்ரிய தொழில் கடமைகளைச் செய்ததன் மூலம் முழுமை அதாவது பக்குவம் அடைந்ததாக பகவத்கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளார். 


ஜனக மகாராஜா ஒரு ராஜ ரிஷி ஆவார். ஏனென்றால் அவர் பகவானின் மிகச்சிறந்த பக்தராக இருந்தது மட்டுமன்றி மிதிலையின் மிகச் சிறந்த அரசராகவும் இருந்தார்.  இந்த உடலை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், மற்றும்  பிற காரணங்களுக்காகவும், இந்த பௌதிக விஷயங்களோடு தொடர்பு வைத்துக்கொள்வது, என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாகும். ஆனால் இதனை பகவானுக்கு செய்யும் ஒரு சேவையாக நாம் மாற்றினால் அது ஆன்மீக மயமாகி விடுகிறது. இந்த செயல்பாடுகளே யாகமாக மாறுகின்றது.  நேபாளத்தில் உள்ள ஜானக்பூரில் மகாராஜா ஜனகரின் அரண்மனையை இன்றும் நாம் காணலாம்.  மேலும் சீதாதேவி பிறந்து வளர்ந்த இடம்  மற்று அதன் தலைநகரம் போன்ற இடங்களையும் நாம் காணலாம்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇


https://t.me/joinchat/VaBAs5fOiAeHgexI


ஆன்மீக கதைகளை படிக்க 👇


https://t.me/joinchat/HIm4JGufgEgG7jwI

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...