Skip to main content

கிருஷ்ணரின் ஆனந்தமான ஹோலி விளையாட்டு


 கிருஷ்ணரின் ஆனந்தமான ஹோலி விளையாட்டு


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


விருந்தவனம் / விரஜபூமியில் ஹோலி என்பது மிகவும் வண்ணமயமான ஒரு பண்டிகையாகும். கிருஷ்ணர் இப்பண்டிகையை மிகவும் சந்தோஷமாக கோபர்கள் மற்றும் கோபியர்களுடன் பங்கு கொள்ளுவார். 


ஒரு சமயம் கோபர்கள் ஒன்று சேர்ந்து நந்தபவனத்தை நோக்கி ஹோலி விளையாட ஆரவாரத்துடன் வந்தனர். கோப சகாக்கள் வாயிலில் நின்று கொண்டு "கண்ணா, கண்ணா வெளியில் வா! நாம் எல்லாரும் சேர்ந்து ஹோலி விளையாடலாம், ஏ!! லாலா வெளியில் வா!" என அழைத்தனர். 


இதற்கு அர்த்தம் என்னவென்றால், அவர்கள் கிருஷ்ணரின் மீது வர்ணம் கலந்த நீரை பீச்சாங்குழலில் ஊற்றி பீச்சி விளையாட ஆவலாக இருந்தார்கள்



கிருஷ்ணர் ஆரவாரத்தை கேட்டவுடன் வீட்டிற்க்குள் ஓடி தாய் யசோதையின் மடியில் சென்று ஒளிந்து கொண்டார்.


அவர் அன்னை யசோதையிடம்  'அம்மா! அம்மா ! எனக்கு வர்ணம் என்றால் ஒரே அச்சம். மேலும் நானோ தனியாக உள்ளேன் சகாக்களோ நிறைய பேர் உள்ளனர். என் மீது மிக அதிகமான வண்ணம் தூவுவர். ஆகவே நான் ஒளிந்து கொள்கிறேன்' . அம்மா நீங்கள் வெளியில் சென்று, நான் வீட்டில் இல்லை என கூறுங்கள் என்றார். 


தாய் யசோதா இனிமையான கிருஷ்ணரின் சொல்லில் மயங்கி, கிருஷ்ணர் வீட்டில் இல்லை என்று கூற ஒப்பு கொண்டார். வெளியில் சென்று அவ்வாறே கூறினார்.


ஆனால் சகாக்கள் இதை ஏற்க மறுத்தனர். எங்களில் ஒருவர் வீட்ற்குள் சென்று சோதனை செய்த பின்னரே நீங்கள் கூறுவதை நாங்கள் ஒப்பு கொள்வோம், என வாதிட்டனர். வேறு வழி இன்றி தாய் யசோதை ஒப்புக்கொண்டார். கிருஷ்ணரின் ப்ராமண நண்பனான மதுமங்கலை உள்ளே சென்று சோதனை செய்ய நியமித்தனர்.


மதுமங்கல் , நந்தபவனம் முழுவதும் மிக நன்றாக தேடி கிருஷ்ணரை கண்டுபிடித்தான். கிருஷ்ணரை கடிந்து கொண்டு "ஏ கண்ணா !! எப்படி நீ  உனது நண்பர்களிடம் பொய் சொல்வாய்!! இது சரியில்லை " என்றும் உடனே வெளியில் வந்து ஹோலி விளையாட்டில் கலந்து கொள்ளவேண்டும் என்றும் வற்புறுத்தினார்.


ஆனால் , கிருஷ்ணருக்கோ வெளியில் வர இஷ்டம் இல்லை. மதுமங்கலை  வெளியில் சென்று தான் வீட்டில் இல்லை என கூறுமாறு வேண்டிக்கொண்டார். அதற்கு, மதுமங்கல் இணங்கவில்லை, வெளியில் வந்தே ஆகவேண்டும் என்றும் வற்புறுத்தினான்.


விஷமக்கார கண்ணனுக்கு ஒரு அற்புதமான யோசனை தோன்றியது.  மதுமங்கலுக்கு, லட்டு என்றல் கொள்ளை பிரியம்; ஆகவே, மற்ற சகாக்ளிடம்  தான் அங்கு இல்லை என்று கூறினால் அவனுக்கு மிக அதிகமான எண்ணிக்கையில் லட்டுகள் தருவதாக சொன்னார். அவ்வாறு கூறினால் எல்லோரும் அவ்விடத்திலிருந்து சென்றுவிடுவார்கள் மேலும் தான் ஹோலி விளையாட்டில் இருந்து தப்பலாம் என்று நினைத்தார்.


மதுமங்கல்  மிகவும் உஷாராக தனது லட்டுகளை முதலில் பெற்றுக்கொண்டான், பின்னர் அவ்வாறே கூறுவதாக ஒப்புக்கொண்டு கை நிறைய லட்டுகளுடன் வெளியில் சென்றான். ஆவலாக காத்துக்கொண்டிருந்த நண்பர்களை நோக்கி, பொய் என்பதே சொல்லத்தெரியாத மிக எளிமையான கிராமத்து சிறுவன் என்பதால், "கிருஷ்ணர் உள்ளே ஒளிந்து கொண்டிருக்கிறான், ஆனால் அவன் உள்ளே இல்லை என்று என்னை சொல்ல சொன்னான்" என்றான்.


இதை கேட்டவுடன் அத்தனை சகாக்களும்  ஆரவாரித்தனர்.  சிரிப்பும் கும்மாளமுமாக ஆரவாரத்துடன் நந்தபவனத்திற்குள் நுழைந்தனர். 


கட்டிலின் அடியில் ஒளிந்திருந்த கிருஷ்ணரை இழுத்து எல்லா விதமான வர்ணங்கள்  நிறைந்த நீரை அவர் மேலே பீச்சி ஆனந்தமாக விளையாடினர். கிருஷ்ணரும் மிக ஆனந்தமாக விளையாடினார் "பக்த-பிலாஷி சரித அனுசாரி" - பக்தர்களின் கோரிக்கைக்கு ஏற்ப கிருஷ்ணர் செயல்படுவார் என்பதே அர்த்தம் ஆகும்.



🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண🙏


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.





Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...