Skip to main content

மேற்கத்திய பண்பாடே பிரச்சனைகளுக்கான காரணம்


  மேற்கத்திய பண்பாடே பிரச்சனைகளுக்கான காரணம்


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


பத்திரிகையாளர்களுடன் நிகழ்ந்த கீழ்க்காணும் உரையாடலில், உலகிலுள்ள பிரச்சனைகளுக்கு மக்கள்தொகை பெருக்கம் காரணமல்ல என்றும், மேற்கத்திய பண்பாடுதான் காரணம் என்றும் ஸ்ரீல பிரபுபாதர் சுட்டிக்காட்டுகிறார்.


ஸ்ரீல பிரபுபாதர்: தற்சமயத்தில் மேற்கத்திய பண்பாட்டைப் பின்பற்றுவதால் இந்தியா பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.


விருந்தினர்: அப்படியெனில், மக்கள் தொகை பெருக்கத்தால் பிரச்சனைகள் ஏதும் உண்டாவதில்லையா?


ஸ்ரீல பிரபுபாதர்: மக்கள் தொகை பெருக்கம் என்ற கேள்விக்கே இடமில்லை. இந்த எண்ணம் முட்டாள்தனமானது.


விருந்தினர்: முட்டாள்தனமானதா!


ஸ்ரீல பிரபுபாதர்: பறவைகளும் விலங்குகளும் தங்களது இனத்தைப் பெருக்குகின்றன. அவற்றிற்கு உணவளிப்பவர் யார்? உலகில் 84 இலட்சம் வகையான உயிரினங்கள் உள்ளன; அவற்றில் 80 இலட்சம் உயிரினங்கள் மனித இனத்தைச் சார்ந்தவை அல்ல. நான்கு இலட்சம் உயிரினங்கள் மட்டுமே மனித இனம். அதிலும் நாகரிகமடைந்தவர்கள் சிலரே. அனைத்து பிரச்சனைகளும் இந்த பெயரளவு நாகரிகமான மக்களிடம் மட்டுமே உள்ளது.


கடவுளே அனைவருக்கும் தந்தை என்பது நாம் அறிந்ததே. நமது பராமரிப்புக்குத் தேவையானவற்றை அவரே வழங்குகிறார். மக்கள் தொகை பெருகினால், கடவுள் தேவையானவற்றை வழங்கும் சக்தி படைத்தவர். எனவே, மக்கள் தொகை பெருக்கம் என்பது ஒரு பிரச்சனையே இல்லை, அசுர குணம் கொண்ட மக்களே பிரச்சனை.


பத்திரிகையாளர்: நான் அந்த நாகரிகத்தைப் பற்றி வினவ இருந்தேன்.


ஸ்ரீல பிரபுபாதர்: அசுர குணம் கொண்ட மக்களே பிரச்சனைகளுக்கு காரணமே தவிர, மக்கள் தொகை பெருக்கம் பிரச்சனையே அல்ல. அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களில் பெருமளவில் காலியிடங்கள் உள்ளதால், தற்போதைய உலக மக்கள் தொகை பத்து மடங்கு அதிகரித்தாலும் அவர்களுக்கு போதுமான உணவு கிட்டும் என்பதை நான் படித்துள்ளேன்.


பத்திரிகையாளர்: போதிய உணவு இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா?


ஸ்ரீல பிரபுபாதர்: போதிய வசதிகள் உள்ளன. ஆனால் நாம் செயற்கையான பிரிவுகளை உருவாக்கியுள்ளோம். அமெரிக்கர்கள் ஐரோப்பாவிலிருந்து சென்று, அமெரிக்காவை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளனர். தற்போது அங்கு மற்றவர்கள் வருவதை அவர்கள் அனுமதிப்பதில்லை. அதே போல, ஆஸ்திரேலியர்களும் அவர்களது நாட்டிற்கு மற்றவர்கள் வருவதை அனுமதிக்கமாட்டார்கள். நியூசிலாந்திலும் ஆப்பிரிக்காவிலும்கூட இதே நிலைதான். இதற்கான காரணம் என்ன? அனைத்தும் கடவுளுக்குச் சொந்தம்; நாம் அனைவரும் கடவுளின் குழந்தைகள்; அனைவருக்கும் இறைவனின் கருணையைப் பெற்று வாழ்வதற்கான உரிமை உண்டு. இதுவே எங்களது தத்துவம்.


பத்திரிகையாளர்: ஆனால் மேற்கத்திய பண்பாட்டின் மதிப்பு …


ஸ்ரீல பிரபுபாதர்: மேற்கத்திய பண்பாடு, “இஃது ஆப்பிரிக்கா, இஃது ஐரோப்பா, இஃது அமெரிக்கா” என்னும் செயற்கையான எண்ணத்தை உருவாக்கியுள்ளது.


பத்திரிகையாளர்: எனவே, கடவுளின் குழந்தைகளாக நாம் வாழ்வதை மேற்கத்திய பண்பாடு சாத்தியமற்றதாக்கி விட்டது.


ஸ்ரீல பிரபுபாதர்: ஆம். கடவுளின் ஒரு குழந்தை மற்றொரு குழந்தையை தனது நாட்டினுள் நுழைய அனுமதிப்பதில்லை. அவ்வாறு தடுப்பதற்கான உரிமை அவனுக்கு இல்லை. உதாரணமாக, ஒரு தந்தைக்கு பத்து மகன்கள் இருந்தால், சட்டத்தின்படி தந்தையின் சொத்தை அனுபவிக்கும் உரிமை அனைத்து மகன்களுக்கும் உண்டு. அதுபோலவே, மனிதர்கள் மட்டுமல்ல, பறவைகள், விலங்குகள் என அனைத்து உயிரினங்களுக்கும் கடவுளின் சொத்தை அனுபவிக்கும் உரிமை உண்டு. இதுவே ஆன்மீகம், தெய்வீக பொதுவுடைமை. வேதப் பண்பாட்டின்படி, இல்லத்திலுள்ள பல்லிக்கும் உணவு கிடைக்கிறதா என்பதை இல்லறத்தான் கவனிக்க வேண்டும். இல்லறத்தான் தெரு முனையில் நின்று “யாரேனும் பசியோடு இருக்கிறீர்களா? வாருங்கள், உணவருந்தலாம்” என்று அழைக்க வேண்டும். யாரும் வரவில்லையெனில், அவன் உணவருந்தலாம்.


பத்திரிகையாளர்: இக்கொள்கையினைப் பின்பற்றுதல் இன்றைய நாகரிகத்தில் பலருக்கும் கடினமானதாகும்.


ஸ்ரீல பிரபுபாதர்: ஆனால், அதுவே உண்மையான நாகரிகம். விலங்குகளின் சமூகத்தில், ஒரு நாய் வந்தவுடன் மற்றொரு நாய், “லொள்! லொள்! நீ ஏன் வருகிறாய்?” என்று குரைக்கிறது. அதுபோலவே, எல்லா இடத்திலும் குடியுரிமை அதிகாரிகள், “நீங்கள் எவ்வளவு நாள் இங்கு தங்குவீர்கள்?” என்று வினவுகின்றனர். ஏன் இவ்வாறு வினவ வேண்டும்? வேதப் பண்பாட்டில், எதிரியே வீட்டிற்கு வந்தாலும், அவன் எதிரி என்பதை மறந்துவிடுமளவிற்கு, அவனை நட்புடன் வரவேற்று உபசரித்தனர்.


பத்திரிகையாளர்: ஆனால், இன்றைய சூழ்நிலையில் இத்தகைய கொள்கைகளைப் பிரச்சாரம் செய்தல் உங்களுக்கு கடினமாக இருக்குமே!


ஸ்ரீல பிரபுபாதர்: இந்த நாகரிகம் அசுரத்தனமானதாக இருப்பதால் சற்று சிரமமே. இந்தியா அனைவரையும் வரவேற்றது; ஆனால், இந்தியா ஆக்கிரமிக்கப்பட்டது. இந்தியர்கள் ஆங்கிலேயர்களை வரவேற்றனர், ராபர்ட் கிளைவ் வரவேற்கப்பட்டார். ஆனால், அவர் சூழ்ச்சியின் மூலம் இந்தியாவை ஆக்கிரமித்தார். அவரது சிலை இங்கு [இலண்டனில்] வழிபடப்படுகிறது. ஆனால், அவர் என்ன செய்தார்? சூழ்ச்சி. அவர் சட்ட விரோதமான முறையில் இந்தியாவினை ஆக்கிரமித்தார். இதுவே மேற்கத்திய பண்பாடு.


பத்திரிகையாளர்: இன்றைய சமூகத்தில் சகோதரத்துவத்தை பிரச்சாரம் செய்வதும் உங்களுக்கு மிகவும் கடினமானதல்லவா?


ஸ்ரீல பிரபுபாதர்: சகோதரத்துவம் என்பது இயற்கையானது. ஒரு குடும்பத்தில் பத்து மகன்கள் இருந்தால், அவர்கள் சகோதரர்களே. ஆனால், ஒரு மகன் மட்டும் சூழ்ச்சியினால் அனைத்து சொத்துகளையும் அடைய விரும்புகிறான். இந்த அசுரத்தனம் காலங்காலமாகத் தொடர்கிறது.


பத்திரிகையாளர்: இதை எவ்வாறு தடுப்பது?


ஸ்ரீல பிரபுபாதர்: கிருஷ்ண உணர்வின் மூலமாகவே இதனைத் தடுக்க இயலும். கடவுள் ஒருவரே; அவரே அனைவருக்கும் தந்தை; நாம் அனைவரும் அவரின் குழந்தைகள் என்னும் அறிவினை நீங்கள் பெறும்போது இதற்கான முழுமையான தீர்வு கிடைக்கும்.

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...