Skip to main content

புலன்களைக் கட்டுப்படுத்த சுலபமான, ஒரே வழி பகவானின் தூய பக்தித் தொண்டில் ஈடுபடுவது மட்டுமே


 

புலன்களைக் கட்டுப்படுத்த சுலபமான, ஒரே வழி பகவானின் தூய பக்தித் தொண்டில் ஈடுபடுவது மட்டுமே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


புலன்கள் உடலின் சுறுசுறுப்பான பகுதிகள் அவற்றின் செயல்களை நிறுத்த முடியாது. செயற்கை முறைகளில் புலன்களின் செயல்களை நிறுத்த முயல்வது, விஸ்வாமித்ர முனிவரைப் போன்ற பெரும் யோகிகளின் விஷயத்திலும் கூட, பரிதாபகரமான தோல்வியை அடைந்துள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. விஸ்வாமித்ர முனி யோக சமாதியினால் புலன்களை அடக்கினார். ஆனால் ஸ்வர்கலோக மங்கையான மேனகையை சந்திக்க நேர்ந்தபொழுது, அவர் உடலுறவுக்கு அடிமையானார். செயற்கையான அவரது புலனடக்கம் தோல்வியடைந்தது. ஆனால் தூய பக்தர்களின் விஷயத்தில், புலன்கள் அவற்றின் செயல்களிலிருந்து செயற்கையான முறையில் ஈடுபடுத்தப்படுகின்றன. புலன்களை அதிக கவர்ச்சியுள்ள செயல்களில் ஈடுபடுத்தும் பொழுது, தாழ்ந்த செயல்களால் அவை கவரப்படுவதற்கு வாய்ப்பில்லை. புலன்களை உயர்ந்த ஈடுபாடுகளால் மட்டுமே கட்டுப்படுத்த இயலும் என்று கீதை கூறுகிறது. புலன்களை தூய்மைப்படுத்துதல் அல்லது அவற்றை பகவானின் தொண்டில் ஈடுபடுத்துதலே பக்தித் தொண்டாகும். பக்தித் தொண்டென்பது செயலற்ற தன்மையல்ல. பகவானின் தொண்டில் செய்யப்படும் எதுவும், அதன் ஜடத் தன்மையிலிருந்து உடனே தூய்மை அடைகிறது. பௌதிக எண்ணம் அறியாமையால் மட்டுமே விளைவதாகும். வாசுதேவனுக்கு அப்பால் எதுவுமே இல்லை. பகவானைப் பற்றி தொடர்ந்து செவியுறுவதால் வாசுதேவ உணர்வு இதயத்தில் படிப்படியாக வளர்கிறது. ஆனால் வாசுதேவனே அனைத்தும் என்ற முடிவுக்கு வரும்பொழுது வளர்ச்சி முற்றுப் பெறுகிறது. பக்தித் தொண்டின் விஷயத்தில், இம்முறை ஆரம்பத்திலிருந்தே ஏற்றுக் கொள்ளப்படுகிறது. மேலும் பக்தரின் இதயத்தில் இருந்து கொண்டே பகவான் அவனுக்கு உபதேசிப்பதால், அவரது கருணையால் உண்மையான அறிவு பக்தரின் இதயத்தில் வெளிப்படுகிறது. எனவே பக்தித் தொண்டால் புலன்களைக் கட்டுப்படுத்துவதுதான் சுலபமானதும், ஒரே வழியுமாகும்.

 

( ஸ்ரீமத்-பாகவதம் 1.10.23  - பொருளுரை /அருளியவர்  ; ஸ்ரீல பிரபுபாதர்)


ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


Telegram செயலி


🍁🍁🍁🍁🍁🍁


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.

👇


https://t.me/joinchat/VaBAs5fOiAeHgexI


ஆன்மீக கதைகளை படிக்க 👇


https://t.me/joinchat/HIm4JGufgEgG7jw


🍁🍁🍁🍁🍁🍁


வலைதளம் /  website


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


https://suddhabhaktitamil.blogspot.com/?m=1

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...