Skip to main content

ஶ்ரீமத் பகவத்கீதையின் வரலாறு

 



ஶ்ரீமத் பகவத்கீதையின் வரலாறு


🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


ஸ்ரீ-பகவான் உவாச

இமம் விவஸ்வதே யோகம்

ப்ரோக்தவான் அஹம் அவ்யயம்

விவஸ்வான் மனவே ப்ராஹ

மனுர் இக்ஷ்வாகவே (அ)ப்ரவீத்


மொழிபெயர்ப்பு


🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


புருஷோத்தமரான முழு முதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்: அழிவற்ற இந்த யோக விஞ்ஞானத்தை நான் சூரிய தேவனான விவஸ்]வானுக்கு உபதேசித்தேன். விவஸ்]வான் மனித குலத் தந்தையான மனுவுக்கும், மனு, இக்ஷ்வாகு மன்னனுக்கும் இதனை முறையே உபதேசித்தனர்.


பொருளுரை


🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼


பகவத் கீதை, சூரிய கிரகத்திலிருந்து தொடங்கி, அனைத்து கிரகங்களின் மன்னர்களுக்கும் பன்நெடுஞ்காலத்திற்கு முன்பே உபதேசிக்கப்பட்டது என்ற சரித்திரத்தை இங்கு நாம் காண்கிறோம். எல்லா கிரகங்களின் மன்னர்களும் குடிமக்களைக் காக்க வேண்டியவர்கள்; எனவே, மக்களை ஆள்வதற்காகவும் அவர்களை காமம் என்னும் பௌதிக பந்தத்திலிருந்து பாதுகாப்பதற்காகவும், அரசு குலத்தோர் அனைவரும் பகவத் கீதையின் விஞ்ஞானத்தை அறிந்து கொள்வது அவசியம். முழுமுதற் கடவுளுடன் நித்திய உறவை வளர்க்கக் கூடிய ஆன்மீக ஞானத்தைப் பயில்வதே மனிதப் பிறவியின் நோக்கமாகும். மேலும், எல்லா கிரகங்களிலும் எல்லா நாட்டிலும் உள்ள அனைத்து தலைவர்களும் கல்வி, பண்பாடு, மற்றும் பக்தியின் மூலம் குடிமக்களுக்கு இந்த ஞானத்தைக் கற்றுத் தர கடமைப்பட்டுள்ளார்கள். வேறு விதமாகக் கூறினால், எல்லா தேசத் தலைவர்களும் கிருஷ்ண உயர்வின் விஞ்ஞானத்தைப் பரப்புவதற்குக் கடமைப்பட்டுள்ளார்கள். அதன் மூலம், மனிதப் பிறவியின் வாய்ப்பை உபயோகப்படுத்திக் கொள்ளும் மக்கள், இம்மாபெரும் விஞ்ஞானத்தினால் வெற்றிப் பாதையில் முன்னேறுவர்.


இந்த யுகத்தின் சூரியதேவனுக்கு, விவஸ்]வான் (சூரியனின் மன்னன்) என்று பெயர். சூரியக் குடும்பத்திலுள்ள அனைத்து கிரகங்களுக்கும் சூரியனே மூலமாகும். பிரம்ம சம்ஹிதையில் (5.52) கூறப்பட்டுள்ளது:


யச்;-சக்ஷுர் ஏஷ ஸவிதா ஸகல-க்ரஹாணாம்

ராஜா ஸமஸ்த-ஸுர-மூர்திர் அஷே-ஷ-தேஜா:

யஸ்யாக்ஞயா ப்ரமதி ஸம்ப்ருத-கால-சக்ரோ

கோவிந்தம் ஆதி-புருஷம் தம் அஹம் பஜாமி


பிரம்மா கூறினார்: "முழுமுதற் கடவுளும் ஆதி புருஷருமான கோவிந்தனை நான் வணங்குகிறேன். எல்லாக் கிரகங்களுக்கும் தலைவனான சூரியன் அளவற்ற சக்தியையும் உஷ்ணத்தையும் இவருடைய கட்டளைக்கேற்பவே பெற்றுள்ளான். பகவானின் கண்ணைப் பிரதிநிதிக்கும் இந்த சூரியன், அவரது கட்டளைக்குப் படிந்து தனது பாதையில் சுற்றிக் கொண்டுள்ளான்."


வெப்பமும் ஒளியும் தருவதன் மூலம் கிரகங்களைக் கட்டுப்படுத்தி, அனைத்து கிரகங்களுக்கும் மன்னனாக விளங்கும் சூரியனை, சூரியதேவன் (தற்போதைய சூரியதேவனின் பெயர் விவஸ்வான்) ஆட்சி செய்து வருகிறான். கிருஷ்ணரது ஆணைப்படியே அவன் சுழன்று கொண்டுள்ளான். பகவத் கீதையின் விஞ்ஞானத்தைப் புரிந்து கொள்ளும் முதல் மாணவனாக பகவான் கிருஷ்ணர் விவஸ்வானை ஆக்கினார். எனவே, பகவத் கீதை அற்பமான ஏட்டுக் கல்வி அறிஞருக்கான கற்பனைக் காவியமல்ல, நினைவுக்கெட்டாத காலத்திலிருந்து கீழிறங்கி வரும் ஞானத்திற்கான தரமான புத்தகமாகும்.


கீதையின் வரலாற்றை மஹாபாரதத்தில் (ஷாந்தி-பர்வ 348.51-52) பின்வருமாறு நாம் காணமுடியும்:


த்ரேதா-யுகாதௌ ச ததோ

விவஸ்வான் மனவே ததௌ

மனுஷ் ச லோக-ப்ருத்-யர்தம்

ஸுதாயேக்ஷ்வாகவே ததௌ

இக்ஷ்வாகுணா ச கதிதோ

வ்யாப்ய லோகான் அவஸ்தித:


"திரேதா யுகத்தின் ஆரம்பத்தில், பகவானுடனான உறவு பற்றிய இந்த விஞ்ஞானம் விவஸ்வானால் மனுவிற்கு வழங்கப்பட்டது. மனித குலத்தின் தந்தையான மனு, தனது மகனும் பூலோகத்தின் மன்னனும் ஸ்ரீராமர் அவதரித்த ரகு வம்சத்தின் முன்னோடியுமான மன்ன இக்ஷ்வாகுவிற்கு இதனை அளித்தார்." எனவே, மனித சமுதாயத்தில் இக்ஷ்வாகுவின் காலத்திலிருந்தே பகவத் கீதை இருந்து வந்துள்ளது.


4,32,000 வருடங்கள் நீடிக்கும் கலி யுகத்தில் நாம் தற்போது ஐயாயிரம் வருடங்களை மட்டுமே கடந்துள்ளோம். கலி யுகத்திற்கு முந்தைய யுகம் துவாபர யுகம் (8,00,000 வருடங்கள்), அதற்கு முந்தைய யுகம் திரேதா யுகம் (12,00,000 வருடங்கள்). இவ்விதமாக சுமார் 20,05,000 வருடங்களுக்கு முன்பே, தனது சீடனும் மகனுமான பூலோக மன்னன் இக்ஷ்வாகுவிற்கு மனு இதனைக் கூறியுள்ளார். தற்போதைய மனுவின் ஆயுட்காலம் 30,53,00,000 வருடங்கள் என கணக்கிடப்பட்டுள்ளது, அதில் 12,04,00,000 வருடங்கள் கழிந்துள்ளன. மனுவின் பிறப்பிற்கு முன்பே, பகவானால் அவரது சீடனும் சூரிய தேவனுமான விவஸ்வானுக்கு கீதை கூறப்பட்டதை ஏற்றுக் கொள்ளும் நிலையில் ஏறத்தாழ 12,04,00,000 வருடங்களுக்கு முன் கீதை உபதேசிக்கப்பட்டதாக கணக்கிடலாம். மனித சமுதாயத்திலோ இஃது இருபது இலட்சம் வருடங்களுக்கு மேல் வழக்கில் இருந்து வந்துள்ளது. ஏறத்தாழ 5000 வருடங்களுக்கு முன் அர்ஜுனனிடம் பகவான் இதனை மீண்டும் உபதேசித்தார். கீதையின் கூற்றின்படியும் கீதையை உரைத்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கூற்றின்படியும், இதுவே கீதையின் சரித்திரம் பற்றிய தோராயமான கணக்கீடு. விவஸ்வான் சூரிய வம்ச சத்திரியர்களின் தந்தை என்பதால் பகவத் கீதை அவருக்கு வழங்கப்பட்டது. முழுமுதற் கடவுளால் கூறப்பட்டதால், இந்த பகவத் கீதை வேதங்களுக்குச்; சமமான ஞானம், அபௌருஷேய, மனித சக்திக்கு அப்பாற்பட்ட தெய்வீக ஞானம் எனப்படும். வேதக் கட்டளைகள் மனித வியாக்கியானமின்றி உள்ளது உள்ளபடி ஏற்றுக் கொள்ளப்படுவதைப்போல, கீதையும் பௌதிக வியாக்கியானங்களின்றி ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். வீண் வாதம் செய்யும் ஏட்டறிஞர்கள் தங்களது சுய வழியில் கீதையைப் பற்றி கற்பனை செய்யலாம், ஆனால் அஃ;து உண்மையான பகவத் கீதையாகாது. எனவே, கீதையை சீடப் பரம்பரையின் மூலம் உள்ளது உள்ளபடி ஏற்றுக் கொள்ள வேண்டும். பகவான் இதனை சூரியதேவனுக்கும், சூரியதேவன் தனது மகனான மனுவிற்கும், மனு தன் மகன் இக்ஷ்வாகுவிற்கும் இதனை உபதேசித்ததாக இங்கு விளக்கப்பட்டுள்ளது.


( ஶ்ரீமத் பகவத்கீதை 4.1)


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆


https://t.me/suddhabhaktitami

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...