Skip to main content

யோகினி ஏகாதசி

ஆனி மாத தேய்பிறையில் (ஜூன் /ஜூலை) தோன்றக்கூடிய யோகினி ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பிரம்ம - வைவர்த்த புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை மகாராஜா யுதிஸ்டிரர் கேட்டார், ஓ! முழுமுதற் கடவுளே! ஓ! மதுசூதனா நான் நிர்ஜல ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி கேட்டுள்ளேன். இப்பொழுது ஆனி மாத (ஜூன்/ஜூலை) தேய்ப்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசியைப் பற்றி கேட்க விரும்புகிறேன். பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். ஓ! மன்னா! ஆனி மாத தேய்பிறையில் (ஜூன்/ஜூலை) தோன்றக்கூடிய ஏகாதசியைப் பற்றி நான் விளக்குகிறேன். இந்த ஏகாதசியின் பெயர் யோகினி. எல்லா கடுமையான பாவ விளைவுகளையும் அழித்து ஒருவரை ஜட இருப்பிலிருந்து விடுவிக்கிறது.


ஓ! மன்னர்களில் சிறந்தோனே! இந்த உண்மையை விளக்க புராணத்தில் உள்ள ஒரு கதையைக் கூறுகிறேன். அழகாபுரியின் மன்னனான குபேரன். பகவான் சிவபெருமானின் தீவிர பக்தன், அவரிடம் யக்ஷ வம்சத்தை சேர்ந்த தோட்டக்காரன் இருந்தான். அவன் பெயர் ஹேமா. அவன் மனைவியின் பெயர் விசாலாக்ஷி மிக அழகானவர். ஹேமா அவனிடம் மிக்க பற்று கொண்டிருந்தான். ஹேமா தினந்தோறும் மானஸ சரோவரில் இருந்து மலர்களை சேகரித்து அவற்றை குபேரனிடம் கொடுக்க, குபேரன் அம்மலர்களை கொண்டு சிவபெருமானை வழிபட்டு வந்தார். ஒரு நாள் மானஸ சரோவரில் இருந்து மலர்களை சேகரித்து வந்து ஹேமா, தன் பிரியமான மனைவியின் அன்பால் கட்டுப்பட்டு வீட்டிலேயே தங்கிவிட்டான்.


ஓ! மன்னா. இதன் விளைவாக அன்று குபேரனுக்கு மலர்கள் கிடைக்கவில்லை. யக்ஷ வம்சத்தின் மன்னனான குபேரன் ஹேமாவின் வருகைக்காக ஆறு மணி நேரம் காத்திருந்தார். மலர்கள் இல்லாததால் அவரால் சிவபெருமானின் வழிபாட்டை பூர்த்தி செய்ய முடியவில்லை. இதனால் மிக்க ஆத்திரம் அடைந்த மன்னர். தோட்டக்காரனின் தாமதத்திற்குரிய காரணத்தை அறியுமாறு தன் காதுவர்களை ஏவினார். யக்ஷ தூதுவர்கள் சிறிது நேரத்திற்குப் பிறகு திரும்பி வந்து மன்னரிடம் ஓ! எஜமானே! ஹேமா தன் மனைவியிடம் மோகம் கொண்டு வீட்டிலேயே தங்கியுள்ளான். எனக் கூறினார். இவ்வார்த்தைகளைக் கேட்ட குபேரன் மிகவும் ஆத்திரமடைந்தார். உடனே ஹேமாவை அழைத்து வந்து, தன் முன் நிறுத்துமாறு குபேரன் தன் சேவகர்களுக்கு கட்டளையிட்டார். தன் தவறை உணர்ந்த ஹேமா நாணமுற்று மிகுந்த பயத்துடன் குபேரன் முன் சென்று வணங்கினான். கோபத்தால் குபேரன் உடல் நடுக்கத்துடனும் கண்கள் சிவந்தும் காணப்பட்டார்.


குபேரன் கோபத்துடன் கூறினார். ஓ! பாவியே! மதக்கொள்கைளை அழிப்பவனே, நீ என்னுடைய வழிபாட்டிற்குரிய சிவபெருமானை அலட்சியம் செய்து, உன்னுடைய புலன் நுகர்வு செயல்களில் ஈடுபட்டிருக்கிறாய். ஆகையால் நான் உன்னை சபிக்கிறேன். வெண்குஷ்டத்தால், அவதிப்பட்டு உன்னுடைய மனைவியை நிரந்தரமாக பிரிந்திருப்பாய். ஓ! தாழ்ந்த மூடனே! நீ உடனே இங்கிருந்து வெளியேற வேண்டும். குபேரனால் சபிக்கப்பட்ட ஹேமமாலி உடனே அழகாபுரியில் இருந்து கீழிறங்கி இந்த மண்ணுலகில் பிறவி எடுத்தான். வெண்குஷ்டத்தால் பாதிக்கப்பட்டு மிகுந்த துன்பத்திற்கு ஆளானான். மிகுந்த மன உளைச்சலுடன், உணவும், நீரும் இன்றி ஒரு பயங்கரமான அடர்ந்த காட்டிற்குச் சென்றான். அங்கு அவன் பசி மற்றும் தாகத்தால் இரவும் பகலும் துன்பப்பட்டான். பகலில் எந்தவொரு இன்பமும் கிடைக்கவில்லை. இரவில் அவனால் தூங்கவும் முடியவில்லை. கோடையிலும் குளிர்காலத்திலும் அவன் மிக துன்பப்பட்டான். சிவபெருமானின் வழிபாட்டிற்கு உதவியதால் அவனுடைய பூர்விகம் நினைவில் இருந்தது. பல பாவச் செயல்களில் ஈடுபட்டிருந்தாலும் அவனுடைய முந்தைய செயல்களை அவனால் நினைத்துக் கொள்ள முடிந்தது. மற்றும் அவனுடைய உணர்வு தூய்மையுடனும் எச்சரிக்கையுடனும் இருந்தது.


இதுபோன்று பல நாட்கள் காட்டில் திரிந்த பிறகு அதிர்ஷ்டவசமாக ஒரு நாள் ஹேமாமாலி இமயமலைத் தொடரை அடைந்தான். அங்கும் இங்குமாக நடந்து கொண்டிருந்தபோது கடவுளருளால் மார்கண்டேய பெருமுனிவரை சந்திக்க நேர்ந்தது. மார்கண்டேயர் துறவிகளில் மிகச்சிறந்தவர். அவருடைய ஆயுட்காலம் ஏழு கல்பங்கள் ஆகும். தன்பாவங்களை உணர்ந்த ஹேமமாலி. முனிவரிடமிருந்து சற்று விலகி நின்று தன் பணிவான வணக்கங்களை மீண்டும் மீண்டும் சமர்ப்பித்தான். கருணை உள்ளம் கொண்ட மார்கண்டேய முனிவர் வெண்குஷ்டத்தால் பாதிக்கப்பட்ட ஹேமாவை அழைத்து ஓ! நீ எப்படி இந்த பயங்கரமான துன்பத்தை அடைந்தாய். இதுபோன்ற அவதிப்படுவதற்கு நீ என்னென்ன பாவமிக்க மற்றும் தீண்டதகாத செயல்களை செய்தாய்? என வினவினார். இதைக் கேட்ட ஹேமா பதிலளித்தார். ஓ! பெருமுனிவரே! நான் யக்ஷகுலத்தின் மன்னனான குபேரனின் தோட்டக்காரன். என் பெயர் ஹேமாமாலி. 


நான் வழக்கமாக மானஸ் சரோவரில் இருந்து மலர்களை சேகரித்து வந்து, அவற்றை எனது எஜமானரான குபேரனிடம் கொடுப்பேன். குபேரன் அம்மலர்களால் பகவான் சிவபெருமானை வழிபடுவார். ஒரு நாள் என் மனைவியிடம் இச்சை கொண்டு வீட்டிலேயே தங்கியதால் குபேரனுக்கு மலர்களை கொடுக்கத் தவறினேன். அதனால் ஆத்திரமடைந்த யக்ஷ குல மன்னனான குபேரன் என்னை சபித்தார். அதன் விளைவாக நான் என் மனைவியைப் பிரிந்து வெண்குஷ்டத்தால் பாதிக்கப்பட்டு மிகவும் அவதிப்படுகிறேன். ஆனால் ஏனோ தெரியவில்லை. இன்று இந்த துர்பாக்கியசாலியான ஆத்மா. திடீரென பாக்கியசாலியாகி உம்மைப் போன்ற பெரியோரை சந்திக்க நேர்ந்தது. சாதுக்கள் எப்பொழுதும் மற்றவர் துன்பத்தை கண்டு துன்புறுவர் என்பதை நான் கேட்டறிந்துள்ளேன்.


ஓ! பெரு முனிவரே! மங்களகரமான பலன்களை அடையும் விருப்பத்துடன் இந்த நிலையிழந்த ஆத்மா உம்மிடம் சரணடைந்துள்ளது. தயவு செய்து இவனை விடுவியுங்கள். மார்கண்டேய பெருமுனிவர். கருணையுடன் அவனிடம் பேசினார். ஓ! தோட்டக்காரனே! நான் மங்களகரமான மற்றும் பயன்தரும் ஒரு விரதத்தைப் பற்றி உனக்கு அறிவுறுத்துகிறேன். நீ ஆனி மாத தேய்பிறையில் (ஜூன் / ஜூலை) வரக்கூடிய யோகினி ஏகாதசியை அனுஷ்டிக்க வேண்டும். அதன் விளைவாக நீ இந்த வெண்குஷ்டத்தால் அவதிப்படும் சாபத்தில் இருந்து கண்டிப்பாக விடுபடுவாய். மார்கண்டேய முனிவரின் இந்த அறிவுரையைக் கேட்ட ஹேமாமாலி மகிழ்ச்சியடைந்து நன்றியுடன் தன் பணிவான வணக்கங்களை அவருக்கு சமர்ப்பித்தான். பிறகு முனிவரின் அறிவுரைப்படி இந்த ஏகாதசி விரதத்தை கடைபிடித்தான். அதன் பலனாக தன்னுடைய தெய்வீக உருவத்தை அடைந்து வீடு திரும்பி தன் மனைவியுடன் சேர்ந்தான். ஒருவர் 88,000 அந்தணர்களுக்கு உணவளிப்பதால் அடையும் பலனை இந்த ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதாலேயே அடையலாம். இந்த யோகினி ஏகாதசி ஒருவரின் எல்லா பாவ விளைவுகளையும் அழித்து, மிகுந்த தெய்வ பக்தியை கொடுக்கிறது.


 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

உத்வேக கதைகள் https://t.me/udvegakathaigal

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...