Skip to main content

ஸ்ரீல ரூபகோஸ்வாமி கண்ட ஊஞ்சல் லீலை

 


ஸ்ரீல ரூபகோஸ்வாமி கண்ட ஊஞ்சல் லீலை


மொழிபெயர்ப்பு :- சுத்தபக்தி குழுவினர்


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஸ்ரீ ராதா கிருஷ்ணரின் அற்புதமான ஊஞ்சல் உத்ஸவ லீலைகளை ஸ்ரீல ரூபகோஸ்வாமி ராதாகுண்டத்திலுள்ள இம்லிதலாவில் அனுபவித்து மகிழ்ந்தார்.

 

ராதாகுண்டத்திலுள்ள இம்லிதலா - கோவர்தனத்தில் உள்ள ஒரு பெரிய புளியமரம், அங்குதான் ஸ்ரீ ராதா கிருஷ்ணரின் அற்புதமான ஜூலன் லீலை (ஊஞ்சல் உத்ஸவம்) நடைபெற்றதாக ஸ்ரீல ரூபகோஸ்வாமியால் கண்டறியப்பட்டது. 'இம்லி' என்ற வார்த்தைக்கு புளி என்றும் 'தலா' என்றால் இடம் என்றும் பொருள்படும். ஒரு முறை ஸ்ரீல ரூபகோஸ்வாமி ராதாகுண்டத்தில் இருந்த பொழுது  அங்கிருந்த ஒரு பெரிய புளிய மரத்தின் அடியில் அமர்ந்து பகவானின் புனித நாமங்களை ஆழ்ந்து உச்சரிப்பதில் ஈடுபட்டிருந்தார். அப்போது மரத்தின் கிளையொன்றில் அழகான ஒரு ஊஞ்சல் தொங்கிக் கொண்டிருப்பதை அவர் கவனித்தார். அவ்வூஞ்சலானது இரண்டு பேர் முகத்திற்கு முகம் பார்த்து அமர்வதற்கு ஏதுவாக அமைக்கப்பட்டிருந்தது. திடீரென்று அங்கு பகவான் கிருஷ்ணர் ஸ்ரீமதி ராதாராணியுடனும் மற்ற கோபியர்களுடனும் அங்கு வருவதைக் கண்டார். உடனடியாக பகவான் கிருஷ்ணர் ஊஞ்சலில் ஏறி அமர்ந்து கொண்டு ஸ்ரீமதி ராதாராணியையும் தன்னுடன் ஊஞ்சலில் அமருமாறு அழைத்தார். முதலில் ஸ்ரீமதி ராதாராணி மறுத்துவிட்டார். ஏனென்றால் சில நேரங்களில் கிருஷ்ணர் ஊஞ்சலாட்டத்தின் போது ஊஞ்சலை மிக உயரத்திற்கு கொண்டு போவார். இதனால் ராதாராணி மிகவும் பயப்படுவார். எனவே அவர் ஊஞ்சலில் ஏற மறுத்தார். இப்போது கிருஷ்ணர் தான் அவ்வாறு உயர்த்தமாட்டேன் என்று உறுதியளித்தார். மேலும் கோபியர்கள் கூறினார்கள், 'நாங்களே ஊஞ்சலை ஆட்டுவோம் என்றும் அதனை உயரத்திற்குக் கொண்டு செல்ல மாட்டோமென்றும் கூறினார்கள். இறுதியில் மிகுந்த வற்புறுத்தலுக்குப் பிறகு அவர்களின் கோரிக்கைகளை ஏற்று ராதாராணி ஊஞ்சலில் கிருஷ்ணருடன் அவரது முகத்தைப் பார்க்கும்படியாக அமர்ந்தார்.

 

கோபியர்கள் ஊஞ்சலை மெதுவாக முன்னோக்கியும் பின்னோக்கியும் தள்ளத் துவங்கினர். மிகவும் மகிழ்ச்சியுடனும் நிதானத்துடனும் அமைதியான நிலையில் ஊஞ்சல் உத்ஸவத்தை  கோபியர்களும், ஸ்ரீமதி ராதாராணியும் அனுபவித்துக் கொண்டிருந்ததைக் கண்ட கிருஷ்ணர் மெதுமெதுவாக ஊஞ்சலை உயர்த்தும்படியாக குறும்புத்தனத்துடன் தனது காலை அங்கும் இங்குமாக நகர்த்தத் துவங்கினார். மிகக் குறுகிய நேரத்திற்குள், இங்கு என்ன நடக்கிறது என்பதை கோபியர்கள் உணரும் முன்னரே ஊஞ்சல் வெகு உயரத்திற்குச் சென்றது. அதை அவர்களால் தடுக்கவும் முடியவில்லை. ஊஞ்சல் மிக அதிக உயரத்திற்குச் சென்றதால் ஸ்ரீமதி ராதாராணி கிருஷ்ணரிடம் ஊஞ்சலை நிறுத்தும் படி கெஞ்சினார்கள். ஆனால் கிருஷ்ணர் இனிமையாக சிரித்தபடியே ஊஞ்சலை இன்னும் உயர்த்தினார். திடீரென்று ஊஞ்சல் மிக உயரத்தை எட்டியது. அது மரக்கிளையின்  மேலே ஒரு முழு வட்டத்திற்குச் செல்லும் போல் இருந்தது. அந்த நேரத்தில் ஸ்ரீமதி ராதாராணி உரத்த குரலில் அலறியபடி தன் கரங்களால் தனது அன்பிற்குரிய உயிரான பகவான் கிருஷ்ணரின் கழுத்தை உறுதியாகப் பிடித்துக் கொண்டார். அப்போது ஊஞ்சல் கிளையின் மேல் ஒரு வட்டம் சென்று மீண்டும் கீழே வந்தது. கிளைகளின் மேல் வலது புறமாக ஊஞ்சல் செல்வதைக் கண்ட கோபியர்கள் வியந்து போனார்கள். ஸ்ரீமதிராதாராணி கிருஷ்ணரின் கழுத்தை தனது கரத்தால் பற்றியிருந்ததைப் பார்ப்பதற்கு தன்னுடைய வாழ்க்கை அவரைச் சார்ந்தது என்பது போல் இருந்தது. முடிவில் ஊஞ்சல் மெதுவாக இறங்கிய பொழுதும் ஸ்ரீமதி ராதாராணி இன்னும் தனது கரத்தால் கிருஷ்ணரின் கழுத்தை ஒரு போதும் விடப்போவதில்லை என்பது போல் உறுதியாகத் தழுவியபடியே இருந்தார். இதைக் கண்ட கோபியர்கள் மிகுதியான மகிழ்ச்சியும், பரவசமும் அடைந்தார்கள். அவர்கள் அனைவரும் "தெய்வீகக் காதலர்களான" ஸ்ரீமதி ராதாராணி மற்றும் கிருஷ்ணரின் அற்புதமான மற்றும் அசாதரணமான லீலைகளைப் புகழ்ந்து, சிரித்தபடியே கைதட்ட ஆரம்பித்தனர்.

 

அதே நேரம் இவை அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த ஸ்ரீல ரூப கோஸ்வாமியின் உடலிலும் மனதிலும் பரவசத்தின் அலைகள் பாய்ந்தது. இதனால் திடீரென தன் சுய நினைவை இழந்து தரையில் விழுந்தார். இறுதியாக அவருக்கு நினைவு வந்த போது பகவான் கிருஷ்ணர், ஸ்ரீமதி ராதாராணி மற்றும் இதர கோபியர்களுடன் அங்கிருந்து சென்று விட்டதைக் கண்டார். ஆனால் அந்த ஊஞ்சல் இன்னும் அந்த மரக்கிளையில் தொங்கியபடியே இருந்தது. மேலும் மிகவும் ஆச்சரியப்படும் வகையில் ஊஞ்சல் கிளையின் மேல் மற்றும் கீழ் முழு வட்டமாகச் சென்றதன் விளைவாக அந்த கிளையானது முறுக்கப்பட்டிருப்பதைக் கண்டார். இந்த முறுக்கப்பட்ட புளிய மரம் மிகவும் புகழ் வாய்ந்தது. ராதாகுண்டத்திற்கு வருகை தரும் அனைத்து பக்தர்களும் இம்லிதலத்தின் இம்மரத்தின் தரிசனத்திற்காகச் செல்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக 1970- களின் நடுவில் இம்மரம் அழிந்து தனது ஒரு தண்டு பகுதியை மட்டும் விட்டுச் சென்றிருக்கின்றது. அங்கு வரும் பக்தர்கள் இம்மரத்திற்கு தங்களது நமஸ்காரங்களை செலுத்துவதற்காகவும் ஸ்ரீல ரூபகோஸ்வாமி அவர்கள்  கண்ணுற்ற அழகான மற்றும் அற்புதமான ஊஞ்சல் லீலையை நினைவுகொள்வதற்காகவும் வருகை புரிகின்றனர்.



🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.





Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...