Skip to main content

பகவான் ஶ்ரீ பலராமர்



ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், பகவான் கிருஷ்ணர், பூமியில் அவதரித்தார். அவரோடு, அவரது சகோதரராக பலராமர் அவதரித்தார். யமுனை நதிக்கரையிலிருந்த விருந்தாவனம் என்ற கிராமத்தில் அவர்கள் வசித்து வந்தார்கள். இரு சகோதரர்களும் எல்லையில்லா அழகை பெற்றிருந்தனர். கிருஷ்ணர், கார்மேக வண்ணத்தோடும் தாமரை கண்களோடும், புல்லாங்குழல் கொண்டு காணப்பட்டார். பலராமர் வெள்ளை நிறத்தோடு, தாமரை கண்களோடு, கருநிற கூந்தலோடு கலப்பையோடு காணப்பட்டார். கிருஷ்ணர் எப்போதும் மஞ்சள் நிற ஆடைகள் அணிந்திருந்தார். பலராமர் எப்போதும் நீல நிற ஆடைகள் அணிந்திருந்தார். 


அவர்களுடைய தந்தையான நந்த மஹாராஜர் மற்றும் தாய் யசோதா தேவிக்கு சொந்தமாக ஒன்பது லட்சம் பசுக்கள் இருந்தன. அவற்றிலிருந்து வரும் பாலை கொண்டு, தயிர், மோர், வெண்ணை மற்றும் நெய் கிடைத்தது. மேலும் எருதுகள் விவசாயம் மற்றும் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்டது. விருந்தாவன வாசிகளுக்கு போதுமான அளவு பழங்கள் மற்றும் தானியங்கள் கொடுத்தது போக மீதமிருந்தால் அவர்கள் அருகிலிருக்கும் கிராமத்து மக்களோடு பண்டமாற்று முறைப்படி, அதிக விளைச்சலை கொடுத்து, அதற்கு நிகரான ஆபரணங்கள் மற்றும் ஆடைகள் வாங்குவர். இவ்வாறாக விருந்தாவனத்தில் இருந்த அனைவரும் மகிழ்ச்சியாகவும் திருப்தியாகவும் வாழ்ந்தனர்.


விருந்தாவன வாசிகள் அனைவரும் தங்களின் உயிரினும் மேலாக கிருஷ்ணரை நேசித்தனர். ஆறு வயதானவுடன், கிருஷ்ணருக்கும் பலராமருக்கும் கன்றுக்குட்டிகளை மேய்க்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. கன்றுக்குட்டிகளுடன் தினமும் காலையில் கிருஷ்ணர், பலராமர் மற்றும் அவருடைய நண்பர்கள் தங்கள் தாய் தரும் உணவை எடுத்துக்கொண்டு மேய்ச்சலுக்கு, வனத்திற்கு செல்வார்கள். அங்கே கன்றுக்குட்டிகளை மேய விட்டு விட்டு இவர்கள் அனைவரும் விளையாடுவார்கள். யமுனை நதியின் குளிர்ந்த நீர், பறவைகளின் ஓசை, மலர்களின் நறுமணம், வனத்தின் தென்றல் காற்று, கோவர்தன மலையிலிருந்து கொட்டும் நீர்வீழ்ச்சி -  என அனைத்தயும் ரசித்தனர்.


மரங்கள், தங்கள் கிளைகளை வளைத்து, கிருஷ்ணருக்கும் பலராமருக்கும் பழங்களை வழங்கும்.  அவர்கள் மகிழ்ச்சியாக உண்பார்கள். நடனம் ஆடுவது, பாட்டு பாடுவது, ஓடி பிடித்து விளையாடுவது, மல்யுத்தம் செய்வது, விலங்குகள் போல குரல் எழுப்புவது மற்றும் நடித்து காட்டுவது, ஒளிந்து விளையாடுவது - என மிகவும் மகிழ்ச்சியாக பகல் வேளையை கழிப்பார்கள்.  சூரியன் அஸ்தமிக்கும் சமயம், விருந்தாவன வாசிகள், அவர்களின் வருகைக்காக காத்திருப்பார்கள். விருந்தாவனத்தின் கோபிகைகள் அனைவரும் கிருஷ்ணர் மீது ஆசை கொண்டார்கள். பௌர்ணமி நிலவில், யமுனை நதிக்கரையில், கிருஷ்ணரும் கோபிகைகளும் நடனமாடுவார்கள். 


ஒரு முறை, கிருஷ்ணரும் பலராமரும் அருகிலிருக்கும் நகரமான மதுராவிற்கு சென்றார்கள். திரும்பிவருவதாக விருந்தாவனவாசிகளிடம் வாக்களித்த அவர்கள், அதற்குப்பின்னர் விருந்தாவனம் திரும்பவே இல்லை. நந்த மகாராஜா, யசோதா தேவி, கோபர்கள் மற்றும் கோபிகைகள் என அனைவரும் மீளாத்துயரத்தில் ஆழ்ந்தனர். 


ஆண்டுகள் பல கழித்து, கிருஷ்ணரும் பலராமரும் துவாரகைக்கு இளவரசர்களானார்கள். விருந்தவனத்திலிருந்த எளிமையான வாழ்விற்கு நேர் மாறாக, இங்கே அரண்மனையில் அனைத்தும் ஆடம்பரமாக இருந்தது. அவர்களுடைய மனைவிகள், குழந்தைகள், மந்திரிகள், பணியாட்கள் மற்றும் படை வீரர்கள் என பெரும் மக்கள் கூட்டம் இருந்தது.


ஒருமுறை, தனது தாய் தந்தையரை பார்க்க ஆவல் கொண்ட பலராமர், விருந்தாவனத்திற்கு சென்றார். அங்கு அவரை கண்ட விருந்தவன வாசிகள் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தனர். கோபர்களும் வளர்ந்திருந்தனர். நந்த மஹாராஜாவும் யசோதா தேவியும் கிருஷ்ணரை நலம் விசாரித்தனர். கோபிகைகளுக்கு கிருஷ்ணரை பார்க்க வேண்டும் போல் இருந்தது. அவர்கள் பலராமரிடம், "கிருஷ்ணர் எங்களை நினைவில் வைத்திருக்கிறாரா? அவர் விருந்தாவனம் வருவாரா? துவாரகா நகரத்து பெண்கள் மிகவும் அழகாக இருப்பார்கள். அப்படியிருக்கையில், கிருஷ்ணர் கிராமத்தினரான எங்களை ஞாபகம் வைத்திருப்பாரா?" என்று கேட்டு வருந்தினார். கிருஷ்ணருடைய பிரிவை தாங்க முடியாமல் அவரை நினைத்து அழ தொடங்கினர். 


அவர்களை சமாதானப்படுத்த எண்ணிய பலராமர், சிறிது காலம் அங்கேயே தங்கி, கிருஷ்ணரின் லீலைகளை தினமும் விருந்தாவன வாசிகளுக்கு கூறி வந்தார். ஒரு முறை யமுனை நதிக்கரையில் அமர்ந்து, பலராமர், காட்டு தேனில் செய்யப்பட்டிருந்த ஒரு பானத்தை அருந்தினார். பின்னர் யமுனையில் குளிக்க எண்ணினார். ஆகையால் யமுனாதேவியை தன்ருகில் வரும்படி அழைத்தார். ஆனால் பலராமர் சோமபானம் அருந்தியிருப்பதாக எண்ணிய யமுனாதேவி, அருகில் வர மறுத்தார். மிகவும் கோபம் கொண்ட பலராமர், தனது கலப்பையை கொண்டு, "நீ இப்போது வரவில்லையென்றால், நன் உன்னை நூற்றுக்கணக்கான நீரோடைகளாக மாற்றி விடுவேன்", என்று கூறினார். பயந்த யமுனா தேவி, அவர் முன் தோன்றினார். கரங்களை கூப்பி பலராமரிடம் மன்னிப்பு வேண்டினர். பலராமரும் மன்னித்தார். பின்னர் அணைத்து கோபியர்களுடனும் யமுனையில் நீராடி மகிழ்ந்தார். 


பலராமரின் கலப்பை பட்டதால், இன்றும் யமுனைக்கு பல கிளிகள் உள்ளன. இரண்டு மாதங்கள், விருந்தாவன வாசிகள் அனைவரும் பலராமரோடு, தங்கள் வாழ்வின் இறுதி இரண்டு மாதங்கள் போல கழித்தனர். கிருஷ்ணரும் பலராமரும் என்றும் அவர்களோடு இருப்பதாய் உணர்ந்தார்கள்.




  🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.





Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...