Skip to main content

புலியா தோமாரே,ஸம்ஸாரே ஆஸியா

 

பகவானை மறந்து பௌதிக உலகினுள் வாழும் ஜீவன் தனது ஒவ்வொரு பிறவியிலும் வாழ்க்கையை வீணடிக்கின்றான். அவ்வாறு வாழ்ந்தவன் ஏதோ நல்லதிர்ஷ்டத்தினால் பகவானிடம் சரணடைவதற்கான வாய்ப்பினைப் பெற்றால், அவன் அதனை முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதனை எடுத்துரைக்கும் விதமாக, ஒரு சாதாரண கட்டுண்ட ஆத்மாவின் நிலையில் தம்மை நிறுத்திய பக்திவினோத தாகூர் இப்பாடலை நமக்கு வழங்கியுள்ளார். மனித வாழ்வை வீணடிக்கக் கூடாது என்பதை இப்பாடல் நன்கு உணரச் செய்கிறது.

(1)

புலியா  தோமாரே,  ஸம்ஸாரே  ஆஸியா,

பேயே  நானா-வித  ப்யதா

தோமார  சரணே,  ஆஸியாசி  ஆமி,

போலிபோ  து:கேஹேர  கதா

(2)

ஜனனீ  ஜடரே,  சிலாம  ஜகோன,

பிஷம  பந்தன-பாஷே

ஏக-பார  ப்ரபு!  தேகா  தியா  மோரே,

வஞ்சிலே  ஏ  தீன  தாஸே

(3)

தகோன  பாவினு,  ஜனம  பாஇயா,

கரிபோ  பஜன  தவ

ஜனம  ஹஇல,  பஃடி’  மாயா-ஜாலே,

நா  ஹஇல  ஜ்ஞான-லவ

(4)

ஆதரேர  சேலே,  ஸ்வ-ஜனேர  கோலே,

ஹாஸியா  காடானு  கால

ஜனக  ஜனனீ-  ஸ்னேஹேதே  புலியா,

ஸம்ஸார  லாகிலோ  பாலோ

(5)

க்ரமே  தின  தின,  பாலக  ஹஇயா,

பேலினு  பாலக-ஸஹ

ஆர  கிசு  தினே,  ஜ்ஞான  உபஜில,

பாட  போஃடி  அஹர்-அஹ:

(6)

வித்யார  கௌரவே,  ப்ரமி’  தேஷே  தேஷே,

தன  உபர்ஜன  கரி

ஸ்வ-ஜன  பாலன,  கரி  ஏக-மனே,

புலினு  தோமாரே,  ஹரி!

(7)

பார்தக்யே  ஏகோன,  பகதிவினோத,

காதியா  காதர  அதி

நா  பஜியா  தோரே,  தின  ப்ரி’தா  கேல,

ஏகோன  கி  ஹபே  கதி?


பாடலின் பொருள்

(1) எம்பெருமானே, உங்களை மறந்து இந்த பெளதிக உலகத்தினுள் வந்து, நான் பலவிதமான துன்பங்களை அனுபவித்து வருகிறேன், இப்போது உங்களது தாமரைத் திருவடிகளை அணுகி எனது துன்பக் கதையைக் கூற உள்ளேன்.

(2) அன்னையின் கருவில் வலி மிகுந்த கூண்டினுள் நான் பந்தப்பட்டிருந்தபோது, பிரபுவே, ஒருமுறை நீங்கள் எனக்கு காட்சியளித்தீர்கள். கண நேர தரிசனத்தை வழங்கிவிட்டு, உங்களது சேவகனைப் புறக்கணித்து விட்டீர்.

(3) அச்சமயத்தில் நான் எண்ணினேன், “இம்முறை பிறந்த பின்னர், ஒருமுகப்படுத்தப்பட்ட கவனத்துடன் நிச்சயமாக உங்களை வழிபடுவேன்.” ஆனால், ஐயகோ! பிறந்த பின்னர், உலக மயக்கம் என்னும் வலையில் மாட்டிக் கொண்டேன், ஒரு துளி உண்மை அறிவைக்கூட நான் பெறவில்லை.

(4) ஒரு செல்லக் குழந்தையாக உறவினர்களின் மடியில் தவழ்ந்தேன், சிரித்துசிரித்து காலத்தைக் கழித்தேன். எனது தாய்தந்தையர் என்னிடம் காட்டிய பாசம் உங்களை மேன்மேலும் மறக்கச் செய்தது, இந்த உலகம் நல்ல இடமே என்று எண்ணத் தொடங்கினேன்.

(5) படிப்படியாக நாள்தோறும் நான் ஒரு பாலகனாக வளர்ந்தேன், இதர பாலகர்களோடு விளையாடத் தொடங்கினேன். விரைவில் எனது அறிவு வளரத் தொடங்கியது, ஒவ்வொரு நாளும் பள்ளிப்பாடங்களை கவனமுடன் படித்தேன்.

(6) எனது கல்வியின் கர்வத்தினால் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து சொத்து சேகரித்தேன். அதன் மூலமாக எனது குடும்பத்தை ஒருமுகப்படுத்தப்பட்ட மனதுடன் பராமரித்தேன், பகவான் ஹரியே உம்மை மறந்து அவற்றைச் செய்தேன்!

(7) இப்போது வயோதிகப் பருவத்தில் இந்த பக்திவினோதன் மரணம் அணுகும் தருணத்தில் மிகுந்த வருத்தத்துடன் அழுகிறான். பிரபுவே, நான் உங்களை வழிபடத் தவறி விட்டேன், எனது நாள்களை வீணாகக் கழித்து விட்டேன். இப்போது என்னுடைய கதி என்னவாகும்?


"இக்கதை பகவத் தரிசனம் என்னும் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது. www.tamilbtg.com"


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.



Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆



Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆


சுத்த பக்தி https://t.me/suddhabhaktitami

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...