Skip to main content

கோலோக விருந்தாவனத்தில் ராதா குண்டத்தின் தோற்றம்

 




கோலோக விருந்தாவனத்தில்  ராதா குண்டத்தின் தோற்றம்


வழங்கியவர் :- சுத்தபக்தி குழுவினர்


ராதா-குண்டம் மற்றும் சியாமா-குண்டம் எவ்வாறு ஆன்மீக உலகில் முதலில் தோன்றின என்பது பற்றி ஆதி-புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் கோலோக விருந்தாவனத்தில்,  ஸ்ரீமதி ராதாராணியும் பகவான் கிருஷ்ணரும் ஒரு வனத்தில்  ரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தனர். கோபியர்கள் அவர்களுக்கு சேவை செய்து கொண்டிருந்தனர்.  ராதாராணியின் இன்பத்தில் ஆழ்ந்து மூழ்கியிருந்த கிருஷ்ணர் திடீரென்று தீவிர அன்பின் அறிகுறிகளை வெளிப்படுத்தத் தொடங்கினார். கிருஷ்ணரின் உணர்வுகள் மிகவும் தீவிரமாக இருந்ததால், அவர் ராதாராணியின் மனநிலையைப் பெறத் தொடங்கினார். அந்த மனநிலையில் , இறைவன் கண்ணீரை வடித்து, கிருஷ்ணரின் பெயரை மீண்டும் மீண்டும் அழைக்கத் தொடங்கினார்; பின்னர் விரக்தியால், தன்னைத் தேடி அருகிலுள்ள காட்டுக்குள் ஓடினார்.


கிருஷ்ணரை தன் சொந்த வடிவத்திலும் மனநிலையிலும் பார்த்து, அருகில் உள்ள காட்டில் மறைந்து சென்றதை பார்த்த ஸ்ரீமதி ராதாராணியும் தீவிர அன்பின் மனநிலையில் அதே வனத்திற்குள் நுழைந்தார். ராதாராணியுடைய உணர்வுகள் மிகவும் தீவிரமாக, அவர் கிருஷ்ணரின் மனநிலையையும் வடிவத்தையும் எடுத்தார். கண்ணீர் பெருக்கெடுத்து, மீண்டும் மீண்டும் ராதாவின் பெயரைக் கூறி அழ ஆரம்பித்தார்.


ராதாராணியின் திடீர்  தீவிரமான மனநிலை மாற்றத்தை அவதானித்த கோபியர்கள் அவரை பல வழிகளில் சமாதானப்படுத்த முயன்றனர், ஆனால் பலனில்லை. கோபியர்களில் சிலர் காட்டிற்குள் நுழைந்து கிருஷ்ணரைக் கண்டுபிடிக்க முயன்றனர். சிறிது நேரம் தேடிய பிறகு, கோபியர்கள் கிருஷ்ணரைக் கண்டுபிடித்து, அவரை ஓரளவு சமாதானப்படுத்தி, ராதாராணியின் பரிதாப நிலையைத் தெரிவித்தனர். நிலைமையைப் புரிந்துகொண்ட கிருஷ்ணர், உடனடியாக ராதாராணியிடம் செல்ல விரும்பினார். ராதாராணியின் நவாக்ஷர மந்திரத்தை உச்சரித்தால், அவர் உடனடியாக வருவார் என்று வானத்திலிருந்து திடீரென்று ஒரு வான குரல் ஒலித்தது.


ராதாராணியின் வடிவத்திலும் மனநிலையிலும் இருந்த கிருஷ்ணர், பின்னர் நவாக்ஷர மந்திரத்தை உச்சரித்தார், ராதாராணி உடனடியாக அங்கு வந்து அவர் முன் நின்றார். பின்னர், கிருஷ்ணர் இனிய வார்த்தைகளில் அவரிடம் பேசத் தொடங்குவதை ராதாராணி தலை குனிந்து, வெட்கத்துடன் தரையை நோக்கிய கண்களுடன்,  கேட்டார். "என் அன்பான ராதா, நான் உனது நித்திய சேவகன், தயவு செய்து நீ நினைக்கும் விதத்தில் எனக்கு தண்டனை கொடு. என் அன்பான ராதா, நான் உன்னை பிரிந்து அழவைத்தேன், உன்னை வேதனைப்படுத்தினேன். நானும் அளவற்ற பிரிவினால் கதறி அழுதேன்.  நமது கண்ணீர் வெள்ளம் இரண்டு குண்டங்களை உருவாக்கியது.  உனது கண்ணீரால் உருவாக்கப்பட்ட குண்டம் ராதா குண்டம் என்றும், என் கண்ணீரால் உருவாக்கப்பட்ட குண்டம் சியாமகுண்டம் என்றும் அறியப்படும்.


கிருஷ்ணரிடமிருந்து இதை கேட்டு, ராதாராணி சமாதானம் அடைந்தார். அவர்கள் இருவரும் தங்கள் துன்பத்தை துறந்ததைக் கண்டு கோபியர்கள் மகிழ்ந்தனர். ராதாராணியும் கிருஷ்ணரும் புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு குண்டங்களில் குளிக்கச் சென்றனர். ராதாராணி தன் கண்ணீரால் நிரம்பிய  ராதா-குண்டத்தில்  மூழ்கியபோது, அவர்  உடனடியாக தனது அசல் வடிவத்தை மீட்டெடுத்தார்.  இது அனைத்து கோபியர்களுக்கும் மகிழ்ச்சியைத் தந்தது.  பின்னர் கிருஷ்ணர் தன் கண்ணீரால் நிரம்பிய சியாமா-குண்டத்தில்  மூழ்கி உடனடியாக தனது அசல் வடிவத்தை திரும்பப் பெற்றார்.


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...