Skip to main content

கடவுளை அறிவது எப்படி?

 



வழங்கியவர்: ஜெய கோபிநாத தாஸ்

**************************


அறிவைப் பெறுவதற்கு பொதுவாக மூன்று முக்கிய வழிகள் உள்ளன.

(1) பிரத்யக்ஷ பிரமாணம்–புலன்களைக் கொண்டு நேரடியாக அடையப்படும் அறிவு

(2) அனுமான பிரமாணம்–முந்தைய தகவல்களைக் கொண்டு யூகத்தின் மூலம் பெறப்படும் அறிவு

(3) சப்த பிரமாணம்–அங்கீகரிக்கப்பட்ட நபர்களிடமிருந்து பெறப்படும் அறிவு

கடவுளைப் பற்றி அறிந்துகொள்வதற்கு பிரத்யக்ஷ பிரமாணமும் அனுமான பிரமாணமும் பயன்தராதவை. சப்த பிரமாணத்தினால் மட்டுமே இறைவனை அறிய இயலும்.

பிரத்யக்ஷ பிரமாணம்
**************************
நேரடியாகப் புலன்களால் அறிவைப் பெறக்கூடிய வழிமுறை பிரத்யக்ஷ பிரமாணம் எனப்படும். இதில் சில பிரச்சனைகள் உள்ளன. நமது புலன்கள் எல்லைக்குட்பட்டவை. நமது கண்களால் எல்லாவற்றையும் காண இயலாது. அவற்றின் பார்வை அளவு 400 முதல் 700 மில்லிமைக்ரான். நமது காதுகள் 20 முதல் 20,000 ஹெர்ட்ஸ்க்கு இடைப்பட்ட ஒலியலைகளை மட்டுமே கேட்கும் திறன் கொண்டவை. மேலும், நமது புலன்கள் மாயையின் வயப்படுபவை. அதாவது ஒன்றை மற்றொன்றாக அடையாளம் கண்டு கொள்ளக் கூடியவை. இவை நமக்கு முழுமையான ஞானத்தைத் தராது. எனவே, இறைவனை அடைவதற்கான முயற்சியில் பிரத்யக்ஷ பிரமாணம் முழுப் பலனைத் தராது.

அனுமான பிரமாணம்
*************************

புலன்களால் பெற்ற அறிவைக் கொண்டு மனதால் யூகித்து அறிந்து கொள்ளும் வழிமுறை அனுமான பிரமாணம் எனப்படும். அனுமான பிரமாணமானது பிரத்யக்ஷ பிரமாணத் தின் அறிவை அடிப்படையாகக் கொண்டதால் இந்த அறிவும் பூரணமானதாக இருக்க முடியாது.

சப்த பிரமாணம்
**************************

அங்கீகரிக்கப்பட்ட நபர்களிடமிருந்து கேட்பதால் பெறப்படும் அறிவு சப்த பிரமாணம் எனப்படும். உதாரணமாக, உலகச் செய்திகளை அறிந்துகொள்ள நாம் பி.பி.சி சேனலை பார்ப்போம். அவர்கள் பலகாலமாக தவறில்லாமல் ஒளிபரப்பு செய்வதால் அதை நாம் நம்புகிறோம். அதே போன்று மிக முக்கிய விஷயங்களைப் பற்றி அறிய நாம் வேதங்களை அணுக வேண்டும். வேதம் என்றால் ‘அறிவு’ என்று பொருள். இஃது இந்துக்களுக்கு மட்டும் என்றோ, சமஸ்கிருதம் அறிந்தவர்களுக்கு மட்டும் என்றோ கிடையாது. வேதங்கள் பரம்பொருளான இறைவனைப் பற்றியவை, எல்லாருக்கும் உரித்தானவை. இன, மத, பேதத்திற்கு அப்பாற்பட்டவை. வேதத்தின் வார்த்தைகள் பழமையானவை. எந்தவித மாற்றமும் இல்லாதவை. சில உதாரணங்கள்:

(1) பூமி கோள வடிவமானது.

(2) மலத்தை அசுத்தமானதாக உரைக்கும் வேதங்கள், பசுஞ்சாணத்தை மிகவும் தூய்மையானதாகக் கூறுகின்றன. பசுஞ் சாணம் ஒரு கிருமி நாசினி என்பது 1940களில் மட்டுமே கண்டறியப்பட்டது. ஆனால் வேத கலாச்சாரத்தில் பசுஞ்சாணம், தூய்மைபடுத்துவதற்காக உபயோகப்பட்டதை நாம் எளிதில் காணலாம்.

(3) ஸ்ரீமத் பாகவதத்தின் மூன்றாவது காண்டத்தில் கருவின் வளர்ச்சியானது கருத்தரிப்பின் காலத்திலிருந்து குழந்தை பிறக்கும் நாள்வரை விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

(4) புராணங்களில் எதிர்கால நிகழ்வுகளைப் பற்றிய முன்னறிவிப்பினைக் காணலாம்: புத்தர், ஏசு, நபிகள் நாயகம், சந்திர குப்தர், அசோகர் போன்றவர்களைப் பற்றிய குறிப்பு புராணங்களில் சுமார் 5000 வருடங்களுக்கு முன்பே இடம் பெற்றுள்ளது.

(5) கலி யுகத்தின் நிலைமை பற்றியும் பாகவத புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.

வேதங்கள் ஸ்ருதி, கேட்டறியப்படும் ஞானம் என்று அழைக்கப்படுகின்றன. கலி யுகத்திற்கு முன்பு வேதங்கள் எழுத்து வடிவத்தில் கிடையாது. சுமார் 5000 வருடங்களுக்கு முன்பு, வேத வியாசர் இவற்றை எழுத்து வடிவத்தில் அளித்தார். கடவுளைப் பற்றி நாம் வேதங்களிலிருந்து தெரிந்துகொள்ள வேண்டும். வேதங்களையும் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளிடமிருந்து கேட்டு அறிந்துகொள்ள வேண்டும். அதாவது முறையான குரு-சீடப் பரம்பரையில் வரும் ஓர் அதிகாரியிடமிருந்து தெரிந்துகொள்ள வேண்டும்; மற்றவர்களிடமிருந்து அல்ல.

வேத சாஸ்திரங்களைப் பக்குவமான நபர்களிடமிருந்து பெற்றால், கடவுளை அறிவதற்கான வழிமுறையில் நம்மால் ஈடுபட முடியும். அம்முறையில் படிப்படியாக முன்னேறி, காலப்போக்கில் கடவுளை உணர முடியும்.

க்கட்டுரை பகவத் தரிசனம் என்னும் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது. www.tamilbtg.com"


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...