Skip to main content

ஆன்மீக முன்னேற்றப் பாதையிலுள்ள இடைஞ்சல்கள்


ஜன்மைஸ்வர்ய-ஸ்ருத-ஸ்ரீபிர்
ஏதமான-மத: புமான்
நைவார்ஹதி அபிதாதும் வை
த்வாம் அகிஞ்சன-கோசரம்

மொழிபெயர்ப்பு

எம்பெருமானே, பகவானாகிய தங்களை சுலபமாக அணுகிவிட முடியும். ஆனால் பௌதிக வாழ்வில் முற்றிலும் விரக்தி அடைந்தவர்களால் மட்டுமே அதைச் செய்ய முடியும். கௌரவமான குடும்பம், பெரும் செல்வம், உயர்ந்த கல்வி மற்றும் உடலழகு ஆகியவற்றில் தன்னை முன்னேற்றிக் கொள்ள முயலும், ஒருவரால் உண்மையான உணர்வுடன் உங்களை அணுக முடியாது.

பொருளுரை

கௌரவமான குடும்பத்தில் பிறந்து அதிகமான செல்வத்தைப் பெற்றிருத்தல், கல்வி மற்றும் கவர்ச்சியான உடழலகு ஆகியவற்றைப் பெற்றிருத்தல் பௌதிக முன்னேற்றமாக கருதப்படுகின்றன. பௌதிகவாதிகள் அனைவரும் இத்தகைய பௌதிக செல்வங்களைப் பெறுவதில் தீவிரமாக உள்ளனர். இதுவே பௌதிக நாகரிக முன்னேற்றம் எனப்படுகிறது. ஆனால் இச்செல்வங்களை எல்லாம் பெற்றிருப்பதால், நிலையற்ற அவ்வுடைமைகளில் மயங்கி திமிர் பிடித்தவர்களாக நடந்துகொள்கின்றனர். இதன் விளைவாக, இத்தகைய திமிர் பிடித்தவர்களால் பகவானின் புனித நாமத்தை, “ஓ கோவிந்தா, ஓ கிருஷ்ணா” என்று மனப்பூர்வமாக உச்சரிக்க இயலாது. ஒருமுறை பகவானின் புனித நாமத்தை உச்சரிப்பதால், பாவியொருவன், எல்லா பாவங்களையும் போக்கிக் கொள்கின்றான் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. இதுவே பகவானின் புனித நாமத்தை உச்சரிப்பதின் வலிமையாகும். இது சிறிதும் மிகைப்படுத்தப்பட்ட கூற்றாகாது. பகவானின் புனித நாமத்திற்கு உண்மையாகவே இத்தகைய சக்தி வாய்ந்த ஆற்றல் உண்டு. ஆனால் இத்தகைய உச்சரிப்பிலும் தரம் என்பது உண்டு. அது உணர்வின் தரத்தைப் பொறுத்ததாகும். ஆதரவற்ற ஒருவரால் பகவானின் புனித நாமத்தை உணர்ச்சி பூர்வமாக உச்சரிக்க முடியும். ஆனால் அதே புனித நாமத்தை, பௌதிகத்தில் பெருந்திருப்தியடைந்தவரால் அவ்வளவு உணர்ச்சி பூர்வமாக உச்சரிக்க இயலாது. பௌதிக திமிர் பிடித்த ஒருவன் பகவானின் புனித நாமத்தை எப்பொழுதாவது உச்சரிக்கக்கூடும். ஆனால் அவனால் தரமாக உச்சரிக்க இயலாது. ஆகவே, பௌதிக முன்னேற்றத்திற்குரிய நான்கு கொள்கைகளான (1) கௌரவமான குடும்பம், (2) நல்ல செல்வம், (3) உயர்ந்த கல்வி மற்றும் (4) கவர்ச்சியான அழகு ஆகியவை ஆன்மீக முன்னேற்றப் பாதையிலுள்ள இடைஞ்சல்கள் என்று கூறப்படுகின்றன. காய்ச்சல், சுகாதாரமற்ற உடலின் ஒருபுற அம்சம் என்பதைப் போலவே, தூய ஆன்மீக ஆத்மாவை மூடியுள்ள பௌதிக திரையும் ஒரு புற அம்சமேயாகும். பொதுவானமுறை என்னவெனில், காய்ச்சலின் அளவைக் குறைத்துவிட வேண்டும், தவறான சிகிச்சை முறையால் அதை அதிகரித்துவிடக் கூடாது. ஆன்மீகத்தில் முன்னேறியவர்கள் சில சமயங்களில் பௌதிக வாழ்வில் ஏழ்மையானவர்களாக இருப்பதாக காணப்படுகிறது. இது உற்சாகத்தை குன்றிவிடச் செய்யாது. மாறாக, காய்ச்சலின் உஷ்ணம் குறைவதானது எப்படி நல்லதோ, அதைப் போலவே இந்த ஏழ்மையான நிலை நல்ல அறிகுறியாகும். வாழ்வின் நோக்கத்தைப் பற்றிய அறியாமையில் அதிகமாக ஒருவரை ஆழ்த்திவிடக்கூடிய பௌதிக மார்க்கத்தின் அளவை குறைத்துக் கொள்ள வேண்டியதே வாழ்வின் குறிக்கோளாக இருக்கவேண்டும். பௌதிக மயக்கத்தில் ஆழ்ந்துள்ளவர்கள் பகவானின் இராஜ்ஜியத்திற்குள் நுழைய சிறிதும் தகுதியற்றவர்களாவர்.

ஶ்ரீமத் பாகவதம் 1.8.26)

 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

உத்வேக கதைகள் https://t.me/udvegakathaigal

Comments

Post a Comment

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...