Skip to main content

அதிதி பூஜை


சூத கோஸ்வாமி கூறினார்.மா முனிவர்களே, உலகில் அனைத்து பூஜைகளிலும் சிறந்தது அதிதி பூஜை. அளவற்ற நற்பலனைத் தரக் கூடியது. தன்னிடமுள்ளவற்றால், வந்த அதிதியை திருப்திப்படுத்துகிறவர்கள் உத்தமலோகங்களை அடைவார்கள். மகனீஸ்யர்களாவார்கள். தன் வீட்டுக்கு வந்தவர்களை நாராயண ஸ்வரூபமாக நினைத்து பூஜிப்பவர்கள் மகா நரகங்களை வென்று திவ்ய வைகுண்டத்திற்குச் செல்வார்கள். அதிதி பூஜை செய்து புண்ணிய லோகங்களை அடைந்தவர்கள் பலர். அதற்கு உதாரணமாக ஒரு கதை கூறுகிறேன் கேளுங்கள் 


முன்பு கங்கை நதிக்கரையில் ஒரு பிராமணக் குடும்பம் வாழ்ந்து வந்தது. தாய், தந்தை, மகன், மருமகள் என்னும் நால்வர்தான் அந்தக் குடும்பத்தின் உறுப்பினர்கள். இவர்கள் யாரிடமும் யாசகம் கேளாமல் வயல்களில் இரைந்து கிடக்கும் ஈரமான தானியமணிகளை சேகரித்துக் கொண்டு வந்து காயவைத்து, இடித்து, நான்கு உருண்டைகளாக்கி நால்வரும் சாப்பிட்டு நாட்களை கழித்து வந்தனர். அவர்கள் மகா பக்தர்கள்.


அவர்களின் இந்த சேவையால் மகிழ்ச்சியடைந்த பகவான் ஶ்ரீமன் நாராயணன் அவர்களிடம் லீலை புரிய எண்ணி ஒரு கிழப் பிராமணர் உருவத்தில் பசியால் துடிப்பவரைப் போல் கண்களை மேல் சொருகிக் கொள்ள, வாயால் மூச்சு விட்டபடி தட்டுத்தடுமாறிக் கொண்டு வந்து அவர்கள் முன் விழுந்தார். அவரைக் கண்டு பரிதாபம் கொண்டு அதிதியை ஆதரிக்க எண்ணிய வீட்டின் எஜமானி தான் பத்து நாட்களாக உணவு இல்லாமல் பட்டினி கிடந்த போதிலும் பரவாயில்லையென்று நினைத்துத் தன் பங்கான ஒரு உருண்டையை அவருக்குக் கொடுத்தாள். அதைத் சாப்பிட்ட பிரமாணன் இன்னும் வேண்டும் என்பது போல் பார்த்தார். உடனே மருமகள் தன் பங்கையும் தருகிறேன் என்றாள். பத்து நாட்களாக உணவில்லாமல் இருந்தும் இன்று எல்லோரும் தத்தம் பங்கு உணவை கொடுத்துவிட்டதைப் பார்த்து அந்த விட்டு எஜமானன் மிகவும் வருத்தப்பட்டான்.


ஆயினும் மருமகளுக்கும் அது தான் தர்மமென்று கூறி அந்த அதிதிக்கு தன் பங்கு உருண்டையையும் தந்து பூஜித்தாள். இப்படி தியாகம் செய்து அதிதி பூஜை செய்த அந்தக் குடும்பத்தினர் நடுவில் அந்த வயதான பிராமணர் நாராயணமூர்த்தியாகத் தோன்றி, "உங்கள் அதிதி பூஜையைக் கண்டு மகிழ்ந்தேன். உங்களுக்காக என் விமானம் சித்தமாக உள்ளது. அனைவரும் என் உலகிற்கு வாருங்கள்" என்று கூறி அவர்களை வைகுண்டத்திற்கு அழைத்துச் சென்றார்.


இவ்வாறு அதிதி பூஜையின் மகிமையைப் பற்றி சூத முனிவர் வர்ணித்து கூறினார்.



பத்மபுராணம்


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

உத்வேக கதைகள் https://t.me/udvegakathaigal

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...