Skip to main content

சிவபெருமானின் கருணையால் விஷ்ணு பக்தியை பெற்ற பிரசேதர்கள்

 


வயம்து ஸாக்ஷாத் பகவன் பவஸ்ய

ப்ரியஸ்ய ஸக்யு: க்ஷண-ஸங்கமேன

ஸூதுஸ் சிகித்ஸ்யஸ்ய பவஸ்ய ம்ருத்யோர்

பிஷக்தமமம் த்வாத்ய கதிம் கதா: ஸ்ம




மொழிபெயர்ப்பு


உமக்கு மிகவும் பிரியமானவரும், உமது நெருங்கிய நண்பராகவும் இருக்கும் சிவபெருமானுடன் ஒரு கணநேரம் தொடர்பு கொண்டதால் உம்மைக்காணும் பேறு பெற்றோம். வாழ்க்கையென்னும் தீராத நோயைக் கூடத் தீர்க்கும் தேர்ந்த மருத்துவர் நீர். எங்களது நல்வினைப்பயனால் உமது திருவடித்தாமரைகளைச் சரண்புக எங்களால் முடிந்தது.


பொருளுரை


“ஹரிம் வினா ஸ்ருதிம் தரந்தி” என்று சொல்லப்பட்டிருக்கிறது. முழுமுதற்கடவுளின் திருவடித் தாமரைகளைச் சரணடையாது. பிறப்பு, இறப்பு, பிணி, மூப்பு போன்றவற்றை மீண்டும் மீண்டும் அளிக்கும் மாயையின் பிடியிலிருந்து ஒருவனால் விடுதலை பெற முடியாது. பிரசேதார்கள், சிவபெருமானின் கருணையினாலேயே முழுமுதற்கடவுளைச் சரணடைந்தனர். சிவபெருமான் முழுமுதற் கடவுளான பகவான் விஷ்ணுவின் பரமபக்தன் ஆவார். “வைஷ்ணவானாம் யதா ஸம்பு:” சிவபெருமானே மிகச் சிறந்த வைணவராவர். அவரது உண்மையான பக்தர்கள் அவரது அறிவுரையினைப் பின்பற்றி பகவான் விஷ்ணுவின் தாமரைத் திருவடிகளைச் சரணடைகின்றனர். உலகத்துச் செல்வங்களின் பின்னால் அலைந்து கொண்டிருக்கும் சிவபெருமானின் பக்தக்ரள் எனப்படுவோர் சிவபிரானால் ஏமாற்றப்படுகின்றனர். உண்மையில் சிவன் அவர்களை ஏமாற்றவில்லை. ஏனெனில் மக்களை ஏமாற்றும் தொழில் சிவனுக்கு ஏற்றதல்ல. ஆனால் அவரது பக்தர்கள் தாம் ஏமாற்றப்படவேண்டுமென்று விரும்புகின்றனர். மிக எளிதில் மகிழ்ச்சியடையும் சிவபெருமான் இப்பக்தர்களுக்கு எல்லாவகையான வரங்களையும் அளித்து விடுகிறார். இவ்வரங்கள் மறைமுகமாக அப்பக்தர்களை அழிக்கவே பயன்படுகின்றனர். சான்றாக இராவணன் சிவபெருமானிடமிருந்து வேண்டிய வரங்களைப் பெற்றுக்கொண்டான். ஆயினும் இறுதியில் அவனும் அவன் குலமும், அரசும் அழிந்தது. ஏனென்றால் அவன் சிவபெருமானின் வரங்களைத் தவறாகப் பயன்படுத்தினான் அவன் தனது அதிகாரத்தினால் வீண்பெருமையும் ஆணவமும் கொண்டிருந்தான். நாமச்சந்திர மூர்த்தியின் மனைவியையே சிறையெடுத்தான். எனவே அவன் அழிக்கப்பட்டான். சிவபெருமானிடமிருந்து வரங்களைப் பெறுவது ஒன்றும் கடினமல்ல. உண்மையில் இவையெல்லாம் வரங்கள் அல்ல. பிரசேதார்களும் சிவபெருமானிடமிருந்து வரம் பெற்றனர். அதன் துணைகொண்டு அவர்கள் பகவான் விஷ்ணுவின் திருவடித்தாமரைகளைச் சரணடைந்தனர். இதுவே உண்மையான வரமாகும். கோபியர்களும் பிருந்தாவனத்தில் சிவபெருமானை வழிபடுகின்றனர். “கோபீஸ்வரனாக” அங்கே சிவபெருமான் இருக்கின்றார். கோபியர்கள் சிவபெருமானிடம் தங்கள் கணவனாக பகவான் கிருஷ்ணரே வரவேண்டுமென்று வரமருள வேண்டுகின்றனர். ஒருவனது குறிக்கோள் வீடுபேறு பெற்று, முழுமுதற்கடவுளை அடைவதற்கானதாக இருக்கும் பொழுது அவன் தேவர்களை வழிபடுவதில் குற்றம் ஒன்றுமில்லை. பொதுவாக மக்கள் பௌதீக நன்மைக்காகவே தேவர்களை வழிபடுகின்றனர். இதனை பகவத்கீதையும் (7.30) குறிப்பிடுகின்றது.


காமைஸ் தைஸ் னதர் ஹ்ருத-ஜ்ஞானா:

ப்ரபத்யந்தே (அ)ன்ய-தேவதா:

தம் தம் நியமம் ஆஸ்தாய

ப்ரக்ருத்யா நியதா: ஸ்வயா


“மண்ணுலக இச்சைகளினால் கவரப்பட்டோர் தேவர்களைச் சரணடைந்து தங்கள் இயற்கைக்கேற்ப ஒழுங்குமுறை விதிகளைப் பின்பற்றி அவர்களை வழிபடுகின்றனர். உலகியல் நன்மையினால் கவரப்பட்டவன் ஹ்ருத-ஜ்ஞான” (தனது புத்தியை இழந்தவன்) என்று அழைக்கப்படுகிறான். இது தொடர்பாக சாத்திரங்களில் சில இடங்களில் சிவபெருமான் முழுமுதற்கடவுளிடமிருந்து வேறானவர் அல்லர் என்று கூறப்படுவதைக் குறித்துக் கொள்ளவேண்டும். இதன் பொருள் சிவபெருமானும் பகவான் விஷ்ணுவும் கருத்து வேறுபாடின்றி நெருக்கமாக இருக்கின்றனர் என்பதாகும். உண்மை என்னவெனில் “ஏகலே ஈஸ்வர க்ருஷ்ண ஆர ஸப ப்ருத்ய” அதாவது “ஒரே எஜமானர் கிருஷ்ணரேயாவார் மற்றவர்கள் எல்லோரும் அவரது பக்தர்கள் மற்றும் தொண்டர்களாவர்” (சை.ச.அதி 5.142) இதுவே உண்மையாகும். இவ்விஷயத்தில் சிவபெருமானுக்கும் பகவான் விஷ்ணுவிற்கும் இடையே எந்தவதிமான கருத்து வேறுபாடும் கிடையாது. சாத்திரங்களில் எந்த இடத்திலும் சிவபெருமான் பகவான் விஷ்ணுவுக்கு இணையானவர் என்று குறிப்பிடப்படவில்லை. இவையெல்லாம் சிவபெருமானும், பகவான் விஷ்ணுவும் ஒன்று எனச் சொல்லும் சிவபெருமானின் பக்தர்களால் கிளப்பிவிடப்பட்டவையாகும். “வைஷ்ணவ-தத்ரத்தில்” இது கடுமையாக மறுக்கப்பட்டுள்ளது. “யஸ் து நாராயணம் தேவம்” என்று பகவான் விஷ்ணுவும், சிவபெருமானும், பிரம்ம தேவனும் எஜமானன் பணியாள் என்ற ரீதியில் நெருங்கிய தொடர்புடையவர்களாவர். “ஸிவ - விரிஞ்சி நுதம்.” சிவபெருமானாலும், பிரம்மதேவனாலும் வணங்கப்பட்டு, மரியாதை செய்யப்படுபவர் பகவான் விஷ்ணு ஆவார். இவர்கள் அனைவரும் சமமானவர்கள் என்று கருதுவது பெருங்குற்றமாகும். இவர்கள் அனைவரும் சமம் என்று சொல்வது பகவான் விஷ்ணு முழுமுதற்கடவுள் மற்றவர்கள் அனைவரும் அவரது தொண்டர்கள் என்ற உணர்வில்தான்.


(ஸ்ரீமத் பாகவதம் 4.30.38)


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...