Skip to main content

" ஜீவோ ஜீவஸ்ய ஜீவனம் " (ஒரு உயிரினம் மற்றொரு உயிரினத்தின் உயிர் ஆகும்)

 

சில சமயம் நம் முன் வினா எழுப்பப்படும், “நீங்கள் எங்களைப் புலால் உண்ணக் கூடாது என்று கூறுகிறீர்கள், ஆனால் நீங்கள் காய்களை உண்கிறீர்கள். இது வன்முறை இல்லை என்று நினைக்கிறீர்களா?” பதில் என்னவென்றால், காய்களை உண்பதும் வன்முறையே, சைவ உணவு உண்பவர்களும் பிற உயிரினங்களுக்கு எதிராக வன்முறை புரிகின்றார்கள். ஏனெனில், காய்களுக்கும் உயிர் உண்டு. பக்தரல்லாதார், பசுக்கள், ஆடுகள் மற்றும் பல பிற விலங்குகளயைும் உண்ணும் பொருட்டு கொல்கின்றனர். சைவ உணவு உண்பவராக இருக்கும் பக்தரும் தாவர உயிர்களை கொல்கிறார். ஆனால் இங்கு ஒவ்வொரு உயிரினமும் மற்ற உயிரினத்தைக் கொல்வதன் மூலம் வாழவேண்டி உள்ளது என்று சிறப்பாகக் குறிப்பிடப்படுகிறது; இதுவே இயற்கையின் நியதி ஆகும். ‘ஜீவோ ஜீவஸ்ய ஜீவனம் ஒரு ஜீவராசி மற்றொரு ஜீவராசிக்கு உணவாகும்.” (பாகவதம் 1.13.47) ஒரு ஜீவன் மற்றொரு ஜீவனுக்கு உணவாகும் வகையில் இந்த ஜட உலகை பகவான் படைத்துள்ளார் ஆனால் ஒரு மனிதன் வன்முறையை எந்த அளவுக்குத் தேவையோ அந்த அளவிற்கு மட்டுமே செயல் புரிய வேண்டும்.

ஒரு மனித உயிர் பரம புருஷ பகவானுக்கு அர்ப்பணிக்கப்படாத எதையும் உண்ணக் கூடாது. யக்ஞா ஸிஷ்டாஸுன: ஸந்த: ஒருவர் பரம புருஷ பகவானுக்கு அர்ப்பணிக்கப்படும் உணவுப் பொருட்களை உண்பதன் மூலம் எல்லாப் பாவமான எதிர்ச் செயல்களிலிருந்தும் அவர் உடனேஸவிடுபடுகிறார். அதனால் ஒரு பக்தர் பிரஸாதம் அல்லது பகவானுக்கு அர்ப்பணிக்கப்படும் உணவுப் பொருள் மட்டுமே உண்கிறார். ஒரு பக்தர் பக்தியுடன் காய்களிலிருந்து தயாரிக்கப்படும் உணவை பகவானுக்கு நைவேத்தியம் அளிக்கும்போது, பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் அதை உண்பதாகக் கூறுகிறார். ஒரு பக்தர் கிருஷ்ணருக்குக் காய்களிலிருந்து தயாரிக்கப்படும் உணவுப் பொருட்களை அர்ப்பணிக்க வேண்டும். பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் விலங்கிலிருந்து தயாரிக்கப்பட்ட உணவுப் பொருளை விரும்பினால், பக்தர் அதையும் பகவானுக்கு அளிக்க முடியும். ஆனால் பகவானோ அதை செய்ய பக்தர்களுக்கு ஆணையிடவில்லை.

நாம் வன்முறை புரிய வேண்டும், அதுவே இயற்கையின் நியதி. ஆயினும், நாம் வன்முறையை வரம்பு மீறிச் செய்யக் கூடாது. ஆனால் பகவானால் ஆணையிடப்படும் அளவுதான் செய்ய வேண்டும். அர்ஜுனர் கொல்லும் கலையில் ஈடுபட்டால் கொல்லுதல், உண்மையில் வன்முறை ஆயினும், அவர் கிருஷ்ணரின் கட்டளையின்பேரில் எதிரியைக் கொன்றார். அதே வழியில், நாம் தேவையான அளவு பகவானின் ஆணையால் வன்முறை புரிந்தால் அது நாதிஹிம்ஸா எனப்படுகிறது. நாம் வன்முறையைத் தவிர்க்க முடியாது. ஏனெனில் நாம் வன்முறை புரியவேண்டிய கட்டுப்படுத்தப்பட்ட வாழ்வில் தள்ளப்படுகிறோம். ஆனால் நாம் தேவையான அளவைவிடவோ அல்லது பரம புருஷ பகவானால் கட்டளை இடப்பட்டதைவிடவோ அதிக அளவில் வன்முறை புரியக் கூடாது.


( ஶ்ரீல பிரபுபாதர் / ஶ்ரீமத் பாகவதம் 3.29.15 / பொருளுரை )

🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க


ஆன்மீக கதைகளை படிக்க 👇

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...