Skip to main content

தீபாவளி கொண்டாடப்படுவதற்கான காரணங்கள்

 



தீபாவளி கொண்டாடப்படுவதற்கான காரணங்கள்


🍁🍁🍁🍁🍁🍁🍁


தீபம் + ஒளி என்ற சொல்லின் கூட்டு சேர்க்கை தான் தீபவொளி. பின்னர் மருவி தீபாவளி ஆனது,  எனவே தீபம் என்றால் " வெளிச்சம் வருவதையோ, அல்லது வெளிச்சம் வெளிப்டபடுவதையோ குறிக்கிறது. 

"தமஸோமா ஜோதிர்கமய" என்று வேத இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது இருளில் இருக்காதே, வெளிச்சத்திற்கு வாருங்கள்', என்று அர்த்தம். இதன் உள் அர்த்தம் என்ன வென்றால்  'ஆன்மீக விழிப்புணர்வு  வரவேண்டும் என்பதே'. கலங்கப்பட்ட மனதை   பகவானின் திருநாமங்களாலும், அவரது அற்புதமான லீலைகளை கேட்பதாலும், அவருக்கு சுயநலம் இல்லாமல் தூய அன்பு தொண்டை புரிவதாலும்.ஆன்மீக விழிப்புணர்வு அடையாளம்.


திருவிழா மற்றும் பண்டிகை கொண்டாடங்களின் நோக்கம் அந்த நாளில் இறைவன் செய்த அற்புதமான லீலைகளை நினைவு கூர்ந்து அவரை வழிபடுவதாகும். இந்த திருவிழா மற்றும் கொண்டாட்டங்களின் உண்மையான அர்த்தங்களை புரிந்து கொள்ளாவிட்டால், அவை வெறும் பெயரளவில் சடங்குகளாக அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வோம். இந்த திருவிழா மற்றும் கொண்டாட்டங்களின் உண்மையான காரண காரியங்களை அறிந்து அதை நினைவில் கொண்டு, மற்றவர்களுக்கும் எடுத்து சொல்வதினால். இந்த திருவிழா கொண்டாட்டங்கள் நமக்கும், நம்மை சார்ந்த அணைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும்.


இந்த பண்டிகைகள் திருவிழாகள் காலம் காலமாக இறைவனின் லீலைகளை நினைவில் கொண்டு கொண்டாடப்பட்டு வருகின்றன. அவைகளை சில இங்கே காண்போம்.


தீபாவளி பின்வரும் காரணங்களுக்காக கொண்டாடப்படுகிறது

🍁🍁🍁🍁🍁🍁🍁


 1) பகவான் ஶ்ரீ ராமர் 14 ஆண்டுகள் வனவாசத்திலிருந்து அயோத்தியா திரும்பிய நாள் இந்நன்நாள் .


 2) பாற்கடலில் இருந்து மஹா லட்சுமிதேவி அவதரித்த நாள் இந்நன்நாள்.

 

3) ஆயுர்வேதத்தை வழங்கிய பகவான் ஶ்ரீ தன்வந்திரி அவதரித்த நாள் இந்நன்நாள்.

  

4) பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் 16,100 இளவரசிகளை நரகாசுரன் என்ற அரக்கனின் பிடியில் இருந்து விடுவித்த நாள் இந்நன்நாள்.


5) அன்னை யசோதா தேவி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரை கயிறால் உரலில் கட்டிபோட்ட  தாமோதர லீலை நடைபெற நாள் இந்நன்நாள்


 6)  5000 ஆண்டுகளுக்கு முன் துரியோதனன் யுத்தத்தில் கொல்லப்பட்டதால், நாட்டு மக்கள்  தங்களது வீடுகளில் தீபங்களை ஏற்றி பகவான் ஶ்ரீ கிருஷ்ணரின் வெற்றி , பாண்டவர்களின் வெற்றி மற்றும் நன்மைக்கு கிடைத்த வெற்றி  என்று கோலாகலமாக கொண்டாடிய நாள் இந்நன்நாள்  


7) குபேரன் ,பிரபஞ்சத்தின் செல்வத்தை நிர்வாகம் செயய பகவான் கிருஷ்ணரால்  பதவி  ஏற்றுக்கொண்ட நாள் இந்நன்நாள் 


9) யம தர்மராஜன், பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரினங்களின் அனைத்து செயல்களின் தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தை, பகவான் கிருஷ்ணரால்  நியமிக்கப்பட்ட  நாள் இந்நன்நாள்.


10) மன்னர் விக்ரமாதித்யன்  பதவியேற்ற நாள். வேத காலண்டர் அன்றிலிருந்து தொடங்குகிறது.


 11) பாற்கடலில் இருந்து சுரபி பசு அவதரித்த நாள் இந்நன்நாள்.


12) இந்திரனின் மழையிலிருந்து விரஜ வாசிகளை பாதுகாக்க பகவான் ஶ்ரீ கிருஷ்ணர்  கோவர்தன் மலையைத் ஏழு நாட்கள் தொடர்ச்சியாக தூக்கிய நாள் இந்நன்நாள்.


13) ரக்ஷா பந்தன் எவ்வாறு சகோதரிகள், சகோதரர்களை அனுக்கிரகம் செய்யும் நாளாக கொண்டாடபடுகிறதோ அதே போல் இந்த தீபாவளி நாளில் பிராத்ரி தூஜா என்று சகோதரர்கள் தங்களது சகோதரிகளுக்கு அனுக்கிரகம் செய்யும் நாளாக கொண்டாடபடுகிறது. யம தர்மராஜன் தனது சகோதரி யமுனையை (யமுனை நதி தேவி) கண்டு அவரை அனுக்கிரகம் செய்து கூறினார்." இந்த நாளில் யாரொருவர் யமுனை நதியில் நீராடி பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் யமுனையில் நிகழ்த்திய லீலைகளை நினைவில் கொள்கிறார்களோ அவர்களுக்கு அவர்கள் செய்த அணைத்து  பாவங்களுக்கும் விமோசனம் அளிப்பதாக சகோதரி யமுனைக்கு வாக்குறுதி அளித்தார். 


மேற்கு வங்காளத்தில் இந்த நாளை பாய் புட்டா (சகோதரி, சகோதரனுக்கு திலகம் இடுதல்) என்று கொண்டாடபடுகிறது

சகோதரி , சகோதரனை தனது இல்லத்திற்கு வரவேற்று  ஆரத்தி எடுத்து, நெற்றியில் திலகம் இட்டு புத்தாடை வழங்கி,  விருந்து படைத்துபடைப்பார்கள். சகோதரனும் சகோதரிக்கு பரிசு பொருட்கள் தந்து  தான் அவளது சுக துக்கங்களுக்கு   உறுதுணையாக என்றும் இருப்பேன் என்று வாக்குறுதி தந்து தனது அன்பை வெளிபடுத்துவார். சகோதரர், அன்று ஒருநாள் அங்கே தங்கி மறுநாள் இல்லம் திரும்புவார்.


 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

உத்வேக கதைகள்  https://t.me/udvegakathaigal



Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...