Skip to main content

தக்ஷன் இட்ட சாபம்


 

ஸ்ரீமத் பாகவதம் 

 நான்காம் ஸ்கந்தம், அத்தியாயம்  2 - சுருக்கம்

 

விதுரர் மைத்ரேயரிடம் வினவினார், மகளிடம் மிகவும் அன்பு கொண்ட தக்ஷன் அவளை ஏன் அவமதித்தார்? மேன்மையானவர்களில் சிறந்தவரான சிவபெருமானின் மீது தக்ஷன் ஏன் பகைமை கொண்டார்? மருமகனும் மாமனாரும் ஏன் தங்களுக்கிடையில் சண்டையிட்டுக் கொண்டனர் என்பதையும், சதி தமது உயிரை ஏன் மாய்த்துக் கொண்டாள் என்பதையும் தயைகூர்ந்து விளக்குவீராக.”

விதுரரால் வினவப்பட்ட மைத்ரேயர் அதுகுறித்து தொடர்ந்து பேசலானார். முன்னொரு காலத்தில், பிரஜாபதிகள் ஒருங்கிணைந்து மிகப்பெரிய வேள்வி ஒன்றைச் செய்தனர். இதில் தேவர்கள், மகரிஷிகள், முனிவர்கள் முதலியோர் கலந்து கொண்டனர். பிரஜாபதிகளின் தலைவரான தக்ஷன் வேள்விச் சாலைக்குள் பிரவேசித்தபோது, அவரது தேஜஸினால் அவையே பிரகாசமானது. அச்சமயம் சிவபெருமான் மற்றும் பிரம்மதேவரைத் தவிர மற்ற அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்தனர். அவையில் உள்ளவர்களது மரியாதையை ஏற்று, தனது தந்தையாகிய பிரம்மதேவரை பணிந்து வணங்கி அவரின் அனுமதி பெற்று இருக்கையில் அமர்ந்தார் தக்ஷன். அச்சமயம் தனக்கு எவ்வித மரியாதையும் செலுத்தாது அமைதியாக அமர்ந்திருந்த சிவபெருமானைக் கண்டு தக்ஷனுக்கு கோபம் அதிகரிக்க, அவர் சிவனுக்கு எதிராக கடுமையான வார்த்தைகளைக் கூறலானார்.

மகரிஷிகளே, தேவர்களே, சான்றோர்களின் ஒழுக்கம் குறித்து நான் கூறும் கருத்தைச் சற்றே கேளுங்கள். இதை நான் அறியாமையினாலோ பொறாமையினாலோ கூறுவதாக எண்ண வேண்டாம். சிவபெருமான், லோக பாலகர்களின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கிறார். எனது புதல்வியை மணந்த மருமகனாக இருந்தும் பெரியவர்களை மதிக்கும் பழக்கத்தைக் கடைபிடிக்கவில்லை. என்னை கண்டதும் இனிய மொழிகளால் வரவேற்கவோ எழுந்து நிற்கவோ இல்லை.

இவர் நல்லவர் போல அந்தணர்களின் முன்னிலையில் அக்னி சாட்சியாக எனது மகளை விவாஹம் செய்து கொண்டார். அதனால் எனக்கு சிஷ்யனானார். எனது மகள் மான் விழியாள்; இவரது கண்களோ குரங்கின் கண்களை ஒத்திருக்கின்றன. என்னைக் கண்டவுடன் எழுந்து நமஸ்கரிக்க வேண்டிய இவர், வாக்கினால்கூட என்னை உபசரிக்கவில்லையே!

விருப்பமின்றி ஒருவன் நான்காம் வர்ணத்தவனுக்கு வேதத்தை சொல்லிக் கொடுத்ததுபோல, நானும் விருப்பமின்றியே இவருக்கு என் மகளை மணமுடித்தேன். இவர் அசுத்தமாக இருப்பவர், அஹங்காரமுள்ளவர், உலக மரியாதைகளை மதிக்காதவர். பிரேதங்கள் வசிக்கும் மயானத்தில் பூதகணங்களுடன் ஆடித் திரிகிறார். பித்தனைப் போல தலைவிரி கோலமாய் ஆடையின்றி திரிகிறார். சிதையின் சாம்பலை உடல் முழுவதும் பூசிக்கொள்கிறார். மனிதர்களுடைய எலும்புகளையும் மண்டை ஓடுகளையும் ஆபரணமாக அணிகிறார். பெயரளவில் மட்டுமே இவர் சிவன் (மங்களமானவர்), உண்மையில் அசிவன் (மங்களமற்றவர்). தமோ குணம் நிறைந்த பூத, பிரேதங்களின் தலைவர். இப்பேர்பட்ட இவருக்கு பிரம்மதேவரின் பரிந்துரையால் என் மகளை திருமணம் செய்து கொடுத்தேனே! அந்தோ பரிதாபம்!”

இவ்வாறு தக்ஷன் சிவபெருமானை பலவாறு இழிந்துரைத்தபோதும், அவர் சாந்த ஸ்வரூபியாக மறுமொழி ஏதும் கூறாது சஞ்சலமற்று இருந்தார். இதனால் தக்ஷனின் சினம் எல்லை மீறியது, வேள்வியின் அவிர்பாகத்தைப் பெற தேவர்கள் தகுதியானவர்கள் எனும்போதிலும் தேவகணங்களில் தாழ்ந்தவராகிய இவருக்கு இனிமேல் அவிர்பாகம் கிடையாது, என்று கூறி ஜலத்தைத் தொட்டு சாபமிட்டார்.

தக்ஷன் சிவபெருமானை சபித்ததைக் கண்டு நந்திதேவர் ஆத்திரமுற்றார். கோபத்தில் அவரது கண்கள் சிவந்தன. தக்ஷனையும் அவர் சாபமிட்டதைப் பார்த்துக் கொண்டிருந்த அந்தணர்களையும் கொடிய வார்த்தைகளினால் பின்வருமாறு சபித்தார்:

தக்ஷன் இவ்வுடலே எல்லாம் என்று ஏற்றுக் கொண்டவர். விஷ்ணு பாதத்தினை மறந்து பாலுறவு வாழ்வில் பற்று மிகுந்து அலைவதால், அதற்கு தண்டனையாக ஓர் ஆட்டின் தலையைப் பெறட்டும். சிவபெருமானை தக்ஷன் சபிக்கும்போது அதனை அனுமதித்த பிராமணர்கள் ஜனன மரணச் சுழற்சியில் இருக்கட்டும். வேதங்களின் மலர் சொற்களில் மயங்கி சிவபெருமானின் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட மந்த மதியாளர்கள் எப்போதும் பலன் தரும் செயல்களிலேயே பற்றுடையோராக இருப்பாராக. அவர்கள் செய்யும் தவம், விரதம் போன்றவை உடலைப் பேணுவதற்காக ஆகட்டும். வீடுகள்தோறும் சென்று இரந்து பிழைக்கட்டும்.

அந்தணர்கள் சபிக்கப்பட்டதைக் கண்ட பிருகு முனிவர் எதிர் சாபமிட்டார், சிவபெருமானை திருப்தி செய்வதற்கென்று விரதமிருப்பவர்கள் நாத்திகர்களாக மாறி சாஸ்திர விதிகளை மீறி நடப்பார்களாக. ஆசாரமற்று அறிவிலிகளாக ஜடை தரித்து, சாம்பல் பூசி திரிவார்களாக. சான்றோர்கள் ஏற்கும் இந்த வேத நெறிகளை அற்பமாக பேசியதால், சிவனையே தெய்வமாகக் கொள்வீர்.

இவ்வாறு ஒருவருக்கொருவர் எதிர் சாபமளித்துக் கொள்வதைக் கண்டு வருந்திய சிவபெருமான் அங்கிருந்து அமைதியாக வெளியேறினார். பிரஜாபதிகள் தாங்கள் ஆரம்பித்த வேள்வியை முடித்து பிரயாகையில் நீராடி தங்கள் இருப்பிடம் திரும்பினர்.


நாளை . . .

சதி தன் உடலைக் கைவிடுதல் . .

 

தொடரும் . . . .


 🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆



ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆

கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க



ஆன்மீக கதைகளை படிக்க 👇

உத்வேக கதைகள்  https://t.me/udvegakathaigal

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...