Skip to main content

கிணற்று தவளையும் கடல் தவளையும்

 


ஒரு கிணற்றில் தவளை ஒன்று நீண்ட காலமாக வாழ்ந்து வந்தது. அங்கேயே பிறந்து அங்கேயே வளர்ந்த அது வெளி உலகம் பார்த்ததும் இல்லை. அந்தத் தவளை நாள்தோறும் நீரிலிருந்து புழுபூச்சிகளையும் கிருமிகளையும் மிகவும் சுறுசுறுப்பாக அகற்றிச் சுத்தப்படுத்தி அதைஉண்டு தனது குடும்பத்துடனும் உறவினர்களுடனும் சந்தோஷமாக வாழ்ந்து வந்தது

 

ஒருநாள் கடலில் வாழ்ந்து வந்த தவளை ஒன்று அங்கு வந்து அந்தக் கிணற்றில் விழுந்தது.

 

கினற்று தவளை கடல் தவளையிடம் 'நீ எங்கிருந்து வருகிறாய்?' என்றது

 

அதற்கு 'கடலிலிருந்து' என்று அது பதிலுரைத்தது.

 

'கடலா? அது எவ்வளவு பெரியது? எனது கிணற்றளவு பெரிதாயிருக்குமா?' என்று கூறி, ஒரு பக்கத் திலிருந்து எதிர்ப்பக்கத்திற்குத்தாவிக் குதித்தது கிணற்றுத் தவளை.

 

'நண்பா, இந்தச் சின்னக் கிணற்றோடு எப்படிக் கடலை ஒப்பிட முடியும்?' என்று கேட்டது கடல் தவளை.

 

கிணற்றுத் தவளை மறுபடியும் ஒரு குதிகுதித்து, 'உனது கடல் இவ்வளவு பெரிதாய் இருக்குமா?' என்று கேட்டது.

 

'சேச்சே! என்ன முட்டாள்தனம்! கடலை உன் கிணற்றோடு ஒப்பிடுவதா?' என்றது கடல் தவளை

 

'நீ என்ன சொன்னாலும் சரி, என் கிணற்றைவிட எதுவும் பெரிதாக இருக்க முடியாது. கண்டிப்பாக, இதைவிடப் பெரியதாக எதுவும் இருக்க முடியாது. இவன் பொய்யன், இவனை வெளியே விரட்டுங்கள்!' என்று கத்தியது கிணற்றுத் தவளை.

 

காலங்காலமாக இருந்துவருகின்ற கஷ்டம் இது தான்.

 

நமக்கு கண்ணுக்கு புலப்படாத புலன்களுக்கு அப்பாற்பட்ட தெய்வீக விஷயங்களை ஏற்க மறுக்கும் பௌதீக ஆராய்ச்சியாளர்களும் , தீவிர பௌதீக எண்ணங்களுடன் வாழும் மனிதர்களும் கடவுளை ஏற்க மறுகின்றனர்

 

அந்தச் தவளையின் சுறுசுறுப்பு, நம் தற்காலக் சில பௌதீக விஞ்ஞானிகளிடமும் , கிருமி ஆராய்ச்சியாளர்களுடனும் ஒப்பிடலாம். தான் புரிந்து கொள்ள முடியாத, கண்டுபிடிக்க முடியாத விஷயங்களை ஏற்றுகொள்ள மறுப்பதுடன் அதையே எல்லோரிடமும் விஷ பிரச்சாரம் செய்கிறார்கள்.அது தான் சரி என்று சாதிக்கிறார்கள்.

 

தன்னிடம் எந்தவித விடைகள் இல்லாமல் இருந்தும் . எல்லா சந்தேகளுக்கும் விடை வைத்திருக்கும் ஆன்மீக விஞ்ஞானிகளை நம்புவதும் இல்லை. அவர்கள் சாஸ்திரரீதியான விளக்கங்களை ஏற்ப்பதும் இல்லை .

 

இந்த கதை மூலமாக ஶ்ரீல பிரபுபாதர் தனது புத்தகங்களில் நிறைய எழுதியுள்ளார். அதில் ஶ்ரீமத் பாகவதம் 3.6.38 – பொருளுரையை வாசகர்களுக்காக மேலும் விளக்கமாக புரிந்து கொள்ள இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.🙏


தத்துவத்தினாலும், மனக் கற்பனையாலும், பரமாத்மாவை அறிய விரும்பும் தவளைத் தத்துவவாதிகள் சிலர் உள்ளனர். பரமபுருஷரைப் பற்றி ஒரளவிற்கு அறிந்துள்ள பக்தர்கள், பகவானின் மகிமைகள் கணக்கிட முடியாதவை, அல்லது நினைத்தற்கரியவை என்று ஒப்புக் கொள்ளும் பொழுது, தவளைத் தத்துவவாதிகள் அவர்களைக் குற்றம் கூறுகின்றனர். பசிபிக் சமுத்திரத்தின் அளவைக் கணக்கிட முயன்ற கிணற்றுத் தவளையைப் போல், இந்த தத்துவவாதிகள் பயனற்ற மனக் கற்பகையில் அதிக சிரமத்தை ஏற்க விரும்புகின்றனர். ஆதி பவியான பிரம்மாவைப் போன்ற பக்தர்களிடமிருந்து, உபதேசம் பெற்றுக் கொள்ள இவர்கள் மறுக்கின்றனர். பிரம்மதேவர் ஒராயிரம் தேவ ஆண்டுகளுக்கு கடும் தவத்தை மேற்கொண்டார். இருப்பினும் பகவானின் மகிமைகள் நினைத்தற்கரியவை என்று அவர் கூறுகிறார். எனவே தவளைத் தத்துவவாதிகளால் அவர்களுடைய மனக்கற்பனைகளைக் கொண்டு என்ன இலாபத்தை அடைய முடியும்?


மனக் கற்பனையாளர்கள் காற்று வேகத்தில் அல்லது மனோ வேகத்தில் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு கற்பனை உலகில் சஞ்சரித்தாலும், பகவானின் மகிமைகள் நினைத்தற்கரியவை என்பதைத் தான் காண்பார்கள் என்று பிரம்ம-சம்ஹிதை கூறுகிறது. ஆனால் பக்தர்களோ, பரமனைப் பற்றிய அறிவைத் தேடியவைவதில் நேரத்தை வீணாக்காமல், தகுதியுள்ள பக்தர்களிடமிருநூது அடக்கத்துடன் பகவானின் மகிமைகளைப் பற்றி கேட்டறிகின்றனர். இவ்வாறாக கேட்டல், பாடுதல் எனும் இம்முறையினால் அவர்கள் உன்னத ஆனந்தத்தை அனுபவிக்கின்றனர். இத்தகைய பக்தர்களின் (மகாத்மாக்களின்) பக்தித் தொண்டை ஏற்றுக் கொள்ளும் பகவான் பின்வருமாறு கூறுகிறார்:


மஹாத்மானாஸ் து மாம் பார்த தைவீம் ப்ரக்ருதிம் ஆஸ்ரிதா:

பஜந்தி அனன்ய-மனஸோ ஞாத்வா பூதாதிம் அவ்யயம்

ஸததம் கீர்த்தயந்தோ மாம் யதந்தஸ் த்ருட-வ்ரதா:

நமஸ்யந்தஸ் மாம் பக்த்யா நித்ய-யுக்தா உபாஸதே

(பகவத் கீதை 9.13-14)


லக்ஷ்மி தேவி, சீதா தேவி, ஸ்ரீமதி ராதாராணி அல்லது ஸ்ரீமதி ருக்மிணி தேவி என்று அழைக்கப்படும் பகவானின் அந்தரங்க சக்தியை (பரா ப்ரக்ருதி) தூய பகவத் பக்தர்கள் தஞ்சமடைகின்றனர். இச்செயலினால் அவர்கள் உண்மையான மகாத்மாக்கள் ஆகின்றனர். மகாத்மாக்கள் மனக்கற்பனைகளில் ஈடுபடுவதை விரும்பாமல், பகவானின் மாறாத பக்தித்தொண்டை உண்மையாக ஏற்றுக் கொள்கின்றனர். பகவானின் செயல்களைப் பற்றி கேட்டல், பாடுதல் எனும் முக்கிய முறையினால் பக்தித் தொண்டு தோற்றுவிக்கப்படுகிறது. பகவானை ஒரளவிற்காவது அறிய முடியுமானால், அது பக்தித் தொண்டின் மூலமாகத்தான் சாத்தியமாகும். வேறு வழிகளால் அல்ல. எனவே இவ்வுன்னத முறையைப் பயில்வதன் மூலமாக மகாத்மாக்கள் பகவானைப் பற்றிய போதுமான அறிவைப் பெறுகின்றனர். ஒருவன் மனக் கற்பனையில் ஈடுபட்டு, மனித வாழ்வின் பொன்னான நேரத்தை விரயம் செய்யக்கூடும். ஆனால் அது பகவானைப் பற்றிய விஞ்ஞானத்தை அறிய ஒருவருக்கும் உதவாது. ஆனால் மகாத்மாக்களோ, மனக்கற்பனையால் பகவானை அறிவதில் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. ஏனெனில் பகவான் பக்தர்களுடனோ அல்லது அசுரர்களுடனோ புரியும் அவரது உன்னதமான செயல்களைப் பற்றிக் கேட்பதில் அவர்கள் ஆனந்தம் அடைகின்றனர். இவ்விரண்டிலுமே ஆனந்தமடையும் பக்தர்கள் இப்பிறவியிலும், அடுத்த பிறவியிலும் மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்.

 

ஶ்ரீமத் பாகவதம் 3.6.38 - பொருளுரை / வழங்கியவர் ஶ்ரீல பிரபுபாதர்


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம, 

ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண!


ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், சாஸ்திர தகவல்கள் ஆன்மீக கதைகளை மற்றும் போஸ்டர்களுக்கு  கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


Telegram செயலி


🔆🔆🔆🔆🔆🔆🔆


Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும். 👇


🔆🔆🔆🔆🔆🔆🔆


கட்டுரைகள், சாஸ்திர தகவல்களை படிக்க


https://t.me/suddhabhaktitamil


ஆன்மீக கதைகளை படிக்க 👇


உத்வேக கதைகள் :-  https://t.me/udvegakathaigal

 

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...