Skip to main content

மோதாத்ருமத்வீபம்




 மோதாத்ருமத்வீபம்


🔆🔆🔆🔆🔆🔆

இந்த தீவு தாஸ்யம், அல்லது சேவகம் எனும் பக்தி சேவையை பிரதிபலிக்கிறது.

ஸ்ரீ விருந்தாவன தாஸ தாகூரருடைய புனித ஸ்தலம், வாசுதேவ தத்தரின் புனித ஸ்தலம், ஸ்ரீ  சாரங்க முராரியின் புனித ஸ்தலம் மற்றும் அர்க திலா ஆகிய இடங்கள் இந்த தீவில் நீங்கள் சென்று காணக்கூடிய இடங்களாகும்.

ஸ்ரீல பக்தி வினோத தாகூரர் தன்னுடைய நவத்வீப-பாவ -தரங்கத்தில் பின்வருமாறு எழுதியுள்ளார்:

"பீஷ்ம-திலாவில் பீஷ்மரிடமிருந்து ஆசி பெற்ற பிறகு அழுதுகொண்டே றநான் மோதாத்ரும த்வீபத்திற்கு செல்வேன். வ்ரஜ பூமியிலிருக்கும் பாந்திராவனத்திற்கும்  மோதாத்ரும த்வீபத்திற்கும் எந்த வேறுபாடும் இல்லை . அங்கிருக்கும் அனைத்து மிருகங்களும் பறவைகளும் உன்னதமானவையாகும். ஸ்ரீ கௌர ஹரி  மற்றும் சீதா இராமருடைய புனித நாமங்களை, இங்கிருக்கும் கிளிகள் மற்றும் பறவைகள் தொடர்ந்து பாடிக் கொண்டே இருக்கின்றன.



கருணையோடு நிழல் கொடுத்து அந்த  பகுதியையே அழகுபடுத்தி சூரியனை மறைத்திருக்கும்  பல ஆல மரங்கள் இந்த பாந்திராவனத்தில் இருக்கின்றன. மேலும் பகவான்  ஸ்ரீ பலராமர் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணருடைய லீலைகள் என் கண்களுக்கு எப்போது புலப்படும்? இவ்வாறு உலாவிக் கொண்டே வானத்தின் அழகை ரசித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று ஸ்ரீ இராமச்சந்திரருடைய ஆசிரமத்தை கண்டேன். காவி உடை தரித்திருந்த பகவான் இராமச்சந்திரரின் அருகில் ஸ்ரீ லக்ஷ்மணர் மற்றும் சீதாதேவி இருப்பதை நான் காண்பேன்.

பகவானின் இந்த மிகவும்  வசீகரிக்கும் ரூபத்தைக் கண்டு நான் நந்தவனத்தில் மயக்கமடைந்து கீழே விழுவேன். அப்போது என் உடலில் பிரேமை எனும் நிலையின் அறிகுறிகள் தென்படும். என்னால் அதற்கு மேல் பேச முடியாமல் பரவசத்தில் மூழ்கியிருப்பேன். என் கண்கள் முழுமையாக திருப்தி அடையும் வரை இந்த அழகான வடிவத்தை நான் அருந்திக் கொண்டிருப்பேன். பகவான் இராமச்சந்திரரின் இளைய சகோதரனான ஸ்ரீ லட்சுமணரின் மீது கருணை கொண்டு என் அருகே வந்து தன்னுடைய தாமரை பாதத்தை என் தலைமீது வைத்திடுவார். சில பழங்களை எனக்கு கொடுத்து, "'அன்பு மகனே! இந்தப் பழங்களை உண்பாயாக. நாம் தற்போது வனத்தில் வாழ்வதால் நம்மைத் தேடி வரும் விருந்தாளிகளை உபசரிக்கும் உதவும் ஒரே செல்வம் இந்த பழங்களேயாகும்.' என்று கூறுவார். அந்த லீலைகள் இவ்வாறு நிறைவடைந்து அதன்பின் பகவான் அங்கிருந்து மறைந்திடுவார். பிரிவினால் அழுதுகொண்டே பழங்களை நான் உண்பேன். நவ-தூர்வா-தலா எனும் வடிவத்தை (பசும்புல்லின் பச்சை நிறம்) நான் எப்போதாவது காண்பேனா?

ஆஹா, ஆன்மீக ரத்தினங்கள் இருக்கும் நிலம் பாந்திராவனமாகும். இந்த வனத்தை விடுத்துச் செல்வதால் பிரிவுணர்சியில் நான் தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கிறேன். பசுக்களை மேய்ப்பதற்கு முன்பு இந்த இடத்தில் ஸ்ரீ பலராமரும் ஸ்ரீ கிருஷ்ணரும் பல லீலைகளை புரிந்துள்ளனர். கௌர சந்திரர் அதே வனத்தில் தன் சஹாக்களுடன் சங்கீர்த்தனம் செய்யும் போது போதை அருந்தியதைப் போல பக்தி பரவசத்தில் இருந்தார்."

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁
ஹரே கிருஷ்ண🙏

🍁🍁🍁🍁🍁🍁🍁

மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.

🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

Telegram

🍁🍁🍁🍁🍁

ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇

https://t.me/suddhabhaktitamil

ஆன்மீக கதைகளை படிக்க 👇

https://t.me/udvegakathaigal

Whatsapp :-

🍁🍁🍁🍁🍁

https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR

உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...