Skip to main content

ஸ்ரீ மாயாபுரைக் கண்டுபிடித்தல்



ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அவதரித்த மாயாபுர் அல்லது நவத்வீபம் எனப்படும் ஊரானது கிபி 1800ம் ஆண்டுவாக்கில் கிட்டத்தட்ட மறைந்து போய்விட்டது. மேலும், பகவான் சைதன்யரின் தத்துவங்களை முறையாக அறிந்தவர்கள் வெகு சிலரே இருந்தனர். அம்மாதிரியான நபர்களில் ஒருவர்தான் பிரபுபாதரின் ஆன்மீக குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரின் தந்தையான ஸ்ரீல பக்திவினோத தாகூர் ஆவார். ஸ்ரீல பக்திவினோத தாகூர் முறையான சீட பரம்பரையில் பகவான் சைதன்யரின் உபதேசங்களை ஸ்ரீல ஜகந்நாத தாஸ பாபாஜி மஹாராஜரிடமிருந்து பெற்றிருந்தார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை உண்மையாகப் பின்பற்றுபவர் என்ற வகையில், ஸ்ரீல பக்திவினோத தாகூர் பகவான் ஸ்ரீ சைதன்யர் அவதரித்த இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.


நவத்வீபம் என்ற பெயரில் அப்போது அறியப்பட்ட ஊர் சுமார் நூறு ஆண்டுகள் மட்டுமே பழமையானது என்பதை அறிந்து, ஸ்ரீல பக்திவினோத தாகூர் ஆச்சரியம் அடைந்தார். ஏனெனில், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அவதரித்த நவத்வீபம் நிச்சயம் மிகவும் பழமையானதாக இருந்திருக்க வேண்டும். எனவே, மஹாபிரபு அவதரித்த அன்றைய நவத்வீபமும் மக்கள் கூறும் நவத்வீபமும் ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை என்பதை ஸ்ரீல பக்திவினோத தாகூர் உறுதிசெய்து கொண்டார். இது சம்பந்தமாக அங்கு பல கருத்துகள் நிலவின; சிலர் பதினைந்தாவது நூற்றாண்டிற்குப் பின்னர் கங்கை தனது பாதையை மாற்றிக் கொண்டது என்றும், வேறு சிலர் பழைய நவத்வீபம் கங்கைக்கு அடியில் மூழ்கியிருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறினர்.

ஆயினும், பக்திவினோத தாகூர் தம்முடைய தேடலில் தொய்வின்றியே இருந்தார். அவர் விரைவிலேயே அன்றைய நவத்வீப நகருக்கு வடகிழக்கில் அமைந்திருந்த ஒரு சிறு கிராமத்தைப் பற்றிக் கேள்விப்பட்டார். ஆச்சரியப்படத்தக்க அந்த பண்டைய கிராமம் அப்போது முஸ்லீம்களால் ஆளப்பட்டு வந்தது. இருப்பினும், அந்த கிராமம் முழுவதும் கிருஷ்ணருக்கு பிரியமான துளசிச் செடிகள் நிறைந்த மணல் திட்டுகளால் சூழப்பட்டிருந்தது. அந்த இடம்தான் உண்மையான மாயாபுர் என்று பக்திவினோத தாகூர் உணர்ந்தார். அதே சமயத்தில், எல்லா சான்றுகளையும் ஒன்றுதிரட்டி அதனை உறுதி செய்ய விரும்பினார். அவருடைய தேடுதலில் இது சம்பந்தமான இரண்டு வரைபடங்கள் அவருக்குக் கிடைத்தன. அவர் உறுதி செய்த அந்த இடமே உண்மையான மாயாபுர் என்று அவை கோடிட்டுக் காட்டின. பக்திவினோத தாகூரின் ஆராய்ச்சிக்குச் சற்று முன்பாக, கங்கையில் படகு ஓட்டிக் கொண்டிருந்த சில ஆங்கிலேயர்களால் அந்த வரைபடங்கள் தயாரிக்கப்பட்டிருந்தன.

இது சம்பந்தமாக உள்ளூரில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சில இலக்கியங்களில் இருந்தும் பக்திவினோத தாகூருக்கு மேலும் சில தகவல்கள் கிடைத்தன. உதாரணமாக, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு முதன் முதலில் ஹரி நாம ஸங்கீர்த்தனத்தைத் துவக்கிய ஸ்ரீவாஸ பண்டிதரின் வீடு, பகவான் சைதன்யர் வசித்துவந்த இல்லத்திற்கு வடக்கே நூறு தனுஸ் (இருநூறு கெஜம்) தூரத்தில் இருந்ததாக, நரஹரி சக்ரவர்த்தி அவர்களின் பக்தி-ரத்னாகர என்னும் நூலிலிருந்து படித்தறிந்தார். சைதன்ய மஹாபிரபுவின் அவதார ஸ்தலத்தைக் கண்டுபிடிப்பது இதன் மூலமாக ஓரளவு சுலபமாகியது.

இதோடு மஹாபிரபு அவதரித்த நவத்வீபத்தின் முஸ்லீம் ஆளுநர் தன் மாளிகையில் அமர்ந்திருந்தபோது, ஸ்ரீவாஸரின் இல்லத்திலிருந்து எழுந்த ஹரி நாம ஸங்கீர்த்தன ஓசையினால் பாதிக்கப்பட்டு, தன் ஆட்களை அனுப்பி இந்துக்களின் மிருதங்கங்களையும் மற்ற இசைக்கருவிகளையும் உடைத்தெறியும்படி கட்டளையிட்டான் என்பதை சைதன்ய பாகவதத்திலிருந்து அறிய முடிந்தது. இந்த செய்தியும், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் அவதார ஸ்தலத்தைக் கண்டுபிடிப்பதில் பக்திவினோத தாகூருக்கு உதவியது எனலாம். இம்மாதிரியான அடையாளங்கள் ஒத்துப்போயிருந்தும்கூட, பக்திவினோத தாகூர் தம்முடைய பூகோள மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சிகளின் மூலமான தடயங்களையும் இத்துடன் சேர்த்துக் கொண்டார்.

இவையெல்லாம் இருந்தும்கூட, அந்த இடத்தினை ஆன்மீக ரீதியில் உறுதிப்படுத்தும் பொருட்டு, பக்திவினோத தாகூர் தம் ஆன்மீக குருவான ஜகந்நாத தாஸ பாபாஜி மஹாராஜரை அந்த இடத்திற்கு அழைத்து வந்தார். வயோதிகத்தின் காரணத்தினால் நடக்க இயலாத நிலையிலிருந்த அவர் ஒரு கூடையில் அமர்த்தப்பட்டு தலையில் சுமக்கப்பட்டு அங்கு அழைத்துவரப்பட்டார். பாபாஜி மஹாராஜரோ அந்த இடத்தை அடைந்தபோது, உடனடியாகக் கூடையிலிருந்து கீழே குதித்து கிருஷ்ண பிரேமையின் பரவசத்தில் நடனமாடினார். வெளிப்படையான ஆதாரங்கள் பலவும் வலுவாக இருந்தபோதிலும், தெய்வீக பிரேமையின் மூலமாகவே ஸ்ரீல பக்திவினோத தாகூர் அவ்விடத்தை பகவான் சைதன்யரின் அவதார ஸ்தலம் என்று உறுதிப்படுத்தினார். இவ்வாறாக, பகவான் சைதன்யரின் அவதார ஸ்தலம் ஆராய்ச்சிகளின் மூலமாகவும் ஆன்மீக முறையினாலும் ஸ்ரீல பக்திவினோத தாகூரால் உறுதி செய்யப்பட்டது.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


ஹரே கிருஷ்ண🙏


🍁🍁🍁🍁🍁🍁🍁


மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை படிக்க whatsapp அல்லது Telegram செயலியில் பதிவிரக்கம் செய்து கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.


🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁


Telegram

🍁🍁🍁🍁🍁

ஆன்மீக ஸ்லோகங்கள், கட்டுரைகள், தகவல்கள் மற்றும் போஸ்டர்களுக்கு 👇


https://t.me/suddhabhaktitamil


ஆன்மீக கதைகளை படிக்க 👇


https://t.me/udvegakathaigal


Whatsapp :- 

🍁🍁🍁🍁🍁

https://chat.whatsapp.com/IElaVAiyfJsFQXEVZfbonR


உங்களுக்கு தெரிந்த நன்பர்களுக்கு இதை பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்🙏

Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...