Skip to main content

உறங்கிக் கொண்டிருக்கும் கிருஷ்ண பிரேமையை எழுப்புவதற்குன்டான சிறந்த வழி

 


ஜீவன்கள் பகவானின் நுண்ணிய அணுவைப் போன்ற அம்சங்களாக இருப்பதால், பக்தித் தொண்டானது அவர்களில் ஏற்கனவே உள்ளது, ஆனால் செயலற்ற நிலையில் உள்ளது. ஸ்ரவணம், கீர்த்தனம் (செவியுறுதல், உரைத்தல்) முதலியவற்றுடன் பக்தித் தொண்டு தொடங்குகின்றது. ஒரு மனிதன் உறங்கிக் கொண்டிருக்கையில், அவனை சப்தத்தினால் எழுப்ப முடியும்; எனவே, தூய வைஷ்ணவரால் உச்சரிக்கப்பட்ட ஹரே கிருஷ்ண மந்திரத்தினைக் கேட்பதற்கான வாய்ப்பு ஒவ்வொரு கட்டுண்ட ஆத்மாவிற்கும் வழங்கப்பட வேண்டும். அவ்வாறு ஹரே கிருஷ்ண மந்திரத்தைக் கேட்பவன் ஆன்மீக உணர்வு அல்லது கிருஷ்ண உணர்விற்கு எழுப்பப்படுகிறான். இவ்விதமாக ஒருவனின் மனம் படிப்படியாகத் தூய்மையடைகிறது என்று ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு கூறியுள்ளார் (சேதோ-த ர்பண-மார்ஜனம்). மனம் தூய்மையடையும்போது புலன்களும் தூய்மையடைகின்றன. புலன்களைப் புலனுகர்ச்சியில் உபயோகிப்பதற்கு பதிலாக, கிருஷ்ண உணர்வை எழுப்பிய பக்தன் தனது புலன்களை பகவானின் தெய்வீக அன்புத் தொண்டில் ஈடுபடுத்துகிறான். உறங்கிக் கொண்டிருக்கும் கிருஷ்ண பிரேமையை எழுப்புவதற்கு இதுவே வழிமுறையாகும்.



ஶ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் . மத்திய லீலை 22.105 / பொருளுரை


முக்கியக் கருத்துக்கள்:

  • உயிரினங்களின் இயல்பு: ஒவ்வொரு ஜீவனும் பகவானின் நுண்ணிய அணுவைப் போன்ற அம்சமாகும். எனவே, பகவானுக்குச் செய்யும் பக்தித் தொண்டு என்பது ஒரு ஜீவனிடம் ஏற்கனவே இயல்பாகவே உள்ளது; ஆனால் தற்போது அது செயலற்ற (உறங்கிய) நிலையில் உள்ளது.

  • பக்தியின் தொடக்கம்: பக்தித் தொண்டு என்பது ஸ்ரவணம் (கேட்டல்) மற்றும் கீர்த்தனம் (பகவானின் புகழைப் பாடுதல்/பேசுதல்) ஆகியவற்றின் மூலம் தொடங்குகிறது.

  • சப்தத்தின் மூலம் விழிப்புணர்வு: உறங்கும் ஒரு மனிதனை சப்தத்தின் மூலம் எழுப்புவது போல, மாயையில் உறங்கிக் கொண்டிருக்கும் ஆத்மாக்களை ஹரே கிருஷ்ண மந்திரத்தின் புனித ஒலியின் மூலம் எழுப்ப முடியும்.

  • தூய வைஷ்ணவரின் பங்கு: தூய வைஷ்ணவர் ஒருவரால் உச்சரிக்கப்படும் ஹரே கிருஷ்ண மந்திரத்தைக் கேட்கும் வாய்ப்பு ஒவ்வொரு கட்டுண்ட ஆத்மாவிற்கும் வழங்கப்பட வேண்டும். இதுவே அவர்களை ஆன்மீக விழிப்புணர்விற்கு இட்டுச் செல்லும்.

  • மனத் தூய்மை (சேதோ-தர்ப்பண-மார்ஜனம்): ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் உபதேசப்படி, இந்தத் திருநாமத்தைக் கேட்பதனால் ஒருவனின் மனம் படிப்படியாகத் தூய்மையடைகிறது. கண்ணாடியில் உள்ள தூசி அகற்றப்படுவதைப் போன்றது இது.

  • புலன்களின் மாற்றம்: மனம் தூய்மையடையும் போது, புலன்களும் தூய்மையடைகின்றன. கட்டுண்ட நிலையில் புலன்கள் தற்காலிகமான புலனுகர்ச்சியில் ஈடுபடுகின்றன; ஆனால் கிருஷ்ண உணர்வு விழிப்படையும்போது, அதே புலன்கள் பகவானின் தெய்வீக அன்புத் தொண்டில் (பக்தி) ஈடுபடுத்தப்படுகின்றன.

  • முடிவுரை: உறங்கிக் கொண்டிருக்கும் 'கிருஷ்ண பிரேமையை' (பகவான் மீதான அன்பு) மீண்டும் தட்டியெழுப்புவதற்கு இதுவே முறையான வழிமுறையாகும்.



🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண  கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம, ஹரே ராம,  ராம ராம, ஹரே ஹரே


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


ஹரே கிருஷ்ண🙏


🔆🔆🔆🔆🔆🔆🔆🔆


மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களை கீழ்க்கண்ட இணைப்பில் தொடர்பு கொள்ளவும்.





Comments

Popular posts from this blog

இராமாயணம் கதை சுருக்கம்

  இராமாயணம் கதை சுருக்கம் 🌼🌼🌼🌼🌼 🌷 ரகு குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாகத் பகவான் எடுத்த அவதாரம் ஶ்ரீராம அவதாரம் ஏகபத்தினி விரதனாக சீதாதேவியை மணந்தும், அரக்கன் ராவணனை சம்ஹாரம் செய்தும், தந்தை கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றியதும் ராமாவதாரத்தின் சிறப்பம்சங்களாகும். வைகுண்டத்தில் வாயில் காப்போராக இருந்த ஜய விஜயர்கள் சனகாதியரால் சபிக்கப்பட்டு முதல் பிறவியில் திதியின் மைந்தர்களான இரண்யாட்சகனாகவும், இரண்யகசிபாகவும் தோன்றினார்கள். இரண்யாட்சகனை வராக அவதாரம் எடுத்தும், இரண்யகசிபுவை நரசிங்க அவதாரமெடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார்.இரண்டாவது பிறவியில் இராவணனும், கும்பகர்ணனுமாக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன், தந்தவர்த்தன் என்பது மூன்றாவது பிறப்பு. இத்துடன் அவர்கள் சாபம் தீர்ந்து பரமபத வாசலுக்கு மீண்டும் திரும்பினார்கள். 🌷சூரிய குலவம்ச வழி மன்னர்களில் ரகு என்பவன் மிகவும் புகழுடன் வாழ்ந்தான். அவனுடைய மகன் அஜன். இந்த அஜனுடைய புதல்வனே தசரதன். அவன் அயோத்தியை ஆண்டு வந்தான். தசரதனுக்கு பட்டத்தரசிகளாக கோசலை, கைகேயி, சுமத்திரை என்று மூவர் இருந்தனர். ஸ்ரீம...

பகவத் கீதை 108 முக்கியமான ஸ்லோகங்கள்

  பகவத் கீதை உண்மையுருவில் 108 முக்கியமான ஸ்லோகங்கள் அத்தியாயம்   1 - 18   அத்தியாயம்   1 பதம்    1 த்ருத்ராஷ்ர   உவாச தர்ம   க்ஷேத்ரே   குரு   க்ஷேத்ரே சமவேதா   யுயுத்ஸவ : மாமகா :   பாண்டவஸ்   ச   திருதராஷ்டிரர் கூறினார்: சஞ்ஜயனே, போர் புரியும் விருப்பத்துடன் தர்ம க்ஷேத்திரமான குருக்ஷேத்திரத்தில் ஒன்று கூடிய என் மகன்களும் பாண்டுவின் மகன்களும் என்ன செய்தனர்?   அத்தியாயம்   2 பதம்    7 கார்பண்ய – தோஷோபஹத - ஸ்வபாவ : ப்ருச்சாமி   த்வாம்   தர்ம - ஸம்மூட – சேதா : யச்   ச்ரேய :   ஸ்யான்   நிஷ்சிதம்   ப்ரூஹி   தன்மே ஷிஷ்யஸ்   தே   ( அ ) ஹம்   ஷாதி   மாம்   த்வாம்   ப்ரபன் இப்போது நான் என் கடமையைப் பற்றிக் குழப்பமடைந்து, கருமித்தனமான பலவீனத்தால் என் இயல்புகளையெல்லாம் இழந்து விட்டேன். இந்நிலையில் எனக்கு நல்லது எது என்று நிச்சயமாக கூறும்படி உம்மைக் கேட்டுக் கொள்கிறேன். இப்போது உம்மிடம் சரணடைந்த சீடன் நான். அருள் கூர்...

நரசிம்ம கவசம்

நரசிம்ம கவசம் 🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁 1. ந்ருஸிம்ஹ கவசம் வக்ஷ்யே ப்ரஹ்லாதே னோதிதம் புரா ஸர்வ ரக்ஷõகரம் புண்யம் ஸர்வோ பத்ரவ நாசனம் 2. ஸர்வ ஸம்பத் கரஞ்சைவ ஸ்வர்க்க மோக்ஷப்ரதாயகம் த்யாத்வா ந்ருஸிம்ஹம் தேவேசம் ஹேம ஸிம்ஹாஸனஸ்திதம் 3. விவ்ருதாஸ்யம் த்ரினயநம் சரதிந்து ஸமப்ரபம் லக்ஷ்ம்யா லிங்கத் வாமாங்கம் விபூதி பிருபாஸிதம் 4. சதுர்புஜம் கோமளாங்கம் ஸ்வர்ணகுண்டல சோபிதம் ஒளர்வோஜ சோபிதோ ரஸ்கம் ரத்ன கேயூர முத்ரிதம் 5. தப்த காஞ்சன ஸங்காசம் பீத நிர்மல வாஸஸம் இந்திராதி ஸுரமௌளிஸ்த ஸ்புரன் மாணிக்ய தீம்திபி 6. விராஜித பத த்வந்த்வம் சங்க சக்ராதி ஹோதிபி கருத்மதாச வினயா ஸ்தூயமானம் முதான்விதம் 7. ஸ்வ ஹ்ருத மல ஸம்வாஸம் க்ருத்வாது கவசம் படேத் ந்ருஸிம்ஹோ மே சிர பாது லோக ரக்ஷõத்ம ஸம்பவ 8. ஸர்வ கோபிஸ்தம்ப வாஸ பாலம் மே ரக்ஷதுத்வனிம் ந்ருஸிம்ஹோ மே த்ருசௌ பாது ஸோம ஸூர்யாக்னி லோசன 9. ஸ்ம்ருதிம் மே பாது ந்ருஹரி முனியாய் ஸ்துதி பிரிய நாஸாம் மே ஸிம்ஹ நாஸஸ்து முகம் லக்ஷ்மீ முக ப்ரிய 10. ஸர்வ வித்யாதிப: பாது ந்ருஸிம்ஹோ ரஸனாம் மம, வக்த்ரம் பாத்விந்து வதன ஸதா ப்ரஹ்லாத வந்தித 11. ந்ருஸிம்ஹ: பாது மே கண்டம் ஸ்கந்தௌ பூபரணாந்தக்ருத்...